Saturday, April 30, 2016

Vaara Jothidam | Weekly Astrology: 01 to 07 May, 2016 | JV TV

வார ராசிப்பலன் மே 1 முதல் 7 வரை 2016



காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற  நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )

வார ராசிப்பலன்   மே 1 முதல் 7   வரை   2016


ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

02.05.2016 சித்திரை 19 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுனம் இலக்கினம். தேய்பிறை.

04.05.2016 சித்திரை 21 ஆம் தேதி புதன்கிழமை துவாதசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுனம் இலக்கினம். தேய்பிறை. 

05.05.2016 சித்திரை 22 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை. 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசியில் சூரியன் 8ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்வர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது. சிவபெருமானை செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  1,2,3,6,7.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை  அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 12ல் சூரியன் புதன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும்.  பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுப காரிய முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருக்கும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகதிதிலிருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 1,2,3,4,5,7

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன் புதன் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். குருபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 4,5,6,7.
சந்திராஷ்டமம்  29.04.2016 அதிகாலை 05.46 மணி முதல் 01.05.2016 மதியம் 12.11மணி வரை.


கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன் புதன் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். ராகுகேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  6,7.
சந்திராஷ்டமம் 01.05.2016 காலை 09.41மணி மணி முதல் 03.05.2016 மதியம் 12.49 வரை.


சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்பு, பண்பு, மரியாதை,தெய்வ பக்தி உடையவராகவும் சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் சூரியன் புதன் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம்ப் செயல்பட முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும்.  விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். ராகுகேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  1,2,7.
சந்திராஷ்டமம் 03.05.2016 மதியம் 12.49 மணி முதல் 05.05.2016 பகல் 01.17 மணி வரை.


கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும், 8ல் சூரியன் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண்வாக்குவாதங்கள் உண்டாகும் குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளித்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளைனயும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் 1,2,3,4.
சந்திராஷ்டமம் 05.05.2016 பகல் 01.17 மணி முதல் 07.05.2016 மதியம் 12.41 மணி வரை.


துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 7ல் புதன் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும்.  பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால்  தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.


வெற்றிதரும் நாட்கள்  3,4,5,6.
சந்திராஷ்டமம் 07.05.2016 மதியம் 12.41 மணி முதல் 09.05.2016 மதியம் 01.04 மணி வரை.


விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன்  சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது மூலம் அனுகூலங்கள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும்.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 1,5,6,7.


தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 5ல் புதன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.


வெற்றிதரும் நாட்கள் 1,2,3,7.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் புதன் சுக்கிரன் 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்   1,3,4,5.


கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க தவறாத பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் 7ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி  கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடையவார்கள். சிலருக்கு சொந்த வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்திலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்   1,2,3,6,7.


மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன  ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் புதன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துகள் சேரும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் சிறப்பான லாபம் அமையும். கடன்கள் யாவும் குறையும். உடல் நிலையில் சற்றே கவனம் செலுத்தவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  1,3,4,5,7.

இசை துறையில் சாதிக்கும் யோகம்

ww

Thursday, April 28, 2016

மே மாத ராசிப்பலன் -சுபமூகூர்த்தம். 2016

 மாபெரும் வெற்றி - 16 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

2011 ஜுலையில் தொடங்கிய எனது வலை பக்கத்தில் ஜோதிட செய்திகளை மட்டும் வெளியிட்டு வருகிறேன்.தற்போது 1000 பதிவுகளை அளித்துள்ளேன். எனது வலை பக்கத்திற்கு தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 16 லட்சத்திற்கும் மேலான அன்பு வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். எனது பதிவுகளுக்கு மதிப்பளிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மேலும் பல சோதிட செய்திகளை தர காத்திருக்கிறேன். ஆதலால் எனது வலை பக்கத்திற்கு தொடர்ந்து வருகை தரத் தவறாதீர்கள்.

                                                                       

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற  நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )


ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


மே மாத ராசிப்பலன் -சுபமூகூர்த்தம். 2016




மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசியில் சூரியன் 8ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயங்களிலும் பூர்வீக சொத்துக்களாலும் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து  நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
பரிகாரம். விநாயகரை வழிபடுவது, சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, பரிகாரங்களை செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 21.05.2016 மதியம் 12.30 மணி முதல் 23.05.2016 இரவு 11.36 மணி வரை.




ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7&ல் சனி செவ்வாயும்,   விரய ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் போட்டி பெறாமைகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து சென்றால்  சற்று நிம்மதியுடன் பணி புரிய முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது, சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 23.05.2016 இரவு 11.36 மணி முதல் 26.05.2016 காலை 08.52 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6ல் சனி செவ்வாயும் 11ல் சுக்கிரன் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் இது வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். கடன்கள் சற்று குறையும்.
பரிகாரம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 26.05.2016 காலை 08.52 மணி முதல் 28.05.2016 மாலை 04.00 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 18ம் தேதி குரு வக்ர நிவர்த்தியடைவதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க பெறும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். 
பரிகாரம். சர்ப கிரகங்களான ராகு கேதுவுக்கு பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 01.05.2016 காலை 09.41மணி மணி முதல் 03.05.2016 மதியம் 12.49 வரை.
மற்றும் 28.05.2016 மாலை 04.00 மணி முதல் 30.05.2016 இரவு 08.34 மணி வரை.

சிம்மம்;  மகம், பூரம், உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு   மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், ஜென்ம ராசிக்கு 4&ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சுமாரான அமைப்பாகும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை குறைத்து கொள்ள முடியும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு அனுகூலமளிக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சற்றே உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதால் லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். 
பரிகாரம். சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 03.05.2016 மதியம் 12.49 மணி முதல் 05.05.2016 பகல் 01.17 மணி வரை.
மற்றும் 30.05.2016 இரவு 08.34 மணி முதல் 01.06.2016 இரவு 10.37  மணி வரை.

கன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம  ராசிக்கு 8ல் சூரியன் சுக்கிரன் 12ல் குரு ராகு சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் சுமாராக தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் கடன்கள் சற்று குறையும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் உண்டாகும். சிலருக்கு வீடு வாகனம், போன்றவற்றால் வீண் விரயம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. 
சந்திராஷ்டமம் 05.05.2016 பகல் 01.17 மணி முதல் 07.05.2016 மதியம் 12.41 மணி வரை.

துலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 
2ல் சனி செவ்வாய், 7ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ல் குரு ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். குடும்ப தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்றாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மன நிம்மதியளிக்கும்.தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும்.
பரிகாரம். சனி பகவானை வழிபடுவது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 07.05.2016 மதியம் 12.41 மணி முதல் 09.05.2016 மதியம் 01.04 மணி வரை




விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு   ஏழரை சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6&ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து முன்னேற்றமடைவீர்கள். உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் தான் வெற்றி கிட்டும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான லாபம் கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். 
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 09.05.2016 மதியம் 01.04 மணி முதல் 11.05.2016 மதியம் 04.25 மணி வரை 

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு  9ல் குரு 3ல் கேது சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
பரிகாரம். தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 11.05.2016 மதியம் 04.25 மணி முதல் 13.05.2016 இரவு 11.57 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட உங்களுக்கு  சுக ஸ்தானமான 4ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு  என்றாலும் 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். தொழிலாளர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.
பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது, பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 13.05.2016 இரவு 11.57 மணி முதல் 16.05.2016 பகல் 11.06 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7ல் வக்ரகதியில் சஞ்சரிக்கும் குரு 18ம் தேதி முதல் நிவர்த்தியடைவதும் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார  நிலை தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் வியாபார ரிதியாக மேற்கொள்ளும் பயணங்களால்  அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். 
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 16.05.2016 பகல் 11.06 மணி முதல் 18.05.2016 இரவு 11.58 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு 6ல் ராகு சஞ்சரிப்பதும், மாதபிற்பாதியில் 3ல் சூரியன்  சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல் பட்டால் லாபத்தினைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் சில தடைகளுக்கு பின் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தர கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். 
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 18.05.2016 இரவு 11.58 மணி முதல் 21.05.2016 மதியம் 12.30 மணி வரை.

சுபமூகூர்த்தம்.
02.05.2016 சித்திரை 19ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுனம் இலக்கினம். தேய்பிறை.

04.05.2016 சித்திரை 21ஆம் தேதி புதன்கிழமை துவாதசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை.

05.05.2016 சித்திரை 22ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை.


08.05.2016 சித்திரை 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துதியைதிதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

09.05.2016 சித்திரை 26ஆம் தேதி திங்கட்கிழமை திருதியைதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

11.05.2016 சித்திரை 28ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமிதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

12.05.2016 சித்திரை 29ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டிதிதி பூச நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். 

16.05.2016 வைகாசி 03ஆம் தேதி திங்கட்கிழமை தசமிதிதி உத்திர நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

19.05.2016 வைகாசி 06ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

26.05.2016 வைகாசி 13ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமிதிதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை.

6ஆம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்

மாபெரும் வெற்றி - 16 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

2011 ஜுலையில் தொடங்கிய எனது வலை பக்கத்தில் ஜோதிட செய்திகளை மட்டும் வெளியிட்டு வருகிறேன்.தற்போது 1000 பதிவுகளை அளித்துள்ளேன். எனது வலை பக்கத்திற்கு தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 16 லட்சத்திற்கும் மேலான அன்பு வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். எனது பதிவுகளுக்கு மதிப்பளிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மேலும் பல சோதிட செய்திகளை தர காத்திருக்கிறேன். ஆதலால் எனது வலை பக்கத்திற்கு தொடர்ந்து வருகை தரத் தவறாதீர்கள்.

                                                                       

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற  நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )


ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


6ஆம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்
                                                   
வாழ்வில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாகிவிடக் கூடாது. விரோதியை விட எதிரியே மேல் என்பார்கள். நண்பர்களை கூட தள்ளி வைத்து பார்க்கலாம். ஆனால் விரோதியையும், எதிரியையும் நம் பார்வையிலேயே வைத்திருப்பது தான் நல்லது. அப்பொழுது தான் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் ஒர் எதிரி இருக்கத் தான் செய்வான். சினிமாவில் ஹீரோ மட்டும் இருந்தால் அவன் எதனால் ஹீரோ என்று புரியாது. அதுவே உடன் ஒரு வில்லன் இருந்தால் தான் அந்த ஹீரோவின் பலம் என்னவென்று மக்களுக்கு புரியும். நம்மை சுற்றி எல்லோருமே நல்லவர்களாக இருந்து விட்டால்  நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். நம் வாழ்வில் எதிரிகளும் விரோதிகளும் இருப்பதே ஆரோக்கியமான விஷயம்.
அப்பொழுது தான் போட்டிகளும் பொறாமைகளும் வளரும். எந்த விதத்தில் திட்டம் தீட்டினால் சரியான பாதையில் செல்ல முடியும். வாழ்வில் உயர்வடைய முடியும். எதிரிகளை வெல்லும் ஆயுதம் எது என்பதை நம்மால் நன்றாக உணர முடியும் நன்மையும் தீமையும் பிற தர வாரா என்பார்கள். எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றலும் வலிமையும், நாம் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து உருவாவதே.
ஆனால் சிலர் சந்தோஷம் வந்தால் துள்ளி குதிப்பார்கள். அதுவே பிரச்சனை என்று ஒன்று வந்து விட்டால் அதற்கு யார் காரணமோ அவர்களை நிந்திப்பார்கள். அதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி என்று ஆராயாமல் பிரச்சனை செய்தவர்களை பழித்து என்ன பலன், இன்றே வாழ்க்கை முடிந்துவிட்டதை போல சோகத்தில் மூழ்கி விடுவார்கள். இப்படி சோதனை மேல் சோதனைகளை சந்திப்பவர்கள் தங்களுடைய ஜெனன ஜாதகத்தை நல்ல ஜோதிடராக காண்பித்து ஏன் என்னை மட்டும் இந்த எதிரிகள் பாடாய் படுத்துகிறார்கள். எனக்கு இந்த அளவில் எதிர்ப்புகள் உருவாவதற்கு காரணம் என்ன? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல மற்றவர்களிடம் வளைந்து கொடுத்து வாழும் பண்பை வளர்ந்து கொள்ள வேண்டும்.
ஜோதிட ரீதியாக எதிர்ப்புகள் அதிகம் யாருக்கு ஏற்படுகிறது என ஆராய்ந்தோமானால் ஜென்ம லக்னத்திற்கு 6ஆம் அதிபதி பலம் பெற்று லக்னாதிபதி பலம் இழந்து காணப்பட்டால் நிறைய எதிர்ப்புகளையும் எதிரிகளையும் சந்திக்க நேரிடுகிறது. 6ஆம் இடம் தான் ஒருவரது வாழ்வில் ஏற்படக் கூடிய எதிர்ப்பு பற்றியும் அது யார் யாரால் உண்டாகும் என்பது பற்றியும் அறிய உதவுகிறது. 6ஆம் அதிபதி பலம் பெற்று லக்னாதிபதியும் பலம் பெற்றிருந்தாலும் 6ஆம் வீடு உபஜெய ஸ்தானம் என்பதால் 6ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் சிறப்பாக இருக்கும். 6ம் வீட்டிற்கு குரு பார்வை இருந்தால் எதிர்ப்புகள் விலகி ஒடும்.
அதுவே 6ம் அதிபதி பலமிழந்திருந்து 6ஆம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தால் எதிரிகளை சமாளிப்பதற்கே வாழ்வில் நிறைய நாட்களை செலவிட வேண்டியிருக்கும். ஜென்ம லக்னாதிபதி பலமிழந்து  6ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் 6ஆம் வீட்டில் அமைந்திருந்தாலும் அவருக்கு எதிர்ப்பு வெளியிலிருந்து வரத் தேவையில்லை. அவர் செய்யும் செயல்களால் அவருக்கு அவரே  எதிரியாக இருந்து முன்னேற்ற தடைகளை ஏற்படுத்தி கொள்வார்.
ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் அதிபதி பலம் இழந்து 6ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலும் 6ஆம் அதிபதியின் வீட்டில் இருந்தாலும் குடும்பத்திலுள்ளவர்களாலேயே எதிர்ப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலால் எதிர்ப்புகள், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகளால் வீண் விரோதங்கள் ஏற்படும்.
     3ம் அதிபதி பலமிழந்து 6ம் அதிபதியுடன் இணைந்தோ 6ம் வீட்டிலோ அமையப் பெற்றால் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுடன் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பலம் இழந்த செவ்வாய் 3,6க்கு அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றால் நிச்சயமாக உடன்பிறப்புகளின் எதிர்ப்பை பெறுவார். உடன் பிறந்தவர்களே இல்லை என்றாலும் பங்காளிகளுடனாவது பகைமை ஏற்பட்டு எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
     4ஆம் அதிபதி பலமிழந்து 6ஆம் அதிபதியுடன் இணைந்தோ, 6ஆம் வீட்டிலோ அமையப் பெற்றால் நெருங்கிய நண்பர்களே எதிரிகளாவார்கள். உடன் பலமிழந்த சந்திரனும் சேர்க்கைப் பெற்றால் தாய் மற்றும் தாய் வழியில் உள்ள உறவுகள் அனைத்தும் எதிராகவே செயல்படும்.
     ஜென்ம லக்னத்திற்கு 5ஆம் அதிபதி பலமிழந்து 6ஆம் வீட்டில் அமைந்தாலும் 6ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலும் பெற்ற பிள்ளைகளே எதிரிகளாக மாறுவார்கள்.
     களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டை கூட்டுத் தொழில் ஸ்தானம் என்றும் கூறுவர். 7ஆம் அதிபதி 6ஆம் அதிபதியுடன் இணைந்தோ 6ஆம் வீட்டில் அமைந்தோ இருந்தால் கைபிடித்த மனைவியே (கணவனே) எதிரியாக மாறுவாள். உடன் சுக்கிரன் இருந்தால் மண வாழ்க்கையே நரகமாகிவிடும். அளவிற்கு மனைவி மற்றும் மனைவி வழி உறவுகள் எதிர்ப்பாக மாறும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளே எதிரிகளாக மாறுவார்கள்.
     தந்தை ஸ்தானமான 9ஆம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் 6ஆம் அதிபதியின்  வீட்டில் இருந்தாலும் தந்தையிடமே பகைமை ஏற்படும். தந்தை வழி உறவிகளிடமும் சுமூகமான நிலை இருக்காது. அதிலும் பலமிழந்த 6,9க்கு அதிபதி களுடன் தந்ததை காரகன் சூரியனும் இணைந்திருந்தால் கண்டிப்பாக தந்தையே அந்த ஜாதகருக்கு விரோதியாக மாறுவார்.
     தொழில் ஸ்தானமான 10ஆம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6ல் இருந்தாலும்  6ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் செய்யும் தொழிலில் எதிர்ப்பு, தொழிலாளர்களிடம் பகைமை உண்டாகும். உத்தியோகஸ்தர்களாக  இருந்தால் சக ஊழியர்களின் எதிர்ப்பிற்கும் வீண் பழி சொற்களுக்கும் ஆளாக நேரிட்டு மனநிம்மதி குறையும். ஏன் வேலைக்கு செல்கிறோம் என்ற அளவிற்கு வெறுப்பு உண்டாகும்.
     அது போல 11ஆம் அதிபதி பலமிழந்து 6ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் 6ஆம் வீட்டில் இருந்தாலும் மூத்த உடன் பிறப்புகளுடன் பகை, நெருங்கிய உறவினர்களின் எதிர்ப்பு போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக ஜெனன ஜாதகத்தில் எந்த வீட்டின் கிரகம் பலம் இழந்து அந்த வீட்டின் அதிபதி 6ஆம் வீட்டின் அதிபதியின் சேர்க்கைப் பெற்றோ, 6ஆம் வீட்டில் அமையப் பெற்றோ இருந்தால் அந்த வீட்டின் காரகத்துவத்திற்குரியவர்களால் வாழ்நாளில் நிறைய எதிர்ப்புகள், பகைமை, பிரச்சனைகள் உண்டாகும் .

Saturday, April 23, 2016

வார ராசிப்பலன் ஏப்ரல் 24 முதல் 30 வரை 2016



காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )

வார ராசிப்பலன்  ஏப்ரல்  24  முதல் 30  வரை  2016

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com




இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

25.04.2016 சித்திரை 12 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியை திதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுனம் இலக்கினம். தேய்பிறை.

29.04.2016 சித்திரை 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை.

மேஷம்  அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
தைரியமும் அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசியில் சூரியன் 8ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்ற கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவல செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர் நீச்சல் போட வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். இந்த வாரம் சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 29,30
சந்திராஷ்டமம் 24.04.2016 காலை 06.24 மணி முதல் 26.04.2016 மாலை 05.53 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழிகளாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 12ல் சூரியன் புதன் 25ம் தேதி முதல் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த வாரம் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 24,25,26.
சந்திராஷ்டமம் 26.04.2016 மாலை 05.53 மணி முதல் 29.04.2016 அதிகாலை 03.16 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
தன்னுடைய  ரசிக்கும் படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன் புதன் 25ம் தேதி முதல் சுக்கிரன் 11ல் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 24,25,26,27,28.
சந்திராஷ்டமம் 29.04.2016 அதிகாலை 03.16 மணி முதல் 01.05.2016 காலை 09.41மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன் புதன் 25ம் தேதி முதல் சுக்கிரன்  10ல் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை உண்டாகும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். துர்கைஅம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 27,28,29,30.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் சூரியன் புதன் 25ம் தேதி முதல் 9ல் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.  அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்க்கொள்வீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.  கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 29,30.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும், 8ல் சூரியன் 25ம் தேதி முதல் 8ல் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் எதிலும் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைக்கலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களின்றி சமாளிக்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். முருகப்பொருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 24,25,26.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 7ல் புதன் 25ம் தேதி முதல் சுக்கிரன் 7ல்  சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வீடு மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதையும் சிறப்புடன் செய்து பாராட்டுதல்களை பெற முடியும். சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 27,28

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன்  சஞ்சாரம் செய்வதால் எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை  அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்து நல்லது. தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பெருகும். முருகப் பெருமானை வழிபாடு செய்யவும்.

வெற்றிதரும் நாட்கள் 24,25,26,29,30.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 5ல் புதன், 25ம் தேதி முதல் 5ல்  சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்கள் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். கேது 3ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள். சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 27,28.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் புதன் 11ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் 25ம் தேதி முதல் 4ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர் பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கனைப் பெற முடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 24,25,26,29,30. 

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகினாலும் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத குணம் கொண்ட கும்ப ராசி நேயர்களே 3ல் சூரியன் 7ல் குரு சஞ்சாரம் செய்வதால் உடல் நிலை ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக அமைவார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 24,25,26,27,28.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடித்து பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட மீன  ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் புதன் 25ம் தேதி முதல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் செற்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளும் சாதகமாக அமைவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 27,28,29,30.