Saturday, August 5, 2017

வார ராசிப்பலன் ஆகஸ்ட் 6 முதல் 12 வரை 2017

வார ராசிப்பலன்  ஆகஸ்ட் 6 முதல்  12 வரை   2017
( ஆடி  21 முதல் 27 வரை )

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,









சுக்கி
கேது 
திருக்கணித கிரக நிலை

சூரிய,
செவ்

சந்திர
ராகு
புதன்


சனி ( )


குரு

               
கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம்               06-08-2017 காலை 06.06 மணி முதல் 08-08-2017 மாலை 04.12 மணி வரை.
கும்பம்             08-08-2017 மாலை 04.12 மணி முதல் 10-08-2017 இரவு 12.08 மணி வரை.
மீனம்                                10-08-2017 இரவு 12.08 மணி முதல் 13-08-2017 காலை 05.54 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

09-08-2017 ஆடி 24 ஆம் தேதி புதன்கிழமை துவிதியைதிதி சதய நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

11-08-2017 ஆடி 26 ஆம் தேதி வெள்ளிகிழமை சதுர்த்திதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1ஆம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, ராசியதிபதி செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்று சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் இருப்பது உங்கள் நிம்மதியை குறைக்கும் அமைப்பாகும். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படக் கூடும். கணவன்- மனைவியிடையே மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். எளிதில் முடியக் கூடிய காரியங்கள் கூட தாமதமாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழவி போகும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. முருக வழிபாடு குரு பகவான் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8, 9, 10.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, ராசியாதிபதி சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். பஞ்சமஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். புத்திர வழியில் சுப செய்திகள் கிடைக்கப்பெறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணயில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் திறமையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் ராகு, 6-ல் சனி சஞ்சரிப்பதால்  எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் சிறப்பு. கணவன்- மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின்பே வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். இருக்கும் எதிர்ப்புகள் குறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தாமதமாக கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். சிவ வழிபாடு, முருக வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 11, 12.

சந்திராஷ்டமம்      -              06-08-2017 காலை 06.06 மணி முதல் 08-08-2017 மாலை 04.12 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக சிந்தித்துச் செயல்பட்டால் தான் இருக்கும் பிரச்சனைகளை சமாளித்து வெற்றி அடைய முடியும். பணவரவானது சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. முடிந்தவரை ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது சிறப்பு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்கி கொள்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு மேற்கொள்வது துர்க்கையம்மனை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 6, 7.

சந்திராஷ்டமம்      -                              08-08-2017 மாலை 04.12 மணி முதல் 10-08-2017 இரவு 12.08 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் 2-ல் குரு 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமான பலன்கள் தாராள தனவரவு உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறலாம். பலரை வழி நடத்திச் செல்லக் கூடிய கௌரவமான பதவிகள் தேடி வரும். உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களினால் அலைச்சல், டென்ஷன்கள் ஏற்படக்கூடும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் உடனிருப்பவர்களையும், உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பிருக்காது. திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். புத்திர வழியிலும் சுப செய்திகள் வந்து சேரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8, 9, 10.

சந்திராஷ்டமம்      -              10-08-2017 இரவு 12.08 மணி முதல் 13-08-2017 காலை 05.54 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று சாதகமானப்பலனை அடைவீர்கள். எதிர்பாராத  உதவிகளும் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபம் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பொது நலக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்திலும் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது குரு பகவானை வழிபடுவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சாதகமாக அமையப்பெற்று 10-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். 11-ஆம் வீட்டில் புதன் ராகு இருப்பதால் தாராள பணவரவு உண்டாகி பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். நவினகரமான பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மனஅமைதியை அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது மேன்மையை உண்டாக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 11, 12.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, குரு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் 10-ல் புதன் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரியங்கள் கைகூடி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். சூரியன் செவ்வாய் 9-ல் இருப்பதால் இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவர்களிடம் இருந்த மந்த நிலை நீங்கி படிப்பில் சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் ஈடுபட்டு நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ராசியதிபதி குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் 8-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகள் அதிகரிக்ககூடும் என்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வெளிப்பயணங்களில் தேவையற்ற அலைச்சல்கள், வீண் விரயங்கள் உண்டாககூடும். உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவு செய்ய நேரிடும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தியாகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் நிலைமையை சமாளித்து விடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக்கூடும் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்த வித பிரச்சனைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையிடாமல் தம் பணிகளை மட்டும் செய்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ பெருமானை வழிபாடு செய்வதும் முருக வழிபாடு செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு, லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் பணவரவானது திருப்திகரமாக இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். அசையும் அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் 7-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் வாய்ப்பு இருப்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். எனினும் கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8, 11, 12.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, குரு சனி சாதகமற்று இருந்தாலும் 6-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பு என்பதால் நற்பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் கடன்களைக் குறைக்க முடியும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனி பகவானையும், குரு பகவானையும் வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும்  விளங்கும் மீன ராசி நேயர்களே, ராசிக்கு அதிபதி குரு ஜென்ம ராசியை பார்வை செய்வதும் 4-ல் சுக்கிரன் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நல்லது பல நடக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமாக சுபகாரியங்கள் கை கூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறப்புக்கள்  வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளாலும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பாலும் அபிவிருத்தி பெருகி முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.
தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8, 11, 12.


No comments: