Friday, October 13, 2017

வார ராசிப்பலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 2017

வார ராசிப்பலன்  அக்டோபர் 15  முதல் 21  வரை   2017
( புரட்டாசி 29 முதல் ஐப்பசி 4 வரை )

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





 
திருக்கணித கிரக நிலை

ராகு சந்தி
கேது
 

சனி 

குரு
புதன்
  சூரிய செவ்
சுக்கி

கிரக மாற்றம்
17-10-2017 துலாத்தில் சூரியன் பகல் 12.35 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
சிம்மம்                            15.10.2017 காலை 06.21 மணி முதல் 17.10.2017 மதியம் 12.18 மணி வரை.
கன்னி                               17.10.2017 மதியம் 12.18 மணி முதல் 19.10.2017 இரவு 08.02 மணி வரை.
துலாம்                             19.10.2017 இரவு 08.02 மணி முதல் 22.10.2017 காலை 05.50 மணி வரை.

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதும் குரு, புதன் 7-ல் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தினை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சனி ப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டால் கெடுதிகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் -    17, 18, 19, 20, 21.             

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் வரும் 17-ஆம் தேதி முதல் மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7-ல் சனி சஞ்சரிப்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாக கூடும் என்பதால் சற்றே கவனம் எடுத்து கொள்வது நல்லது. தடைபட்ட திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற் கொண்டால் நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -    20, 21.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே தனக்காரகன் குரு 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் 2-ல் ராகு 4-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை ஏற்படும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் என்பதால் கணவன்- மனைவி தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்த்து விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கப் பெறும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -    15, 16, 17.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் 4-ல் புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கைகள் அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். வியாழக்கிழமை விரதமிருந்து குருவை வணங்கினால் நன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -    17, 18, 19.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் தற்போது நிலவும் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வதாலும், உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் நிலவும். முன் கோபத்தால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் மற்றவர்களிடம் பேசுகின்ற போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குரு 3-ல் இருப்பதால் பண விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு கூடுதலாகவே இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். செவ்வாய்க்கிழமை விரதமிருந்து முருக பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -    15, 16, 17, 20, 21.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சிவசப் படாமல் நிதானமாக இருந்தால் தான் எதையும் சமாளிக்க முடியும். உங்கள் ராசிக்கு 2-ல் குரு 3-ல் சனி 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்கள் ஏற்படும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். சிறப்பான பண வரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கப் பெறும். வெள்ளிக்கிழமை விரதமிருந்து மகாலட்சுமி தேவியை வணங்கினால் மங்கலங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -    17, 18, 19.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 12-ல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள், மனநிம்மதி குறைவு ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பணபற்றாக்குறையை சமாளிக்க முடியும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள், வாக்கு வாதங்கள் போன்றவை ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்திலும் கவனமாக செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். அதிக முதலீடு கொண்ட செயல்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -    15, 16, 17, 20, 21.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் சுக்கிரனுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் விலகி மனமகிழ்ச்சி அடைவீர்கள். பனவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி மற்ற கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். சனிக்கிழமை விரதமிருந்து சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் -    15, 16, 17, 18, 19.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் 11-ல் குரு சஞ்சரிப்பதும் 17-ஆம் தேதி முதல் சூரியன் 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும்கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர் வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனிக்கிழமை சனிபகவானை வழிபடுவதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு தானம் செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -    17, 18, 19, 20, 21.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதும் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் 10-ல் புதன் சஞ்சரிப்பதாலும் படிப்படியான வளர்ச்சிகளை அடைவீர்கள். எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். முடிந்த வரை நெருங்கியவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து சென்றால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் அதிக கவனம் செலுத்தி படிப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -    20, 21.

சந்திராஷ்டமம்                        15.10.2017 காலை 06.21 மணி முதல் 17.10.2017 மதியம் 12.18 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் சூரியன் செவ்வாய் 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பதும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் கவனமாக செயல்படுவதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படுவதை குறைக்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையின்மையால் மனநிம்மதி குறையலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். முருக வழிபாடு சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -    15, 16.

சந்திராஷ்டமம்                        17.10.2017 மதியம் 12.18 மணி முதல் 19.10.2017 இரவு 08.02 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன் செவ்வாய் 8-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய வல்லமையை பெறுவீர்கள். கூட்டாளிகளை  அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ வழிபாடு செய்வது பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -    15, 16, 17, 18, 19.


சந்திராஷ்டமம்                        19.10.2017 இரவு 08.02 மணி முதல் 22.10.2017 காலை 05.50 மணி வரை.

No comments: