Friday, November 10, 2017

வார ராசிப்பலன் நவம்பர் 12 முதல் 18 வரை 2017

வார ராசிப்பலன்
நவம்பர் 12 முதல் 18 வரை 2017
ஐப்பசி 26 முதல் கார்த்திகை 2 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






 
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது

  சந்தி
சனி 

புதன்
குரு
சூரிய சுக்கி
  செவ்


கிரக மாற்றம்
16-11-2017 விருச்சிக சூரியன் பகல் 12.22 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
சிம்மம் - 11-11-2017 பகல் 11.44 மணி முதல் 13-11-2017 மாலை 06.02 மணி வரை.
கன்னி - 13-11-2017 மாலை 06.02 மணி முதல் 16-11-2017 அதிகாலை 02.32 மணி வரை.
துலாம் - 16-11-2017 அதிகாலை 02.32 மணி முதல் 18-11-2017 மதியம் 12.50 மணி வரை.
விருச்சிகம் - 18-11-2017 மதியம் 12.50 மணி முதல் 20-11-2017 இரவு 12.44 மணி வரை.


இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
16-11-2017 ஐப்பசி 30 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம்.தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கூர்ந்து கவன¤க்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு ஆண்டு கோளான குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதும் செவ்வாய் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். மாத கோளான சூரியன் 7,8-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருந்தால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும்உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகப்பலனை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம். சிவ வழிபாடு செய்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள் -        14, 15, 16, 17.

சந்திராஷ்டமம் - 18-11-2017 மதியம் 12.50 மணி முதல் 20-11-2017 இரவு 12.44 மணி வரை.


ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்பு தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கதிபதி சுக்கிரன் 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் 3-ல் ராகு 7-ல் புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நிதானத்துடன் செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பொருளாதாரம் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையலாம். உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று இருப்பதால் புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். விளையாடும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். சனிக்குரிய கவசங்கள் படிப்பதால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 16, 17, 17, 18.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பது சுபிட்சத்தை ஏற்படுத்தும். மேலும் மாத கோளான சூரியன் வரும் 16-ம் தேதி முதல் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பாகும். இதனால் உங்கள் பொருளாதாரம் மேன்மையடையும். பணம் பல வழிகளில் தேடி வரும். கடன்கள் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய வலிமையும், வல்லமையும் உண்டாகும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 12,13, 18.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஒற்றுமை குறையாதுஉற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். பூர்வீக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல பல வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். துர்க்கையம்மனை வழிபட்டால் துயரங்கள் தீரும்.

வெற்றி தரும் நாட்கள் - 14, 15.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய் 3-ல் குரு சஞ்சரிப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு இருப்பதும் பண விஷயத்தில் சிக்கனத்துடன் செயல்படுவதும் நல்லது. மாத கோளான சூரியன் வரும் 16-ம் தேதி வரை 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் 6-ல் கேது சஞ்சரிப்பதும் சற்று சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். குரு பகவான் வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 16, 17, 18.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சுக்கிரன் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாராமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதொடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். மாத கோளான சூரியன் வரும் 16-ம் தேதி முதல் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணி புரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகளும், திறமைகேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் லாபகரமான பலன்களை அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அங்காரகனை வழிபட்டால் காரிய தடை விலகும்.

வெற்றி தரும் நாட்கள் - 14, 15, 18.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் குரு, சுக்கிரன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சனி 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி சற்று ஆறுதலை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடை தாமதங்களுக்கு பின் அனுகூலம் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட கடின உழைப்பு தேவை. தட்சிணாமூர்த்தி வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 16, 17, 18.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எவ்வளவு தான் கற்று அறிந்திருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் வலுவாக அமையப்பெற்று இருப்பதும் 3-ல் கேது இருப்பதும் நல்லது என்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும் என்றாலும் 12-ல் குரு சஞ்சரிப்பதால் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதன் மூலம் சனியின் கெடுதிகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15, 18.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு சுக்கிரனுடன் லாப ஸ்தானத்தில் வலுவாக இருப்பதாலும் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படலாம்தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை அடையும். கூட்டாளிகள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்புகரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். சர்ப கிரக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 14, 15, 16, 17, 18.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, குடும்பத்தில்  உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. மாத கோளான சூரியன் வரும் 16-ம் தேதி முதல் 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். அபிவிருத்தி பெருகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் உழைப்பிற்கான ஊதியம் பெருகும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் உழைப்பிற்கேற்ற பலனை பெறுவார்கள். தினமும் விநாயகர் வழிபாடு செய்தால் தடைகள் விலகி காரிய வெற்றி உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -  16, 17, 18.

சந்திராஷ்டமம் - 11-11-2017 பகல் 11.44 மணி முதல் 13-11-2017 மாலை 06.02 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். மேலும் மாத கோளான சூரியன் வரும் 16-ம் தேதி முதல் 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். ஆன்மீக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். ஆறுமுக கடவுளை வழிபட்டால் எண்ணிய காரியம் நிறைவேறும்.

வெற்றி தரும் நாட்கள் -        12, 13, 18.

சந்திராஷ்டமம் - 13-11-2017 மாலை 06.02 மணி முதல் 16-11-2017 அதிகாலை 02.32 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, ராசியதிபதி குரு சுக்கிரனுடன் 8-ல் இருப்பதாலும் 7-ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பதாலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய வாரமாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பிரதோஷ விரதம் மேற்கொண்டு சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15.


சந்திராஷ்டமம் - 16-11-2017 அதிகாலை 02.32 மணி முதல் 18-11-2017 மதியம் 12.50 மணி வரை

No comments: