Saturday, April 29, 2017

வார ராசிப்பலன் - ஏப்ரல் 30 முதல் மே 6 வரை 2017

வார ராசிப்பலன் - ஏப்ரல் 30 முதல் மே 6 வரை  2017 ( சித்திரை  17  முதல்  23  வரை )
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


சுக்கி
சூரிய,
புதன் ( )
செவ்
சந்திர
கேது 
திருக்கணித கிரக நிலை



ராகு
சனி ( )


குரு ()

கிரக மாற்றம்
03-05-2017 புதன் வக்ர முடிவு இரவு 10.01 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மிதுனம்         29-04-2017 இரவு 09.46 மணி முதல் 01-05-2017 இரவு 11.35 மணி வரை.
கடகம்              01-05-2017 இரவு 11.35 மணி முதல் 04-05-2017 அதிகாலை 04.30 மணி வரை.
சிம்மம்            04-05-2017 அதிகாலை 04.30 மணி முதல் 06-05-2017 மதியம் 12.35 மணி வரை.
கன்னி              06-05-2017 மதியம் 12.35 மணி முதல் 08-05-2017 இரவு 10.54 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
30-04-2017 சித்திரை 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி, மிருகசீரிஷ நட்சத்திரம், சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட் பாதிப்புகள் உண்டாகும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சற்று மந்த நிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும் என்பதால் வீண் செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது போன்றவை நற்பலனை தரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். வேலை பளுவும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேவையற்ற நட்புகளின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். பயணங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் --                30, 1, 6.

ரிஷபம்  கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணிமிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5--ல் குரு, 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். 8-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார்- உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வதால் எல்லா வகையிலும் நன்மைகள் கிட்டும்.

வெற்றிதரும் நாட்கள் --                2, 3.

மிதுனம் மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள்திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றாலும், சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடை யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும். பயணங்களால் தேவையற்ற அலைசல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை கால் அசதி சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல் படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது

வெற்றிதரும் நாட்கள் --                30, 1, 4, 5, 6.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம்பூசம்ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் சனி, 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றியும் கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது மட்டும் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்ற சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவர். துர்கையம்மனை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.

வெற்றிதரும் நாட்கள் --                2, 3, 6.

சிம்மம் மகம்பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உற்றார்- உறவினர்கள் சற்றே சாதகமாக அமைவார்கள் என்றாலும் தேவையற்ற வாக்கு வாதங்களை அவர்களிடம் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலைபளு குறைவாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் சற்றே அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த நற்பலனை அடைய முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். துர்கை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

வெற்றிதரும் நாட்கள் --                30, 1, 4, 5, 6.

கன்னி உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்அஸ்தம்சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசியில் குரு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அஜீரணகோளாறு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக தான் இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். விளையாடும் போது கவனம் தேவை. சிவபெருமானை வழிபடுதால் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.

வெற்றிதரும் நாட்கள் --                30, 1, 2, 3, 6.

துலாம் சித்திரை3, 4-ஆம் பாதங்கள்சுவாதிவிசாகம்1, 2, 3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்டு  தன்னம்மிக்கையுடன் செயல்படும் துலா ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பதும், உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். முருகப்பெருமானை வழிபடு வதன் மூலம் வாழ்வில் மேலும் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றிதரும் நாட்கள் --                2, 3, 4, 5, 6.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம்அனுஷம்கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெற அவர்கள் அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் அனுகூலப் பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த பணத்தை வசூலித்து விட முடியும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலப்பலனை அடைய முடியும்உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் அதிக எடுத்து கொள்வது உத்தமம். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் --                4, 5, 6.

சந்திராஷ்டமம்    -                29-04-2017 இரவு 09.46 மணி முதல் 01-05-2017 இரவு 11.35 மணி வரை.

தனுசு  மூலம்பூராடம்உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் --                30, 1, 6.

சந்திராஷ்டமம் -  01-05-2017 இரவு 11.35 மணி முதல் 04-05-2017 அதிகாலை 04.30 மணி வரை.

மகரம் உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்திருவோணம்அவிட்டம்1, 2-ஆம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக செயல்படும் சுபாவம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைசனி நடைபெறுவதும், ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன், சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளத் தொகைகள் கைக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  -             30, 1, 2, 3.

சந்திராஷ்டமம்  -  04-05-2017 அதிகாலை 04.30 மணி முதல் 06-05-2017 மதியம் 12.35 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம்பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல் படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. நம்பியவர்களே சில நேரங்களில் துரோகம் செய்ய துணிவார்கள். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படாது. எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். வேலைபளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க முடியாமல் போகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

வெற்றிதரும் நாட்கள் -- 2, 3, 4, 5.

சந்திராஷ்டமம்    06-05-2017 மதியம் 12.35 மணி முதல் 08-05-2017 இரவு 10.54 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம்உத்திரட்டாதிரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன  ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் செவ்வாய், 7ல் குரு, சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் அன்றாட பணிகளை சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் சேமிக்க முடியும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலப்பலன் அமையும். உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை  தவிர்ப்பது நல்லது. கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  4, 5, 6.


No comments: