Saturday, April 29, 2017

மாத ராசிபலன் - மே 2017

மாத ராசிபலன் - மே 2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



சுக்கி
சூரிய புதன் ()
செவ்

கேது 




ராகு 
சனி()


குரு ()

கிரக   மாற்றம்
04-05-2017 - புதன் () நிவர்த்தி
14-05-2017 - ரிஷப சூரியன்
27-05-2017 - மிதுன செவ்வாய்
31-05-2017 - மேஷ சுக்கிரன்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையமுடியும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்களாக தடைப்பட்ட சுபகாரியங்கள் கை கூட வாய்ப்பு உண்டு. பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். குடும்ப தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்றாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். இதுவரை இருந்த மந்த நிலை விலகி எதிர்பார்த்த லாபம் கிட்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வெளிப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் -. முருக பெருமானை வழிபடுவது சஷ்டி விரதம் மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் -   11-05-2017 காலை 10.40 மணி முதல் 13-05-2017 இரவு 11.11 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று 11ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சூரியன் 12ல் இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தினரின் உதவியுடன் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் தான் வெற்றி கிட்டும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான லாபம் கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அலைச்சலுக்குப் பின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையாக இருக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். புத்திர வழியில் சுப செய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

பரிகாரம் -.  சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் -   13-05-2017 இரவு 11.11 மணி முதல் 16-05-2017 பகல் 11.32 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு 3ல் ராகு, 10ல் சுக்கிரன், 11ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் அனுகூலமாய் அமைவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு அபிவிருத்தி பெருகுவதோடு எதிர்பார்த்ததை விட லாபம் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் மகிழ்வார்கள். திருமண முயற்சிகள் நல்ல பலனைத் தரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். சகோதர சகோதரிகள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடம் பொருள் வாங்கும் யோகம் கிட்டும்.

பரிகாரம் -.  சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் -   16-05-2017 பகல் 11.32 மணி முதல் 18-05-2017 இரவு 10.08 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் சூரியன், 11ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழிலில் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். 2ல் ராகு இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் வெளி இடங்களிலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகள் நிறைவேறும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புது வீடு குடிபோகும் யோகம் உண்டாகும். தெய்வ தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பணவரவு தாராளமாக இருப்பதால் பழைய கடன்கள் தீர்ந்து போகும். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

பரிகாரம் -.. ராகு காலங்களில் துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் -  18-05-2017 இரவு 10.08 மணி முதல் 21-05-2017 அதிகாலை 05.18 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு ராசியதிபதி சூரியன் இம்மாதம் 9,10ல் சஞ்சரிப்பது, 10ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். 2ல் குரு இருப்பதால் பணவரவுக்கு பஞ்சமிருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால்  அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சம்பந்தபட்ட பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வந்து சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகி அனுகூலப் பலன் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் எண்ணங்கள் தடைகள் ஏதுமின்றி நிறைவேறும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும்.

பரிகாரம் -. சரபேஸ்வரரை வழிபடுவது விநாயகர் வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் -    21-05-2017 அதிகாலை 05.18 மணி முதல் 23-05-2017 காலை 08.26 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக் கூடிய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் சுமாராக தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் கடன்கள் சற்று குறையும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்படலாம். சிலருக்கு வீடு வாகனம் போன்றவற்றால் வீண் விரயம் ஏற்படக் கூடும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க கூடும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மனவேதனையை உண்டாக்கும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம் -.  சிவபெருமானை வழிபாடு செய்வது, குருவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் -   23-05-2017 காலை 08.26 மணி முதல் 25-05-2017 காலை 08.33 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே, உயர்ந்த நிலையை அடைய வேண்டிய குறிக்கோள் கொண்ட உங்களுக்கு 3ம் வீட்டில் சனி, 7ல் புதன், 11ல் ராகு சஞ்சரிப்பதால் இருக்ககூடிய சிக்கல்கள் குறைந்து சாதகமான பலன்களை அடைவீர்கள். 7ல் சூரியனும், 8ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு அனுகூலமளிக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சற்றே உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதால் லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

பரிகாரம் -.  குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம் -  25-05-2017 காலை 08.33 மணி முதல் 27-05-2017 காலை 07.38 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சுக்கிரன், 10ல் ராகு, மாத முற்பாதியில் 6ல் சூரியன்  சஞ்சரிப்பதால் பணவரவுக்கு பஞ்சமிருக்காது. புதிய பொருட்கள் வாங்க கூடிய யோகம் உண்டு. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கௌரவமான பதவிகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தர கூடிய சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்பூர்வீக சொத்துகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் மூலம் தொழில் வியாபாரம் விரிவடையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் கல்விக்காக வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கப்பெறும். உங்களின் வளர்ச்சிக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

பரிகாரம் -. சனிக்கு பரிகாரம் செய்வது, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் -   27-05-2017 காலை 07.38 மணி முதல் 29-05-2017 காலை 07.56 மணி வரை.
               
தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு 4ல் சுக்கிரன் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும், 6ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். உடன் பிறந்தவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் சற்று குறையும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த படி புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

பரிகாரம் -. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் -    01-05-2017 இரவு 11.35 மணி முதல் 04-05-2017 அதிகாலை 04.30 மணி வரை. 29-05-2017 காலை 07.56 மணி முதல் 31-05-2017 பகல் 11.14 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே, தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட உங்களுக்கு சுக ஸ்தானமான 4ம் வீட்டில் சூரியன், 2ல் கேது, 8ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பொறுமையை கடைபிடித்தால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி, பெறாமைகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போக கூடிய சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து சென்றால்  சற்று நிம்மதியுடன் பணி புரிய முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் கிட்டும். சிக்கனமுடன் செயல்பட்டால் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம். குடும்பத்தில் பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள்.

பரிகாரம் -.. சிவ வழிபாடு செய்வது, துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் -    04-05-2017 அதிகாலை 04.30 மணி முதல் 06-05-2017 மதியம் 12.35 மணி வரை. 31-05-2017 பகல் 11.14 மணி முதல் 02.06.2017 மாலை 06.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு 2ல் சுக்கிரன், 3ல் சூரியன், 11ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டங்கள் வெற்றியை தரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகி எதிர்பார்த்த லாபம் உண்டா-கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் யாவும் குறையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பரிகாரம் -.  விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.

சந்திராஷ்டமம் -   06-05-2017 மதியம் 12.35 மணி முதல் 08-05-2017 இரவு 10.54 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே, புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு 3ல் செவ்வாய், 6ல் ராகு, மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து அனுகூலமான பலன்களை அடையக்கூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்கள் ஆடை ஆபரண சேர்க்கையில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் சுமூகமான முடிவுக்கு வந்து நல்ல பலனை தரும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவார்கள். முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் வளர்ச்சிக்கு உற்றார் உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

பரிகாரம் -.  விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் -  08-05-2017 இரவு 10.54 மணி முதல் 11-05-2017 காலை 10.40 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

07-05-2017 சித்திரை 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவாதசிதிதி உத்திர நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

08-05-2017 சித்திரை 25 ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசிதிதி அஸ்த நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

12-05-2017 சித்திரை 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியை திதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

14-05-2017 சித்திரை 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி மூல நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

17-05-2017 வைகாசி 03 ஆம் தேதி புதன்கிழமை சஷ்டிதிதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

18-05-2017 வைகாசி 04 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமிதிதி அவிட்ட நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

22-05-2017 வைகாசி 08 ஆம் தேதி திங்கட்கிழமை ஏகாதசிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை


29-05-2017 வைகாசி 15 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்திதிதி புனர்பூச நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

No comments: