Friday, May 5, 2017

வார ராசிப்பலன் - மே 7 முதல் 13 வரை 2017

வார ராசிப்பலன் - மே 7 முதல் 13 வரை 2017
                ( சித்திரை  24  முதல்  30  வரை)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

வர்ணிக்க முடியாத நற்பலன் தரும் தசை!-                                                                  முனைவர் முருகு பாலமுருகன்

நோய் தீர்க்கும் ஸ்ரீரங்கநாதர்! –   சித்தயோகி சிவதாசன் ரவி

உத்திரட்டாதியினர் உச்சம் தொட என்ன வழி! நட்சத்திரப் பரிகாரங்கள்!                                                       ஜோதிஷண்முகம்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

தேய்பிறையில் முகூர்த்தம் வைக்கலாமா?  அம்சி விவேகானந்தன்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

அறிவியல் ஆன்மிகத்தை இணைக்கும் ஜோதிடம்!-- - -டாக்டர் இரா.ரகு M,Sc Astro

வேலைக்கு உலை வைக்குமா கோட்சார குரு?-  -சரவணன் Gendral Sec ICAS

பெரும் பிரச்சனை தரும் பிரம்மஹத்தி தோஷம்! – தீர்க்கும் பரிகாரம்? (வாரம் ஒரு பரிகாரம்)-                                 விசு அய்யர்

வருமுன் காக்கும் வழி! –             ஜோதிடச்சுடர் ந. ஞானரதம் M.Phil Astro

ஆயிரம் பொன் பெறும் அதிர்ஷ்ட ஜாதகம்! -     பிராஜசேகரன் M.Phil Astro

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

சகுனத்தால் வென்ற சத்ரபதி!-         சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

வார ராசிபலன் (07-05-2017 முதல் 13-05-2017 வரை) சித்திரை 24 முதல் 30 வரை

முனைவர் முருகுபாலமுருகன்


சுக்கி
சூரிய,
புதன்
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை



ராகு
சனி ( )


குரு ()
சந்திர

கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கன்னி                               - 06-05-2017மதியம் 12.35 மணி முதல் 08-05-2017இரவு 10.54 மணி வரை.
துலாம்                             - 08-05-2017இரவு 10.54 மணி முதல் 11-05-2017காலை 10.40 மணி வரை.
விருச்சிகம்                 - 11-05-2017காலை 10.40 மணி முதல் 13-05-2017இரவு 11.11 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
07-05-2017 சித்திரை 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி, உத்திர நட்சத்திரம்அமிர்தயோகம்காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப லக்னம். வளர்பிறை

08-05-2017 சித்திரை 25-ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசி திதி, அஸ்த நட்சத்திரம்சித்தயோகம்காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப லக்னம். வளர்பிறை

12-05-2017 சித்திரை 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, துவிதியை திதி, அனுஷ நட்சத்திரம்சித்தயோகம், காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப லக்னம். தேய்பிறை

மேஷம்   அசுவனிபரணிகிருத்திகை1-ஆம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய், 6-ல் குரு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம்திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் சில பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் நண்பர்களிடம் சற்று கவணமாக இருப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்-.

வெற்றிதரும் நாட்கள் -  7, 8, 9, 10.

சந்திராஷ்டமம்        - 11-05-2017காலை 10.40 மணி முதல் 13-05-2017இரவு 11.11 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணிமிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசி அதிபதி சுக்கிரன் 11-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண, சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவர்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் -  9, 10, 11, 12, 13.

மிதுனம் மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள்திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 10ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாவதால் சிறிது மருத்துவ செலவு ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்வர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும்  அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று பெரியோர்களிடம் நற்பெயர் எடுப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  11, 12, 13.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம்பூசம்ஆயில்யம்
கற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். 2-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையயற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமையும், நிம்மதியும் சிறப்பாகவே இருக்கும். விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற நோக்கங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  7, 8.

சிம்மம் மகம்பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்த்து விடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 9-ல் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் கிட்டும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சிறப்பாக சுறுசுறுப்புடன் செய்ய முடியும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனை தரும். வெளிவட்டார தொடர்புகளும் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். கல்வி தரமும் உயர்வடையும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  9, 10.

கன்னி உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்அஸ்தம்சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4-ல் சனி, 8-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது, நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  7, 8, 11, 12, 13.

துலாம் சித்திரை3, 4-ஆம் பாதங்கள்சுவாதிவிசாகம்1, 2, 3-ஆம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பதும், உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் 6-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  9, 10.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம்அனுஷம்கேட்டை
முன்கோபம் உடையவராகவும், எளிதில்  உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பது  நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார்- உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். கூட்டாளிகள் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உடன்பணி புரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்ற மகிழ்ச்சி அடைவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது நல்லது.         

வெற்றிதரும் நாட்கள் -  7, 8, 11, 12, 13.

தனுசு  மூலம்பூராடம்உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஜென்ம ராசியில் சனி இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும்எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறரை நம்பு பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை இருந்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  7, 8, 9, 10.

மகரம் உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்திருவோணம்அவிட்டம்1, 2-ஆம் பாதங்கள்
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டால் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் கேது, 8-ல்  ராகு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்முடிந்தவரை அனைவரிடமும்  விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். 9ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிநதித்து செயல்படுவது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைபப் பெற முடியும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் -  9, 10, 11.

கும்பம்  அவிட்டம்3, 4-ஆம் பாதங்கள் சதயம்பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன் உச்சம் பெற்று சஞசரிப்பதும், 3-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால்  எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்புங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் -  11, 12, 13.

சந்திராஷ்டமம் - 06-05-2017மதியம் 12.35 மணி முதல் 08-05-2017இரவு 10.54 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம்உத்திரட்டாதிரேவதி
மற்றவர்களின் சுக துக்கங்களை தன்னுடையதாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் புதன், 3-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்றே ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கப் பெறும். மாணவர்களுக்கு உடல் நல பாதிப்புகளால் நிம்மதி குறையும். சிவபெருமானை பழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -                  7, 8.

சந்திராஷ்டமம் -  08-05-2017 இரவு 10.54 மணி முதல் 11-05-2017 காலை 10.40 மணி வரை.

No comments: