Thursday, March 31, 2016

மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016

மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016



காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்


ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே 
       நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 8ம் வீட்டில் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன் மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உங்களுக்கு அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் சற்று கவனடன் செயல்படுவது நல்லது. 
பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது  உத்தமம்.
சந்திராஷ்டமம் 24.04.2016 காலை 06.24 மணி முதல் 26.04.2016 மாலை 05.53 மணி வரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே 
        இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு 10ல் சுக்கிரன் லாப ஸ்தானமான 11ல் சூரியன் சஞ்சராரம் செய்வதால் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் தோன்றும் தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சனி 7இல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களால் சிறசிற மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும்  ஊதிய உயர்வுகளையும் பெற முடியும். 
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது  துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 26.04.2016 மாலை 05.53 மணி முதல் 29.04.2016 அதிகாலை 03.16 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே 
        எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், ஜென்ம ராசிக்கு 6ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் எதிலும் முன்னேற்றமான நிலையை உண்டாக்கும் அமைப்பாகும். பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். 
பரிகாரம். தட்சினா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 01.04.2016 இரவு 08.22 மணி முதல் 04.04.2016 அதிகாலை 01.14 மணி வரை. 29.04.2016 அதிகாலை 03.16 மணி முதல் 01.05.2016 காலை 09.41மணி வரை.

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே 
       கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10ல் புதன் சஞ்சாரம் செய்வதும், மாதபிற்பாதியில் சூரியனும் 10ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. 
பரிகாரம். குருப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது  மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் 04.04.2016 அதிகாலை 01.14 மணிமுதல் 06.04.2016அதிகாலை 02.46 மணி வரை.

சிம்மம்  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே 
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு 4ல் சனி செவ்வாய், 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம்,  வீடு மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் பணிகளை சிறப்புடன் செய்து பாராட்டுதல்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெற முடியும்.
பரிகாரம். சிவ வழிபாடு மேற்கொள்வது ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 06.04.2016அதிகாலை 02.46 மணி முதல்08.04.2016 அதிகாலை 02.21 மணி வரை.

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே 
      மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு 3ல் சனி செவ்வாய், 6ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, முன் கோபத்தை குறைப்பது,னல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள்.
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 08.04.2016 அதிகாலை 02.21 மணி முதல் 10.04.2016 அதிகாலை 01.55மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே 
     உயர்ந்த நிலையை அடைய கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  6&ல் சூரியன் 11ல் குரு ராகு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். அரசு வழியிலும் லாபம் கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும்.
பரிகாரம். சனி பகவானை வழிபாடு செய்வது ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 10.04.2016 அதிகாலை 01.55 மணி முதல் 12.04.2016 காலை 03.28 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே 
      தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஏழரைசனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாதபிற்பாதியில் சூரியன் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஓரளவுக்கு சுமாரான நற்பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு, குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை பயன் படுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும்.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது  சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 12.04.2016 காலை 03.28 மணி முதல் 14.04.2016 காலை 08.28 மணி வரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே 
      வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு  4ல் சூரியன் சஞ்சரிப்பதும் 12ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களை உண்டாக்கும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றத்தினை அடைந்து விட முடியும். தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களும் எதிர் பார்க்கும் உயர்வினை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும். 
பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 14.04.2016 காலை 08.28 மணி முதல் 16.04.2016 மாலை 05.17 மணி வரை

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
     தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட உங்களுக்கு 8ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும், 3ல் சூரியன், 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாகவே இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். 2,8இல் கேது ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
பரிகாரம். தட்சிணா மூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றுவது நல்லது.
சந்திராஷ்டமம் 16.04.2016 மாலை 05.17 மணி முதல் 19.04.2016 அதிகாலை 04.56 மணி வரை 

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே 
      மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு 10ல் சனி செவ்வாய் மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதையும் வித பிரச்சனைகளையும் எளிதில் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு  பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயம் ஏற்படும் காலம் என்பதால்  வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக் கூடிய காலம் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 19.04.2016 அதிகாலை 04.56 மணி முதல் 21.04.2016 மாலை 05.46 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே 
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு  மாத கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரித்தாலும் 6&ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருந்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும்.கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும்.  புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்கள் படிப்படியாக குறையும்.உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிவன் முருகன் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 21.04.2016 மாலை 05.46 மணி முதல் 24.04.2016 காலை 06.24 மணி வரை

சுப முகூர்த்த நாட்கள்

03.04.2016 பங்குனி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசிதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை.

04.04.2016 பங்குனி 22 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசிதிதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை.

11.04.2016 பங்குனி 29 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்திதிதி ரோகிணி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

21.04.2016 சித்திரை 08 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்தி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

25.04.2016 சித்திரை 12 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியை திதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுனம் இலக்கினம். தேய்பிறை.

29.04.2016 சித்திரை 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை.
.



Vaara Rasi palan |Murugubalamurugan: Apr 3 to Apr 09, 2016 | JV TV

Saturday, March 26, 2016

Jothida Thagaval | Episode 4

வார ராசிப்பலன் மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை 2016





காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்




ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வார ராசிப்பலன்  மார்ச் 27 முதல்  ஏப்ரல் 2   வரை   2016


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் குரு, 11ல் சுக்கிரன் கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 8ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத உதவிகள் சில வற்றை பெற முடியும். பல பொது நலக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.  பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் அதன் மூலம் லாபத்தை அடைய முடியும். அசையும் அசையா சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலப் பலனை அடைவீர்கள். புத்திர வழியில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 27,2
சந்திராஷ்டமம் 27.03.2016 இரவு 12.22 மணி முதல் 30.03.2016 பகல் 11.48 மணி வரை.


ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக வியங்கும் ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன் புதன், 10ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சினைகள் யாவும் சற்றே குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமத விலை உண்டாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் 8ம் வீட்டிற்கு குரு பார்வை இருப்பதால் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்கள் தடைபட்ட உயர்வுகக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். முருகப் பொருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

வெற்றிதரும் நாட்கள் 27,28,29
சந்திராஷ்டமம் 30.03.2016 பகல் 11.48 மணி முதல் 01.04.2016 இரவு 08.22 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் சனி, செவ்வாய் 10ல் சூரியன் புதன், சஞ்சாரம் செய்வதால் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெற கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். 7ம் வீட்டிட குரு பார்வை செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். 

வெற்றிதரும் நாட்கள் 28,29,30,31,1
சந்திராஷ்டமம் 01.04.2016 இரவு 08.22 மணி முதல் 04.04.2016 அதிகாலை 01.14 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட  கடக ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 9ல் சூரியன் புதன், சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. 2ல் ராகு 8ல் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை சோர்வு போன்றவை உண்டாகும். தேவையற்ற மருத்துவ செலவுகளும் உண்டாகும். 6,8ம் வீடுகளுக்கு குரு பார்வை இருப்பதால் பெரிய கெடுதல்கள் ஏற்படாது, குடும்பத்திலுள்ளவர்களை சற்ற அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொண்டே லாபத்தினைப் பெற முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் வேலைப் பளு அதிகரிக்கும். துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 30,31,1,2

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4ல் சனி, செவ்வாய் 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். சர்ப கிரகங்களான ராகு கேது 1,7&ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய நேரம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய வரும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை  ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும் என்றாலும் குரு பார்வை 7ம் வீட்டிற்கு இருப்பதால் எதிர்பார்த்த லாபத்தினையும் பெற முடியும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.  

வெற்றிதரும் நாட்கள் 27,2

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சனி, செவ்வாய் 6ல் கேது சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் தாராளமாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் 6,8ம் வீடுகளுக்கு குரு பார்வையிருப்பதால் அதிக மருத்துவச் செலவுகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலைச்சல்களும் வேலைப் பளுவும் குறையும். சிவ பொருமானை வபழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 28,29,30

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல்  சூரியன், புதன் 11ல் குரு ராகு கேது சஞ்சாரம் செய்வதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். ஏழுரைச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல் பட்டால் லாபத்தை அடைய முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 27,30,31,1

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரை சனி தொடர்ந்தாலும் இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4ல்  சுக்கிரன், 5ல் புதன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் பொருளாதார நிலை ஒரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது மனநிம்மதியைத் தரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம்.முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 28,29,30,2

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4ல்  புதன் 9ல் குரு ராகு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 27,30,31,1

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன்  புதன், 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம்செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் ªதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். குரு பார்வை 2,4ஆம் வீடுகளுக்கு இருப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலங்கள் உண்டாகும். பொன், பொருள் சேரும். உத்தியோகஸ்தர்கள் மங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர்.  தினமும் விநாயகரை வழிபடுவது துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 27,28,29,30

கும்பம்  அவிட்டம் 3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 7ல் குரு 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை ஒரளவுக்கு நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் இல்லாமல் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை  வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமலிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சற்று மந்தமான  நிலையில் நடைபெற்றாலும் லாபம் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல் பட்டால் மட்டுமே லாபத்தினை அடைய முடியும்.  தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 28,29,30,31,1

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் வியங்கும் மீன  ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 6ல் ராகு சஞ்சாரம் எதையும் ஓரளவுக்கு சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.  என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் எதையும் சமாளித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் ஓரளவுக்கு எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 30,31,1,2
சந்திராஷ்டமம் 25.03.2016 பகல் 11.37 மணி முதல் 27.03.2016 இரவு 12.22 மணி வரை.

Varamey Jothidam | Weekly Astrology: Mar 27 to Apr 02, 2016 | JV TV

Wednesday, March 23, 2016

Saturday, March 19, 2016

வார ராசிப்பலன் மார்ச் 20 முதல் 20 வரை 2016



காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்


வார ராசிப்பலன்   மார்ச் 20 முதல்  20   வரை   2016

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
25.03.2016 பங்குனி 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியைதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை.

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 8ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் 12ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஆதாயங்களும் உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 23,24,25,26

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 11 சூரியன் புதன் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் நிலையும் சுறுசுறுப்புடன் அமையும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும், பொன், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாகக் செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பல பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல் பட்டால் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கடன்கள் குறைத்து கண்ணியமான வாழ்க்கை அமையும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 20,25,26.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் 10ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் செல்வம், செல்வாக்கு உயரும். தாராள தன வரவுகளைக் கொடுக்கும். குடும்பத்தில் சிறப்பான ஒற்றுமை உண்டாகும். பொருளாதார மேன்மைகள் சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகளையும் வாங்க முடியும்.  பூர்வீக சொத்துகளாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு மணமாகக் கூடிய வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேரும். தொழில் வியாபார செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

வெற்றிதரும் நாட்கள் 20,21,22.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் சூரியன் புதன், சஞ்சரிப்பதும் 2ல் குரு சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும்.  நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களிடமிருந்தும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்ற மடைவார்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 20,23,24,25.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் 7ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதையும் சமாளித்து விட முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால்  ஒரளவுக்கு லாபம் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்களால் சிறுசிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.  உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகி வீண் அலைச்சல்கள் ஏற்படும். சனிபகவானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 20,21,22,25,26

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் 6ல் கேது சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். தடைப்பட்டுக்கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.  உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வெளிவட்டாரம் விரிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.


வெற்றிதரும் நாட்கள் 20,23,24,25.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன் புதன் சஞ்சரிப்பதும் 11ல் குரு ராகு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உங்களுக்கு ஏழுரைச் சனியில் பாதச் சனி நடைபெறுவதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 20,21,22,25,26.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 5ல் சூரியன் புதன் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமான அமைப்பு என்பதால் தொழில் வியாபார  ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.  பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையினை அடைய முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். உடன் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். முருகப் பெருமா9னை வழிபபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 20,21,22,23,24,25.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் சுக்கிரன் 4ல் புதன், சஞ்சரிப்பதும் 9ல் குரு சஞ்சாரம் செய்தும் சற்று சாதகமான அமைப்பு என்றாலும் ஏழுரைச் சனியில் விரயச்சனியும் தொடருவதால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். குரு  பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப் பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். விச பெருமானை வழிபாடு செய்யவும்.
வெற்றிதரும் நாட்கள் 23,24,25,26.

சந்திராஷ்டமம் 18.03.2016 அதிகாலை 02.20 முதல் 20.03.2016 பகல் 11.35 மணி மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 11ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்தும் அற்புதமான அமைப்பாகும். இதனால் கடந்த காலப் பிரச்சினைகள் குறையும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 25,26-.

சந்திராஷ்டமம் 20.03.2016 பகல் 11.35 மணி முதல் 22.03.2016 இரவு 10.59 மணி மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 10ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் 7ல் குரு சஞ்சாரம் செய்தும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் பட்டால் எதிர் பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் அதிகரித்தாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வர வேண்டிய வாய்ப்புகள் சிறுசிறு தடைகளுக்குப்பின் வந்து சேரும். பணவரவுகளில் ஏற்றஇறக்கமான பலன்களே உண்டாகும் என்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 20,21,22.

சந்திராஷ்டமம் 22.03.2016 இரவு 10.59 மணி மணி முதல் 25.03.2016 பகல் 11.37 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பது  ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்பதால்  தொழில் வியாபார ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேர்ந்தாலும்  எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். ஜென்ம ராசியிலேயே சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும்.  எனவே ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச்  செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியிருப்பதால். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 20,21,22,23,24
சந்திராஷ்டமம் 25.03.2016 பகல் 11.37 மணி முதல் 27.03.2016 இரவு 12.22 மணி வரை.

வார ராசி பலன் முருகுபாலமுருகன்: 20 - 26, March 2016 | JV TV

வார ராசி பலன் 

Wednesday, March 16, 2016

திருமண தடை நீக்கும் திருத்தலங்கள் திருநாகேஸ்வரம்

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

 தினமும்   விஜய் டிவியில் 
காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்


ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


திருமண தடை நீக்கும் திருத்தலங்கள்
திருநாகேஸ்வரம்
     
கோயில் நகரமான கும்பகோணத்தில் அமைந்துள்ள திருக்கோயில் திருநாகேஸ்வரமாகும். ஆதிசேஷன், சூரியன் வழிப்பட்ட தலமாகும். ஆதிசேஷன் மகாசிவராத்திரியன்று குடந்தைக்கு வந்து அச்சுவத்த தீர்த்ததில் நீராடி இறைவனையும், இறைவியையும் முதல் கால பூஜை நேரத்தில் வழிபட்டு அருர் பெற்றதால் நாகேஸ்வரம் என்றும் அவன் மூழ்கி எழுந்த தீர்த்தம் நாக தீர்த்தம் என்றும் வழங்குகிறது. முன் கோபுர வாயில் தாண்டியதும் இடது புறத்தில் உள்ள நாக தீர்த்தம் சிங்க வாயில் கொண்டுள்ளதால் சிங்க தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. திருமண தடை உள்ளவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள் திருவாதிரை நட்சத்திர நாளில் இத்தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டால் நாக தோஷம் நிவர்த்தியாகி சிறப்பான மண வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

      ஒன்பது நவக்கிரகங்களில் ஒன்றான தலமாகும். இத்தலத்தினை வழிபடும் நாளன்று காலையில் குடந்தைக் கீழ்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திருப்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது சிறப்பாகும். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ராகுபகவானைக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறுவது சிறப்பாகும். இத்திருத்தலத்திற்கு சண்பகவனம், கிரிகின்னி கைவனம் என வேறு பெயர்களும் உண்டு. சேக்கிழார் விரும்பித் திருப்பணி செய்த அற்புதத் தலமாகும்.

திருப்பெயர்கள்

சிவபெருமான்   -நாகேஸ்வரர், நாக நாதர் சண்பகா ரண்யேசுவரர்
அம்பாள்           - கிரிகுஜாம்பிகை, குன்றமா முலையம்மை
தலமரம்          -சண்பகம்
தீர்த்தம்            -சூரிய தீர்த்தம்
தல விநாயகர் -செண்பக விநாயகர்
     
அப்பர், சம்மந்தர், சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகும்

கோயிலின் அமைப்பு
     
இத்தலத்தின் பிரதான வாயில் கிழக்கு, கோபுரம் 5 நிலைகளை கொண்டது. திருத்த கணபதி, நந்தி, சூரிய தீர்த்தம், நூற்றுக்கால் மண்டபம், சூரிய தீர்த்தக்கரையில் மழுப் பொறுத்த விநாயகர் சந்நிதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராசா உருவமுள்ளது. சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்களும் உள்ளது. நடராச சபையும் அதன் எதிரே நால்வர் சந்நிதியும் உள்ளது. இத்தலத்தில் அம்பாள் சந்நிதிகள் இரண்டு உள்ளன. பிறையணி நுதலான் சந்நிதி சுவாமி சந்திதிக்கு அருகிலுள்ளது. மற்றொரு சந்நிதி தனிக்கோயிலாக அமைந்துள்ளது. கிரிகுஜாம்பிகை கதை உருவத்திற்கு தை மாதத்தில் புணுகு சட்டம் சார்த்தப்படுகிறது. கண்டராதித்த சோழன் இத்தலத்தினை கட்டியதாக கருதப்படுகிறது.

திருவிழாக்கள்

      இத்தலத்தில் கார்த்திகை பெரு விழா, வைகாசி மாதத்தில் சேக்கிழார் குருபூஜை போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.

வழித்தடம்
     
சோழ நாட்டுத் தென்கரைத்தலமாகும். கும்ப கோணத்தித்திலிருந்தும், மற்ற நகரங்களிலிருந்தும் பேருந்துகள் நிறைய செல்கின்றன.

Saturday, March 12, 2016

வார ராசிப்பலன் மார்ச் 13 முதல் 19 வரை 2016

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  வரும் 14.3.2016 திங்கள் முதல் தினமும்
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்


வார ராசிப்பலன்   மார்ச் 13 முதல்  19   வரை   2016

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
18.03.2016 பங்குனி 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியை குரு பார்வை செய்வதும், லாப ஸ்தானமான 11ல் புதன் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நவீன பொருட் சேர்க்கைகள் அமையும். உற்றார் உறவினர்களின் வரவுகள் மகிழ்ச்சியை  அளிக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வேலையாட்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 13,16,17.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியை குரு பார்வை செய்வதும், லாப ஸ்தானமான 11ல் புதன் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் உடல் நிலை அற்புதமாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதாரம் உயர்வடையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் நல்ல நிலையில் நடைபெற்று லாபம் பெருகும். விரோதிகளும் நண்பர்களாகச் செயல்படுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களும் சாதகமாக மாறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் அளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 14,15,18,19.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதும் திங்கட் கிழமை முதல் சூரியன் ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மைகளும் கூட்டாளிகளால் லாபங்களும் உண்டாகும். புதிய நவீன கருவிகளை வாங்கிப் போடுவீர்கள். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் ஏற்படும். பணம் தாராளமாக வருவதால் கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றிக் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற்று முன்னேற முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.


வெற்றிதரும் நாட்கள் 13,16,17.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 8ல் புதன் சுக்கிரன் சஞ்சரிப்பதும் தன ஸ்தானமான 2ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில்  அதிக கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிரையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் சற்று மந்த நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் நிறைய போட்டிகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பொறுப்பேற்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ளலாம். அம்மன் வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 13,14,15,18,19.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதும் களத்திர ஸ்தானமான 7ல் புதன் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சுமாரான அமைப்பு என்பதால் எதிர்பார்க்கும் நற்பலன்களை சிறுசிறு தடைகளுக்குப் பின் பெறுவீர்கள். கடந்த கால பிரச்சினைகள் யாவும் சற்றே விலகி எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவிக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு, வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்தே லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற சற்று தாமதப்படும். முருகப் பெருமானை வழ்பாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 14,15,16,17.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதும் ருணரோக ஸ்தானமான 6ல் கேது சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். சிலருக்கு சொந்த வீடு கார் போன்றவை வாங்கும் வாய்ப்பு கிட்டும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உங்களுக்குள்ள கடன்கள் சற்று குறையும். பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகள் சாதகமாக அமைவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

வெற்றிதரும் நாட்கள் 16,17,18,19,
சந்திராஷ்டமம் 11.03.2016 பகல் 03.41 மணி முதல் 13.03.2016 மாலை 04.39 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ல் புதன் சுக்கிரன் சஞ்சரிப்பதும் திங்கள் முதல் ருணரோக ஸ்தானமான 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் சிறப்படையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெற முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தின் மகிழ்ச்சி சிறப்பாகவே இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல அனுகூலங்களை பெற முடியும்.  சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 13,18,19.
சந்திராஷ்டமம் 13.03.2016 மாலை 04.39 மணி முதல் 15.03.2016 இரவு 07.58 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் சனி செவ்வாயும், 4ல் புதனும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.  குடும்பத்திலுள்ளவர்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெற முடியும். பணம் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தேவையற்ற இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும்.முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 13,14,15.
சந்திராஷ்டமம் 15.03.2016 இரவு 07.58 மணி முதல் 18.03.2016 அதிகாலை 02.20 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் பாக்கிய ஸ்தானமான 9ல் குரு சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில்தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு சாதசமாகச் செயல்படுவார்கள். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடை விலகி நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். போட்டிகள் குறையும். பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது

வெற்றிதரும் நாட்கள் 14,15,16,17.
சந்திராஷ்டமம் 18.03.2016 அதிகாலை 02.20 முதல் 20.03.2016 பகல் 11.35 மணி மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11 செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் திங்கட்கிழமை முதல் முயற்சி ஸ்தானமான 3ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால்  இக்காலங்களில் பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தடையின்றி மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதனால் அனுகூலப்பலனைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 16,17,18,19.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் புதன் சுக்கிரன் சஞ்சரிப்பதும் ஜீவன ஸ்தானமான 10 செவ்வாய், சனி சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு நற்பலனை தரும் அமைப்பு என்பதால்  பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் அடிக்கடி மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள் என்றாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகி அபிவிருத்திகள் குறையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். அலைச்சல், டென்ஷன்களும் அதிகரிக்கும். அம்மன் வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 13,18,19.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் குரு சஞ்சரிப்பதும் விரய ஸ்தானமான 12ல் சுக்கிரன் புதன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால்  உடல் ஆரோக்கியத்தில்  கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்வர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பமால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் தோன்றும். தொழில்  வியாபாரம் செய்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் சற்று கவனமுடனிருப்பது உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 14,15.