Saturday, April 1, 2017

வார ராசிப்பலன் - ஏப்ரல் 2 முதல் 8 வரை 2017


வார ராசிப்பலன் - ஏப்ரல் 2 முதல்  8 வரை   2017
பங்குனி 20 முதல்  26 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


சுக்கி வ
சூரிய
செவ்
புதன்

சந்தி


கேது 

திருக்கணித கிரக நிலை





ராகு

சனி 


               
குரு  (வ)


கிரக மாற்றம்
06-04-2017 சனி வக்ர ஆரம்பம் காலை 10.14 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
ரிஷபம்    - 31-03-2017 மதியம் 12.35 மணி முதல் 02-04-2017 மதியம் 02.05 மணி வரை.
மிதுனம்   - 02-04-2017 மதியம் 02.05 மணி முதல் 04-04-2017 மாலை 05.23 மணி வரை.
கடகம்     - 04-04-2017 மாலை 05.23 மணி முதல் 06-04-2017 இரவு 11.01 மணி வரை.
சிம்மம்     - 06-04-2017 இரவு 11.01 மணி முதல் 09-04-2017 காலை 06.52 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
02-04-2017 பங்குனி 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி, மிருகசீரிஷ நட்சத்திரம், சித்தயோகம், காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் மேஷ லக்னம். வளர்பிறை

மேஷம்   அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய், விரய ஸ்தானமான 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு- வாதங்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் இடையூறுகள் உண்டாகாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் கொண்டால் அவர்கள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். பண விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  - 2, 3, 4.

ரிஷபம்  கிருத்திகை 2, 3, 4ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்பு தன்மை  அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதொடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல் ஏற்படாது. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணி புரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகளும், திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாகவே இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உடன் இருப்பவர்கள் சாதகமாகச் செயல் படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் காத்து கொள்வது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவதுசனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     2, 5, 6.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் செவ்வாய், புதன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தேவையற்றப் பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்க கூடும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். பூர்வீக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல பல வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  - 2, 3, 4, 7, 8.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, 10-ல் செவ்வாய், புதன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளை தாண்டி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். முன் கோபத்தை குறைப்பது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடுவதில் சற்று தாமத நிலை ஏற்படும்உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகப்பலனை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம். ராகு, கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் - 2, 5, 6.   

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2ல் குரு, 9ல் புதன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது வீண் வாக்கு- வாதங்களை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். தொழிலாளர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். விளையாடும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     2, 3, 4, 7, 8.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4-ல் சனி, 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை, வீண் வாக்கு- வாதங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். சிறப்பான லாபங்களும் கிட்டும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாய்ப்பினை பெறுவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  2, 3, 4, 5, 6.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வரும். கடன்கள் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தமான நிலை உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய வலிமையும், வல்லமையும் உண்டாகும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். உற்றார்- உறவினர்கள் சாதகமாகச் செயல் படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 5, 6, 7, 8.

சந்திராஷ்டமம்      - 31-03-2017 மதியம் 12.35 மணி முதல் 02-04-2017 மதியம் 02.05 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எவ்வளவு தான் கற்று அறிந்திருந்தாலும் எந்த வித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் தடையின்றி வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பணம்- கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்பு உடையவற்றால் நல்ல லாபம் அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். தினமும் விநாயகரை வழிபடுவது, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 7, 8.

சந்திராஷ்டமம்                      02-04-2017 மதியம் 02.05 மணி முதல் 04-04-2017 மாலை 05.23 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, குடும்பத்தில்  உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. அன்றடாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 2, 3, 4.

சந்திராஷ்டமம்                      04-04-2017 மாலை 05.23 மணி முதல் 06-04-2017 இரவு 11.01 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் புதன், 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் படுவீர்கள். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் நாள் தோறும் உள்ள தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது உத்தமம். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். ஆன்மீக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். குருபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  2, 3, 4, 5, 6.

சந்திராஷ்டமம்                      06-04-2017 இரவு 11.01 மணி முதல் 09-04-2017 காலை 06.52 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன்,  3-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல் படுவீர்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும், மகிழ்ச்சியும் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை அடையும். கூட்டாளிகள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்புகரம் நீட்டுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்கி பாராட்டுகளையும், பரிசுகளையும் பெறுவார்கள். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     5, 6, 7, 8.             

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசியில் சூரியன், 2ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 7ல் குரு சஞ்சாரம் செய்வதால் எதிலும் அனுகூலமானப் பலனைப் பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்கு- வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயங்களை அடையலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடை தாமதங்களுக்கு பின் அனுகூலம் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகி புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயரதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும்மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். சிவனை வழிபடுவது முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     2, 7, 8.


No comments: