வாங்கி படிக்க தவறாதீர்கள்
மாா்ச் 2017
ஓம்சரவணபவா இதழுடன்
2017-2018 தமிழ் புத்தாண்டு பலன்கள்
(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)
வார ராசிப்பலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை 2017
மாசி 14 முதல் 20 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர்
முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை --
600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
செவ்
சுக்கி
|
|
|
|
கேது சூரிய
புதன் சந்தி
|
திருக்கணித கிரக நிலை
|
|
|
|
ராகு
|
||
சனி
|
|
|
குரு (வ)
|
கிரக மாற்றம்
02.03.2017
மேஷ செவ்வாய் அதிகாலை 02.39 மணிக்கு
04.03.2017
சுக்கிரன் வக்ர ஆரம்பம் பகல் 02.41 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கும்பம் 25.02.2017 இரவு 07.14 மணி முதல் 27.02.2017 இரவு 12.09 மணி வரை.
மீனம் 27.02.2017
இரவு 12.09 மணி முதல் 02.03.2017 அதிகாலை 03.16 மணி வரை.
மேஷம் 02.03.2017 அதிகாலை 03.16 மணி முதல் 04.03.2017 அதிகாலை 05.42 மணி வரை.
ரிஷபம் 04.03.2017
காலை 05.42 மணி முதல் 06.03.2017 காலை 08.24 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
02.03.2017
மாசி 18 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்திதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன், கேது, புதன் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கைகள் அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 26,27,2,3.
ரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன், 11ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். பனவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.
வெற்றிதரும் நாட்கள் 26,27,28,1,4.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 10ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது நல்ல அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்றவை ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். முடிந்தவரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 28,1,2,3.
கடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6ல் சனி, 9ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாக கூடும் என்பதால் சற்றே கவனம் எடுத்து கொள்வது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். தடைபட்ட திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 2,3,4.
சந்திராஷ்டமம் 25.02.2017
இரவு 07.14 மணி முதல் 27.02.2017 இரவு 12.09 மணி வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன், 8ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை குறைக்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் மனநிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 26,27,4.
சந்திராஷ்டமம் 27.02.2017 இரவு 12.09 மணி முதல் 02.03.2017 அதிகாலை 03.16 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், கேது 7ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எந்தவித பிரச்சனைகளையும் எதிர் கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பல செலவுகளை குறைக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் அதிக கவனம் எடுத்து கொள்வது தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 26,27,28,1.
சந்திராஷ்டமம் 02.03.2017 அதிகாலை 03.16 மணி முதல் 04.03.2017 அதிகாலை 05.42 மணி வரை.
துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சனி, 6ல் செவ்வாய், 11ல் ராகு சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தடைப்பட்ட திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன் மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல் படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர் வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 28,1,2,3.
சந்திராஷ்டமம் 04.03.2017 காலை 05.42 மணி முதல் 06.03.2017 காலை 08.24 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைசனி தொடருவதும், ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல் பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன் மனைவவியிடையே சிறு சிறு பிரச்சனைகள், வாக்கு வாதங்கள் போன்றவை தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களாலும் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 2,3,4.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், கேது, 4ல் சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடைய முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது பிறர் விஷயங்களில் தலையீட செய்யாதிருப்பது உத்தமம். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கப் பெறும். சனிபகவானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 26,27,4.
மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், 12ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவி தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்த்து விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும் என்றாலும் நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகளும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன்பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கப் பெறும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 28,1.
கும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் கேதுவும், 2ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. முன் கோபத்தால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். சனி 11ல் இருப்பதால் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு கூடுதலாகவே இருக்கும். எதிர் பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 26,27,2,3.
மீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாயும், 12ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் இந்த வாரம் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய சிறுசிறு பாதிப்புகளால் மந்தமான நிலை நிலவும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய வல்லமையை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 28,1,4.
No comments:
Post a Comment