Monday, July 31, 2017

ஆகஸ்ட் மாத ராசிப்பலன் 2017

ஆகஸ்ட் மாத ராசிப்பலன் 2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






சுக்கி
கேது 

செவ் சூரிய

புதன்  ராகு

சனி ()
சந்தி
குரு

கிரக   மாற்றம்
13-08-2017 புதன் () ஆரம்பம்
17-08-2017 சிம்மத்தில் சூரியன்
18-08-2017 கடகத்தில் ராகு
18-08-2017 மகரத்தில் கேது
21-08-2017 கடகத்தில் சுக்கிரன்
25-08-2017 சனி () நிவர்த்தி
27-08-2017 சிம்மத்தில் செவ்வாய்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி செவ்வாய் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதும் 6-ல் குரு 8-ல் சனி சஞ்சரிப்பதும் அலைச்சலை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறப்பு. குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை நிலவினாலும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தொழில்- வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். மாணவர்கள் கடின உழைப்புடன் படித்தால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை அடைய முடியும்.

பரிகாரம் - முருக வழிபாடு செய்வது, அஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 01-08-2017 காலை 05.42 மணி முதல் 03-08-2017 மாலை 06.13 மணி வரை மற்றும் 28-08-2017 மதியம் 01.33 மணி முதல் 31-08-2017 அதிகாலை 01.52 மணி வரை

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய் சூரியன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தனவரவு தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். வரும் 18-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு கேது பெயர்ச்சியால் ராகு 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு நிலவிய அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய மாற்றங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் விளங்குவார்கள்.

பரிகாரம்-  பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - -  03-08-2017 மாலை 06.13 மணி முதல் 06-08-2017 காலை 06.06 மணி வரை மற்றும் 31-08-2017 அதிகாலை 01.52 மணி முதல் 02.09.2017 பகல் 01.56 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன் 6-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்ற மிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். செவ்வாய் 2-ல் இருப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து செல்வதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும் உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வதும் பேச்சை குறைத்து கொள்வதும் நல்லது. இம் மாதம் முற்பாதியில் 2-ல் சஞ்சரிக்ககூடிய சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் 3-ஆம் வீட்டிற்கு மாறுவதால் குடும்பத்தில் நிலவிய ஒற்றுமை குறைவுகள் விலகி நிம்மதி ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் சாதகப்பலன் உண்டாகும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

பரிகாரம்-  குரு பகவானை வணங்குவதும் முருக கடவுளை வணங்குவதும் சிறப்பு.

சந்திராஷ்டமம் - 06-08-2017 காலை 06.06 மணி முதல் 08-08-2017 மாலை 04.12 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் 3-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. முன் கோபத்தை குறைத்துக் கொண்டு குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது சிறப்பு. கணவன்- மனைவியிடையே பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து, விட்டு கொடுத்து சென்றால் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிக்கனமாக இருப்பதாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதாலும் பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கலாம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடை தாமதங்களுக்குப் பின் அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்- வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்கினால் நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம் -  08-08-2017 மாலை 04.12 மணி முதல் 10-08-2017 இரவு 12.08 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு தன ஸ்தானமான 2-ல் குருவும் லாப ஸ்தானத்தில் சுக்கிரனும் சஞ்சரிப்பது சகல விதத்திலும் சுபிட்சத்தை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பொன் பொருள் சேரும். வரும் 18-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு கேது பெயர்ச்சியால் 1,7-ல் சஞ்சரித்த ராகு கேது, ராகு 12-ஆம் வீட்டிற்கும் கேது 6-ஆம் வீட்டிற்கும் மாறுதலாக இருப்பதால் குடும்பத்தில் நிலவிய ஒற்றுமை குறைவுகள் விலகி நிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம்-  சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

சந்திராஷ்டமம் -  10-08-2017 இரவு 12.08 மணி முதல் 13-08-2017 காலை 05.54 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி 10-ல் சுக்கிரன் 11-ல் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வரும் 18-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு கேது பெயர்ச்சியால் ராகு 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பு என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

பரிகாரம்- - தட்சிணாமூர்த்தியை வணங்குவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 13-08-2017 காலை 05.54 மணி முதல் 15-08-2017 காலை 09.41 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் -சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 10,11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். உங்கள் ராசிக்கு குரு சனி சாதகமற்று இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தல கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகி பெரிய முதலீடுகளை ஈடுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்த்த இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்- சனிபகவான் வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் -  15-08-2017 காலை 09.41 மணி முதல் 17-08-2017 பகல் 11.58 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும், வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பண வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உங்கள் ராசிக்கு ஏழரைச் சனி நடப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவுகளும் மன மகிழ்ச்சியை உண்டாக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் அமையும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி மற்ற கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம்-  செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 17-08-2017 பகல் 11.59 மணி முதல் 19-08-2017 மதியம் 01.39 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு 8-ல் செவ்வாய் 10-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். எதிலும் சிக்கனமாகவும் நிதானமாகவும் செயல்படுவது நல்லதுஎடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். பண வரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலப்பலன் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாத தொடக்கத்தில் 8-ல் சஞ்சரிக்ககூடிய சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் 9-ஆம் வீட்டிற்கு மாறுவதால் மாத பிற்பாதியில் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்த்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற கடின உழைப்பு தேவை.

பரிகாரம்- முருக வழிபாடும் குரு பகவான் வழிபாடும் மேன்மை கொடுக்கும்.

சந்திராஷ்டமம் - 19-08-2017 மதியம் 01.39 மணி முதல் 21-08-2017 மதியம் 03.52 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். திருமண சுப காரியங்கள் சில தடைகளுக்குபின் கைகூடும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். சூரியன் மாத தொடக்கத்தில் 7-லும் 17-ஆம் தேதி முதல் 8-லும் சஞ்சரிப்பதால் நீங்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் பொழுது போக்கு அம்சங்களில கவனம் செலுத்தாமல் இருப்பது உத்தமம்.

பரிகாரம்-  பிரதோஷ காலங்களில் சிவனுக்கு விரதம் மேற்கொள்வது நன்மை தரும்.

சந்திராஷ்டமம் -  21-08-2017 மதியம் 03.52 மணி முதல் 23-08-2017 இரவு 08.02 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். வரும் 18-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு கேது பெயர்ச்சியால் ராகு 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் இதுநாள் வரை உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை கூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு குரு சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளித்து முன்னேற முடியும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் சிறப்புடன் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

பரிகாரம்-  விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் -  23-08-2017 இரவு 08.02 மணி முதல் 26-08-2017 அதிகாலை 03.12 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் 7-ல் குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் தோன்றும் என்றாலும் எதையும் எதிர் கொள்வீர்கள். இம்மாதம் 5-ல் சஞ்சரிக்ககூடிய சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் எதிர்ப்புகள் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் பதவி உயர்வுகள் பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம்- முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் -  26-08-2017 அதிகாலை 03.12 மணி முதல் 28-08-2017 மதியம் 01.33 மணி வரை.



இம்மாத சுப முகூர்த்த நாட்கள்

02-08-2017 ஆடி 17 ஆம் தேதி புதன்கிழமை தசமிதிதி அனுச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

04-08-2017 ஆடி 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசிதிதி மூல நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

09-08-2017 ஆடி 24 ஆம் தேதி புதன்கிழமை துவிதியைதிதி சதய நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

11-08-2017 ஆடி 26 ஆம் தேதி வெள்ளிகிழமை சதுர்த்திதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

13-08-2017 ஆடி 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டிதிதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

20-08-2017 ஆவணி 04 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதூர்தசிதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

27-08-2017 ஆவணி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டிதிதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

31-08-2017 ஆவணி 15 ஆம் தேதி வியாழக்கிழமை தசமிதிதி மூல நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை