Saturday, February 11, 2017

வார ராசிப்பலன் பிப்ரவரி 12 முதல் 18 வரை 2017


தை  30  முதல்  மாசி  06 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


செவ்
சுக்கி




கேது 
திருக்கணித கிரக நிலை




சூரிய
புதன்
ராகு சந்தி

சனி 


               
குரு  (வ)


கிரக மாற்றம்

12.02.2017 கும்ப சூரியன் இரவு 08.39 மணிக்கு.

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
சிம்மம்                            11.02.2017 காலை 08.56 மணி முதல் 13.02.2017 மதியம் 03.11 மணி வரை.
கன்னி                              13.02.2017 மதியம் 03.11 மணி முதல் 15.02.2017 இரவு 12.36 மணி வரை.
துலாம்                            15.02.2017 இரவு 12.36 மணி முதல் 18.02.2017 பகல் 12.31 மணி வரை.
விருச்சிகம்                                18.02.2017 பகல் 12.31 மணி முதல் 20.02.2017 இரவு 12.55 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
16.02.2017 மாசி 04 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம்தேய்பிறை

17.02.2017 மாசி 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டிதிதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம்  காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 10ல் புதன், 11ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு தேடி வரும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலங்களை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைக்கவும். கடன்கள் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிரமம் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சற்று முழு முயற்சியுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருகனை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     14,15,16,17.
சந்திராஷ்டமம்                      18.02.2017 பகல் 12.31 மணி முதல் 20.02.2017 இரவு 12.55 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் குருவும் 10ல் சூரியனும், 11ல் செவ்வாய் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கடன்கள் படிப்படியாகக் குறையும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் ஓரளவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றுவார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தடைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்தாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெற முடியாமல் போகும். மந்த நிலை ஏற்படாமல் லாபங்களை பெற்று விடுவீர்கள்உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும்மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை ஏற்படும். அம்மனுக்கு பரிகாரம் செய்வது சனிபாகவானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     16,17,18.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 10ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சிரமமின்றி முடித்து விடுவீர்கள். குடும்பத்தின் ஒற்றுமை சுமாராகத்தானிருக்கும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவனர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பெரிய தொகைளுக்கு மற்றவர்களை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     12,13.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களேளே உங்கள் ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், அதிசாரமாக 6ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். கணவன் மனைவி ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவினைப்பெற முடியும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியிலும் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷன்கள் குறையும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் குறைத்து கொள்வது நல்லது. துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     14,15.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன், 8ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். குரு வக்ர கதியில் உள்ளதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது மூலம் அவர்களால் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் இதுவரை சந்தித்த சோதனைகள் சற்றே குறையும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     12,13,16,17,18.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண் படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், கேது, 7ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். கடன்கள் படிப்படியாகக் குறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். அசையும் அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களும் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலை பளுவும் குறையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு அரசு வழயில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     14,15.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் செவ்வாய், 11ல் ராகு சஞ்சரிப்பதும், அதிசாரமாக 3ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் மேன்மையும், உயர்வும் உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். திருமண சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்படுவதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருளை வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபமும் கிட்டும்கடன் பிரச்சனைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     12,13,16,17,18.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன் சஞ்சரிப்பதும், 11ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் இருப்பதும், சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே உண்டாக கூடிய வாக்கு வாதங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்களை ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் முயன்று வரை கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமமம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     12,13,14,15.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், 4ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வத நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கை, கால் வலி சோர்வு போன்றவை உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை அனுசரித்து  செல்ல வேண்டியிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய முடியும். நல்ல வரன்கள் தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகளி மற்றும் தொழிலாளர்கள் உறு துணையாக செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     14,15,16,17,18.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன் மனைவி பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் அமையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் ஏற்படும். சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறம்உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் யாவும் தடையின்றி கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     16,17,18.
சந்திராஷ்டமம்                      11.02.2017 காலை 08.56 மணி முதல் 13.02.2017 மதியம் 03.11 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன், அதிசாரமாக 11ல் சனி சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். போட்டிகளை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை போன்றவை உண்டாகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். முடிந்த வரை நேரத்திற்கு உணவு உண்பது, உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது, மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது, கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது  நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     12,18.
சந்திராஷ்டமம்                      13.02.2017 மதியம் 03.11 மணி முதல் 15.02.2017 இரவு 12.36 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன  ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் சுக்கிரன், 6ல் ராகு 11ல் புதன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுப காரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலைபளுவும் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     12,13,14,15.
சந்திராஷ்டமம்                      15.02.2017 இரவு 12.36 மணி முதல் 18.02.2017 பகல் 12.31 மணி வரை.


No comments: