Friday, April 7, 2017

வார ராசிப்பலன் - ஏப்ரல் 9 முதல் 15 வரை 2017

வார ராசிப்பலன் - ஏப்ரல் 9 முதல்  15 வரை   2017 
( பங்குனி 27 முதல் சித்திரை  2 வரை )

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com




சுக்கி வ
சூரிய
செவ்
புதன்



கேது 

திருக்கணித கிரக நிலை





ராகு
சந்தி

சனி 



               
குரு  (வ)


கிரக மாற்றம்
10-04-2017          புதன் வக்ரம் ஆரம்பம் காலை 04.42 மணிக்கு
13-04-2017          ரிஷப செவ்வாய் காலை 04.12 மணிக்கு
14-04-2017          மேஷ சூரியன் அதிகாலை 02.04 மணிக்கு
15-04-2017          சுக்கிரன் வக்ரம் முடிவு பகல் 03.43 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கன்னி               - 09-04-2017 காலை 06.52 மணி முதல் 11-04-2017 மாலை 04.40 மணி வரை.
துலாம்             - 11-04-2017 மாலை 04.40 மணி முதல் 14-04-2017 அதிகாலை 04.09 மணி வரை.
விருச்சிகம்  - 14-04-2017 அதிகாலை 04.09 மணி முதல் 16-04-2017 மாலை 04.40 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
09-04-2017 பங்குனி 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி, உத்திர நட்சத்திரம், அமிர்தயோகம், காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள். ரிஷப லக்னம். வளர்பிறை

13-04-2017 பங்குனி 31-ஆம் தேதி வியாழக்கிழமை, துவிதியை திதி, சுவாதி நட்சத்திரம், அமிர்தயோகம், காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் மீன லக்னம். தேய்பிறை

மேஷம்   அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
முன் கோபம் அதிகம் இருந்தாலும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 12-ல் சூரியன் சஞ்சரிப்பது தேவையற்ற வீண் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதும், 6-ல் சஞ்சாரம் செய்யும் குரு வக்ரகதியில் இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளித்து விட கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பண வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட கூடும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் செயல்படுவது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நற்பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். குரு ப்ரீதியாக தட்சிணா முர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 9, 10, 11, 12, 13.

சந்திராஷ்டமம்        14-04-2017 அதிகாலை 04.09 மணி முதல் 16-04-2017 மாலை 04.40 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத பண்பும், தன்மையான குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று வாழ்க்கை தரம் உயரும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் நோக்கங்களும் நிறைவேறக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை சோர்வு போன்றவை உண்டாகலாம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பணம்- கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்படுவதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விநாயகரை வழிபடுவது, சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் - 12, 13, 14, 15.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி காரியங்களை சாதித்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு மாத கோளான சூரியன் 10,11-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், 3-ல் ராகு, 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த நெருக்கடிகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கணவன்- மனைவியிடையே மகிழ்ச்சியும், ஒற்றுமையும் உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நல்ல மதிப்பெண்களும் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, ஆஞசநேயரை வழிபடுவது நல்லது

வெற்றிதரும் நாட்கள் - 14, 15.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்றி விட கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதும், 6-ல் சனி, 10-ல் புதன் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். கணவன்-- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை உண்டாகும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன்கள் தேடி வரும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்பு உடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 9, 10, 11.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் எதையும் சமாளித்து தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகி ஒற்றுமை குறைவு ஏற்படும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும். புத்திர வழியில் தேவையற்ற மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சனைகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் - 12, 13.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும், அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசியில் குரு, 4-ல்  சனி, 7-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் தேவையற்ற வீண் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதநிலை உண்டாகும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல் படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகளை சமாளித்தே முன்னேற்றத்தை அடைய முடியும். வர வேண்டிய வாய்ப்புகளை பிறர் தட்டி செல்ல கூடிய சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தடை ஏற்படும். வேலை பளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 9, 10, 11, 14, 15.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம், 1,2,3-ஆம் பாதங்கள்
ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சனி, 6-ல் சூரியன் 11-ல் ராகு  சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார  நிலை சிறப்பாக இருக்கும். எந்தவித பிரச்சனைகளையும் எதிர் கொள்ள கூடிய அளவுக்கு உங்கள் பலமும் வளமும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். உற்றார்- உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல், டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை எளிதில் அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுதிடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் கா£ரியங்களில் எதிர்பார்த்த அனுகூலப் பலன்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்கி பரிசுகளை தட்டி பெறுவார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 12, 13.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பது சாதமற்ற அமைப்பு என்றாலும், 5-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும், அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம்- கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவும் என்றாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை நிலவும். சனி பகவானை வழிபடுவது, ---தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் - 9, 10, 11, 14, 15.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைசனி நடைபெறுவது சாதமற்ற அமைப்பு என்றாலும் ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் அனைத்து வகையிலும் நற்பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமத நிலை உண்டாகும்பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கல் பெரிய தொகைகளைப் பயன்படுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை பெற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்து நல்ல லாபத்தினை அடைவார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்து உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது நற்பலனை தரும். சிவனை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 9, 10, 11, 12, 13.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் புதன், 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றுவதால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உறவினர்களும் சில நேரங்களில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலைபளு கூடுதலாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் - 12, 13, 14, 15.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
வேகமாக பேசினாலும், திருத்தமாகவும், திறம்படவும் பேசக் கூடிய கும்ப ராசி நேயர்களே, உங்கள்  ஜென்ம ராசிக்கு 11-ல் சனி சஞ்சாரம் செய்வதும், 12-ஆம் தேதி வரை 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 14-ஆம் தேதி முதல் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்களை குறைத்து கொள்ளலாம். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட சற்று தாமத நிலை உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள்உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது, சரபேஸ்வரரை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 14, 15.

சந்திராஷ்டமம்                      09-04-2017 காலை 06.52 மணி முதல் 11-04-2017 மாலை 04.40 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட மீன  ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் - மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவினை ஏற்படுத்தும். உற்றார்- உறவினர்களின் வருகை மனமகிழ்ச்சியை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கை கூட சற்று தாமதநிலை ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை வசூலித்துவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் சற்ற கடின முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 9, 10.


சந்திராஷ்டமம்         11-04-2017 மாலை 04.40 மணி முதல் 14-04-2017 அதிகாலை 04.09 மணி வரை

No comments: