Friday, September 15, 2017

வார ராசிப்பலன் செப்டம்பர் 17 முதல் 23 வரை 2017

வார ராசிப்பலன்  செப்டம்பர்  17 முதல்  23 வரை   2017
புரட்டாசி  01 முதல் 07 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் ( மாத  இதழ் )
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






திருக்கணித கிரக நிலை

சந்திர
ராகு
கேது
 
புதன்
செவ்
சுக்கி

சனி

குரு

சூரிய,

               
கிரக மாற்றம்  இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கடகம்              15-09-2017 இரவு 08.37 மணி முதல் 17-09-2017 இரவு 12.07 மணி வரை
சிம்மம்            17-09-2017 இரவு 12.07 மணி முதல் 20-09-2017 அதிகாலை 05.00 மணி வரை
கன்னி              20-09-2017 அதிகாலை 05.00 மணி முதல் 22-09-2017 மதியம் 12.04 மணி வரை
துலாம்            22-09-2017 மதியம் 12.04 மணி முதல் 24-09-2017 இரவு 09.52 மணி வரை

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
22-09-2017 புரட்டாசி 06 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியைதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசியை குரு பார்வை செய்வதால் உங்களது பலமும் வலிமையும் கூடும். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சோர்வு மந்த நிலை விலகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 22, 23.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, ராசியதிபதி சுக்கிரன் புதன் சேர்க்கைப் பெற்று 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சுக வாழ்வு சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தாராள பணவரவுகள் இருந்தாலும் உங்கள் ராசிக்கு குரு பகவான் சாதகமற்று சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் துணிவுடன் செயல்பட்டு ஏற்றங்களை அடைவீர்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களை குறைத்தால் அலைச்சல் குறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். குருப்ரீதி தட்சணாமூர்த்தியை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் --               17, 22, 23.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் 3-ல் செவ்வாயுடன் இருப்பது அற்புதமான அமைப்பாகும். குரு 5-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வரன்களும் தேடி வரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவாலயங்களுக்கு சென்று சிவ பெருமானை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் --               18, 19.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் யாவும பூர்த்தியாகும். கடன்கள் படிபடியாக குறையும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளுக்கிடையே இருந்த பிரச்சனைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். செவ்வாய் கிழமை விரதமிருந்து முருக கடவுளை வணங்குவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் --               17, 20, 21, 22.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெற முடியும். பண வரவுகள் தேவைக்கேற்ற படி இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். தொழில் வியாபாரத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று இருப்பதால் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. பிரதோஷ விரதங்கள் மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் --               18, 19, 22, 23.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரித்தாலும் 2-ல் குரு 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன்களை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். சஷ்டி விரதம் கடைபிடித்தால் அற்புதமான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் --               17, 20, 21, 22.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் செவ்வாய் புதனுடன் லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப்பலனை பெறுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். சிலருக்கு இட மாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலரால் அர்ச்சனை செய்தால் தொல்லை இல்லாத வாழ்வு கிட்டும்.

வெற்றி தரும் நாட்கள் --               17, 18, 19, 22, 23.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் 10-ஆம் வீட்டில் வலுவாக அமையப் பெற்று உடன் சுக்கிரன் புதன் இருப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணம் பல வழிகளில் வந்து சேரும். தேவைகள் பூர்த்தியாகும். வீடு வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும்பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். மாத கோளான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் கிட்டும். வெளியூர் தொடர்புடையளால் லாபம் அமையும்உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி ஈடுபாடு உண்டாகும். சனிப்ரீதியாக விநாயகரை வணங்குவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் --               18, 19, 20, 21, 22.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே மாத கோளான சூரியன் 10-ல் வலுவாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதுஅசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குரு பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த தேக்கங்கள் விலகி முன்னேற்றங்களை அடைவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும், லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் சுறுசுறுப்புடனும் புது உத்வேகத்துடன் செயல்பட்டு எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவார்கள். சனிக்கிழமை சனிபகவானை வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் --               20, 21, 22, 22, 23.

சந்திராஷ்டமம்                      15-09-2017 இரவு 08.37 மணி முதல் 17-09-2017 இரவு 12.07 மணி வரை

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சனியும் இருப்பதால் சகல விதத்திலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். பொன், பொருள், இடம் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கடன்கள் குறையும். 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்தால் பிரச்சனைகள் குறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம் முயற்சி செய்வது நல்லது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு செண்பகப்பூவால் அர்ச்சனை செய்தால் செவ்வாயின் பாதிப்புகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - -              17, 22, 23.

சந்திராஷ்டமம்      17-09-2017 இரவு 12.07 மணி முதல் 20-09-2017 அதிகாலை 05.00 மணி வரை

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாய் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும் என்பதால் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையிடாமால் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திக்க நேரிடும். என்றாலும் குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. ஞாயிற்று கிழமை சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் --               17, 18, 19.

சந்திராஷ்டமம்                      20-09-2017 அதிகாலை 05.00 மணி முதல் 22-09-2017 மதியம் 12.04 மணி வரை

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உற்றார் உறவினர்கள் வழியிலும் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சூரியன் 7-ல் குரு 8-ல் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்ஷன் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். வியாழக்கிழமை குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் --               18, 19, 20, 21.


சந்திராஷ்டமம்                      22-09-2017 மதியம் 12.04 மணி முதல் 24-09-2017 இரவு 09.52 மணி வரை.

No comments: