Friday, February 17, 2017

வார ராசிப்பலன் பிப்ரவரி 19 முதல் 25 வரை 2017

வார ராசிப்பலன் பிப்ரவரி  19 முதல் 25 வரை   2017
மாசி  7  முதல்  13 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



செவ்
சுக்கி




கேது 
சூரிய

திருக்கணித கிரக நிலை




புதன்
ராகு

சனி 

சந்தி
               
குரு  (வ)



கிரக மாற்றம்
22.02.2017 கும்பத்தில் புதன் மாலை 06.46 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
விருச்சிகம்                                18.02.2017 பகல் 12.31 மணி முதல் 20.02.2017 இரவு 12.55 மணி வரை.
தனுசு                               20.02.2017 இரவு 12.55 மணி முதல் 23.02.2017 பகல் 11.33 மணி வரை.
மகரம்                              23.02.2017 பகல் 11.33 மணி முதல் 25.02.2017 இரவு 07.14 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

23.02.2017 மாசி 11 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம்தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன், கேது 10ல் புதன் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     23,24,25.
சந்திராஷ்டமம்                      18.02.2017 பகல் 12.31 மணி முதல் 20.02.2017 இரவு 12.55 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன், 11ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்ற படி இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும் என்றாலும் திருமணம் நடைபெறுவதில் தாமத நிலை ஏற்படும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலித்து விட முடியும். உங்கள் ஜென்ம ராசிக்கு 8ல் சனி அதிசாரமாக சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     19,20.
சந்திராஷ்டமம்                      20.02.2017 இரவு 12.55 மணி முதல் 23.02.2017 பகல் 11.33 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 10ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்தால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்த கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கைகூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நி¬வேறும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     19,20,21,22.
சந்திராஷ்டமம்                      23.02.2017 பகல் 11.33 மணி முதல் 25.02.2017 இரவு 07.14 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே  அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6ல் சனி, 9ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து எற்றமிகு பலன்களை பெறுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்றவை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைவீர்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கை அம்மனை வழிபாடு செய்வது விநாயகர் வழிபாட மேற்கொள்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     21,22,23,24,25.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் 8ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல்  ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் பொது கவனமுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். அசையும் அசையா சொத்துக்கள் மூலமும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     23,24,25.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், 7ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயரதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     19,20.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை  போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் செவ்வாய் 11ல் ராகு, அதிசாரமாக 3ல் சனி சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன் மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். பகைமை பாராட்டியவர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     21,22,23.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
என்ன தான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடு பட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரை சனி தொடருவதும், ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கை கால் சோர்வு மந்தநிலை போன்றவை ஏற்பட்டு அன்றாட பணிகளில் சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு  பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     19,20,23,24,25.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், 4ல் சுக்கிரன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     21,22,23.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால்  மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், 12ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 3ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெற்று விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் எற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். கணவன் மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருப்பதால்  குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். தேவையற்ற பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள்  கூட்டாளிகளை  அனுசரித்து செல்வது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். சனிபகவானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     19,20,23,24,25.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன், 11ல் அதிசாரமாக சனி சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்திலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். மாணவர்களும் கல்வியில் உயர்வடைவார்கள். சிவ பெருமானை வழிபாடு செய்வது பிரதோஷ கால விரதம் மேற்கொள்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     19,20,21,22.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 12ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6ல் ராகு, 7ல் குரு சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். கணவன் மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது  உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள்தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     21,22,23,24,25.


No comments: