வார ராசிப்பலன் - ஏப்ரல் 23 முதல் 29 வரை 2017 ( சித்திரை 10 முதல் 16 வரை )
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in
astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33
வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்
தங்கம் வாங்க நல்ல தருணம்!- முனைவர் முருகுபாலமுருகன்
வெற்றி தரும் நட்சத்திரக் குறியீடுகள்! – சித்தயோகி சிவதாசன் ரவி
உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! - -முனைவர் முருகுபாலமுருகன்
மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- - -டாக்டர் இரா. ரகு M,Sc Astro
சதயத்தினர் சகலமும் பெற வழிகள்! நட்சத்திரப் பரிகாரங்கள்! ஜோதிஷண்முகம்
சுயதொழில், அடிமைத்தொழில் யாருக்கு?- -இ. சரவணன் Gendral Sec ICAS
சொந்த வீட்டுக் கனவை நிஜமாக்கும் பரிகாரம்! (வாரம் ஒரு பரிகாரம்)- விசுஅய்யர்
இந்த வார பஞ்சாங்கம்!-- முனைவர் முருகுபாலமுருகன்
500 ஆண்டு ஆயுள் யாருக்கு! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்! -பி.ராஜசேகரன் M.Phil Astro
27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro
வெற்றி சூத்திரம்!- சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்
வார ராசிபலன் (23-04-2017 முதல் 29-04-2017 வரை) சித்திரை 10 முதல் 16 வரை
முனைவர் முருகுபாலமுருகன்
சுக்கி
|
சூரிய,
புதன் ( வ )
|
செவ்
|
|
கேது சந்திர
|
திருக்கணித கிரக நிலை
|
|
|
|
ராகு
|
||
சனி ( வ )
|
|
|
குரு (வ)
|
கிரக மாற்றம் இல்லை
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கும்பம் 21-04-2017
மதியம் 02.16 மணி முதல் 23-04-2017 இரவு 07.56 மணி வரை.
மீனம் 23-04-2017 இரவு 07.56 மணி முதல் 25-04-2017 இரவு 09.56 மணி வரை.
மேஷம் 25-04-2017
இரவு 09.56 மணி முதல் 27-04-2017 இரவு 09.51 மணி வரை.
ரிஷபம் 27-04-2017
இரவு 09.51 மணி முதல் 29-04-2017 இரவு 09.46 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
24-04-2017
சித்திரை 11-ஆம் தேதி திங்கட்கிழமை, திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ லக்னம். தேய்பிறை ( கடுமை )
மேஷம் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக் கூடிய சூழ்நிலைகளும், வீண் வாக்கு வாதங்களும் உண்டாகும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குரு 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குருப்ரீதியாக தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் -- - 23,
26, 27.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 10-ல் கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் சாதகமான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கித்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். அன்றாட பணிகளில் திறம் பட செயல்படுவீர்கள். சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் சற்றே விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் -- - 24,
25, 28, 29.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத் துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்றே குறையும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும் உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்க முடியும். சிவபெருமானை வழிபாடு செய்வது, சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் -- - 24,
25, 26, 27.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி மற்றவர்களால் ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் தேடும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். சர்பகிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு, மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்றவிட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவதில் தாமதநிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்த்து கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் -- - 26,
27, 28, 29.
சந்திராஷ்டமம் - 21-04-2017 மதியம் 02.16 மணி முதல் 23-04-2017 இரவு 07.56 மணி வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். சர்பகிரகங்கள் 1,7ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனமாக செயல்படுவது உத்தமம். துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் -- - 23,
28, 29.
சந்திராஷ்டமம் - 23-04-2017 இரவு 07.56 மணி முதல் 25-04-2017 இரவு 09.56 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு தான் கற்று அறிந்து இருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, அந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் குரு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது. அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்தநிலை உண்டாகும். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர் பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் -- - 23,
24, 25.
சந்திராஷ்டமம் - 25-04-2017 இரவு 09.56 மணி முதல் 27-04-2017 இரவு 09.51 மணி வரை.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடு பட்டாவது காப்பாற்றும் பண்பும் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 7-ல் புதன், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக அக்கரை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்வர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டானாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார்- உறவினர்களிடம் விட்டு கொடுத்த நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் -- - 24,
25, 26, 27.
சந்திராஷ்டமம் 27-04-2017 இரவு
09.51 மணி முதல் 29-04-2017 இரவு 09.46 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் எதிர் பாராத உதவிகள் கிட்டும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறலாம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாவதால் மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொன், பொருள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலை பளுவும் குறையும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் -- - 26,
27, 28, 29-.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் சற்றே விலகும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வகையில் வீண் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கணவன்- மனைவி இடையே உண்டாக கூடிய சிறுசிறு வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலையே இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமானப் பலனை பெற முடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகமாக இருக்கும் என்றாலும் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து விடுவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் -- - 23,
28, 29.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2,8-ல் கேது, ராகு 4-ல் சூரியன், 12-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போட்டிகளிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். சிவ பெருமானை வழிபாடு செய்வது, விநாயகரை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் -- - 24,
25.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகளிடம் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிட்டும். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபம் அமையும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். ராகுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் --- 23, 26, 27.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்று விடுவீர்கள். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். 2-ல் சூரியன் இருப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குரு 7ல் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலனை அடைய முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் தேவையற்றப் பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். சிவபெருமானை வழிபாடு செய்வது, விநாயகரை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் --- 24, 25, 28, 29.
No comments:
Post a Comment