Wednesday, July 5, 2017

வார ராசிப்பலன் ஜுலை 9 முதல் 15 வரை 2017

வார ராசிப்பலன்  ஜுலை 9 முதல் 15 வரை   2017
ஆனி  25 முதல்  31 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com





சுக்கி
செவ்
சூரிய,

கேது 
திருக்கணித கிரக நிலை

புதன்


ராகு
சந்திர
சனி ( )


குரு

               
கிரக மாற்றம்
11--07-2017 கடக செவ்வாய் பகல் 02.59 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
தனுசு                07-07-2017 பகல் 11.21 மணி முதல் 09-07-2017 இரவு 11.21 மணி வரை
மகரம்               09-07-2017 இரவு 11.21 மணி முதல் 12-07-2017 காலை 09.59 மணி வரை
கும்பம்             12-07-2017 காலை 09.59 மணி முதல் 14-07-2017 மாலை 06.33 மணி வரை
மீனம்                14-07-2017 மாலை 06.33 மணி முதல் 16-07-2017 இரவு 12.23 மணி வரை

இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இவ்வாரம் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 4-ல் புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். 8-ல் சனி இருப்பதால் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல் படுவார்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். குரு பகவானை வணங்குவதும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 12, 13, 14.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன், 5-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக நற்பலனை தரும் அமைப்பாகும். முயற்சி ஸ்தானமான 3-ல் 11-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு இருந்த தடைகள் யாவும் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15.

சந்திராஷ்டமம்                      07-07-2017 பகல் 11.21 மணி முதல் 09-07-2017 இரவு 11.21 மணி வரை

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சிறு  தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படக்கூடிய காலம் என்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ வழிபாடும், தட்சணாமூர்த்தி வழிபாடும் மேற்கொள்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 9, 15.
சந்திராஷ்டமம்                      09-07-2017 இரவு 11.21 மணி முதல் 12-07-2017 காலை 09.59 மணி வரை

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும், ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளித்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். முடிந்தவரை உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும் என்றாலும் 3-ல் குரு 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவில் நெருக்கடி வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எந்த பிரச்சனையும் சமாளித்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்து கொண்டு கல்வியில் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -  9, 10, 11.

சந்திராஷ்டமம்                      12-07-2017 காலை 09.59 மணி முதல் 14-07-2017 மாலை 06.33 மணி வரை

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இவ்வாரம் ஜென்ம ராசிக்கு 2-ல் குரு 10-ல் சுக்கிரன் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லதுகொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறலாம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். துர்கையம்மனை வணங்குவதும் விநாயகரை வணங்குவதும் நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 12, 13.

சந்திராஷ்டமம்                      14-07-2017 மாலை 06.33 மணி முதல் 16-07-2017 இரவு 12.23 மணி வரை

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் லாப ஸ்தானத்தில் பலமாக சஞ்சரிப்பதும் 3-ல் சனி 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் அமைப்பாகும். நீங்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். பண வரவுகளும் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாய் இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களும் படிப்பில் முழு ஈடுபாடு செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வணங்குவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, இவ்வாரம் ஜென்ம ராசிக்கு 10-ல் புதன் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நிலவும் நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்து லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர் பயணங்களாலும் அனு-கூலம் கிட்டும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்-- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். 2-ல் சனி 12-ல் குரு சஞ்சரிப்பதால் அதிக முதலீடு கொண்ட செயல்களை செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கப்பெறும். மாணவர்களின் படிப்பில் இருந்த மந்த நிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வணங்குவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - - 9, 15.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்திய சாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சனி, அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டானாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். தொழில் ரீதியாக நெருக்கடிகள் நிலவினாலும் 11-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணவரவுகள் தக்க சமயத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது மூலம் திறம்பட செயல்பட முடியும். சிவ வழிபாடும், சனி பகவான் வழிபாடும் மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - - 10, 11.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்த ஸ்தானமான 7-ல் சூரியன் 10-ல் குரு 12-ல் சனி சஞ்சரிப்பதால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். உங்களுடன் இருப்பவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை தருவார்கள். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர் கொள்ள நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடும். எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் பெறுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கை நழுவிப் போகும் சூழ்நிலை உருவாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. முருக பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - - 9, 12, 13, 14.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, இவ்வாரம் உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன் 9-ல் குரு 11-ல் சனி சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். எதிரிகள் கூட உங்களுக்கு நண்பர்களாக மாறும் அமைப்பு, எதிர்ப்புகள் குறையும் சூழ்நிலை, தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும் யோகம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சிறப்பான லாபம் கிட்டும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். துர்கையம்மனை வழிபாடு செய்வது நன்மையை தரும்.

வெற்றி தரும் நாட்கள் - - 10, 11, 15.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் நீங்கள் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை தவிர்ப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 11-ஆம் தேதி முதல் 6-ஆம் வீட்டில் செவ்வாயும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். திருமண சுப காரியங்களில் சற்று தாமதநிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போக கூடிய சூழ்நிலை உருவாகும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும் அமைப்பு ஏற்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குரு பகவான் வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 9, 12, 13, 14.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு 7-ல் பலமாக அமைந்து ஜென்ம ராசியை பார்வை செய்வதால் பணவரவுக்கு பஞ்சமில்லாமல் உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பொன், பொருள் சேரும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் ரீதியாகவும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - - 9, 10, 11, 15.


No comments: