Tuesday, November 7, 2017

Simma rasi – Sani peyarchi 2017 to 2020



சிம்மம் 
மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்

அஞ்சா நெஞ்சமும், பிறருக்கு அடிபணியாத குணமும், உயர்ந்த எண்ணங்களும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்கள் ராசியதிபதி சூரியனுக்கு பகை கிரகமான சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச்சனி நடைப்பெற்றதால் பலவித இன்னல்களை இதுவரை சந்தித்து வந்தீர்கள். வாக்கிய கணிதப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில், உங்கள் ராசியதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமான குரு வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளதால்  தேவையற்ற அலைச்சல்கள் குறையும். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக மறைந்து அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். அசையும், அசையா சொத்து வகையில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உற்றார்-உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து, நல்ல வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமை யாக செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். அரசுவழியில் தடைப்பட்ட உதவிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றங்களும், பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு உங்களின் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். தேவையற்ற வீண்செலவுகள் குறைந்து பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகி சேமிப்பு பெருகும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். எல்லா வகை யிலும் முன்னேற்றப்பலன்களை அடையமுடியும்.வெளியூர், வெளிநாடு களுக்குச் செல்லும் வாய்ப்பும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். சனி 5-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக்கோளான குரு பகவான் 3,4-ஆம் வீடுகளில் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் குரு 29-10-2019 முதல் 15-11-2020 வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கும் காலத்தில் பொருளாதார ரீதியாக மேன் மைகள் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தடைப் பட்ட திருமண சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்து சேர்க்கை அமையும். வம்பு வழக்குகளில் சாதகப்பலன் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். 27-7-2017 முதல் 12-2-2019 வரை கேது 6-லும், 13-2-2019 முதல் 1-9-2020 வரை 11-லும் ராகு சஞ்சரிக்க இருப்பது, சர்ப்ப கிரகங்கள் உங்கள் ராசிக்கு சாதகமாக சஞ்சரிக்கும் காலங்கள் ஆகும். 

உடல் ஆரோக்கியம்  

  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல்நிலை முன்னேற்றமடையும். எதிர்பாராத பயணங்களால் சற்றே அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மனநிறைவை உண்டாக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை 

குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். எடுக்கும் முயற்சி களில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். வீடு,மனை வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உற்றார்- உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் உதவ வேண்டிய நேரத்தில் உதவி செய்வார்கள். பொன் பொருள் சேரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். 

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி மற்றும் கொடுக்கல்-வாங்கலில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பெரிய  தொகையையும் எளிதாக ஈடுபடுத்தி லாபம் அடையமுடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதகமாக அமையும். கடன்கள் யாவும் குறையும்.

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடையமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் தொழிலை அபிவிருத்திச் செய்யும் நோக்கம் நிறைவேறும். புதிய நவீன கருவிகள் வாங்க அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவி கிட்டும். மறைமுக எதிர்ப்புகளும், போட்டி பொறாமைகளும் விலகும். கூட்டாளி மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். 

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல் களைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களும் சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும்.

பெண்கள்

தடைப்பட்ட சுபகாரியங்கள் நிறைவேறும். புத்திரபாக்கியம் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவு களும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். பணி புரியும் பெண்களுக்கு உயர்வுகள் கிட்டும். வீடு,மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

அரசியல்

  அரசியல்வாதிகளின் பெயர், புகழ், பெருமை உயரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் அனுகூலம் தரும். மறைமுக வருவாய்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சிற்கு மக்களிடையே செல்வாக்கு அதிகம் ஏற்படும். உடனிருப்பவர்களின் மூலமும் சாதகப் பலன் உண்டாகும்.

விவசாயிகள்

  பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். போதிய நீர்வரத்தும் உண்டாகும். சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்கப்பெறும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளும் கைகூடிய மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். புதிய நிலம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

கலைஞர்கள்

  புதிய வாய்ப்புகள் தேடிவரும். தடைப்பட்ட பணவரவுகளும் கிடைக்கப்பெறும். பொருளாதார நிலை உயரும். வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். இசை, பாடல், நடனத்துறைகளில் உள்ளவர்களும் சிறப்பான வாய்ப்புகளைப் பெறமுடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது.

மாணவ- மாணவியர்

  கல்வியில் நல்ல முன்னேற்றமும் உயர்வும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். விளையாட்டுத்துறைகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிட்டும். நல்ல நண்பர் களின் சேர்க்கை நற்பலனை உண்டாக்கும். அரசுவழியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் தடையின்றிக் கிட்டும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை

   சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 5-ல் சஞ்சரிப்பதாலும் கேது ருண ,ரோக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக உயர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையும் ஒற்றுமையும் இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். எடுக்கும் முயற்சிகளில்  எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறமுடியும்.  உடல் ஆரோக் கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குரு 3-ல் சஞ்சாரம் செய்வதால் சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிறுசிறு இடையூறுகளைச் சந்தித் தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் அமையும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனம் தேவை. தெய்வீகக் காரியங் களில் ஈடுபாடு உண்டாகும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை

   சனி பகவான் 5-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது, உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. 3-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கேது 6-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்கள் உயர்வுகளைச் சந்திப்பர். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நனவாகும்.கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்கள் பெயர், புகழ் உயரும். அசையா சொத்துகள் சேரும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை

 சனி பகவான் சர்ப்ப கிரகமான கேதுவின் நட்சத்திரத்தில் 5-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. முன் கோபத்தைக் குறைத்துக்கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது சிறப்பு. ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். குரு பகவான் 5-10-2018 முதல் 4-ல் சஞ்சரிப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் சுமாராக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பத மூலம் வீண்விரயங்களைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். கேது 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். வேலை யாட்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உடல்நிலையில் ஓரளவுக்குத் திருப்தியளிப்பதாக இருக்கும்.  குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை

  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் குருவின் வீட்டில் 5-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். தனவரவுகள் ஓரளவுக்குத் திருப்தி யளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபம் அடையமுடியும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்குக் கிடைக்கும். பொன்பொருள் சேரும். 12-ல் சஞ்சரித்த ராகு 13-2-2019 முதல் ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் உயர்வு களைப் பெறுவீர்கள். கடன்கள் குறைவதுடன் எதிர்பாராத பணவரவு களும் உண்டாகும். உத்தியோகத்தில் தடைப்பட்ட பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக எந்தவித எதிர்ப்பு களையும் சமாளித்து லாபம் காணமுடியும். கடன்கள் சற்று குறையும். விநாயகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை

  சனி பகவான் 5-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச் சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் கொடுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கக்கூடும். அசையா சொத்து வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எந்தக் காரியத்திலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். உடன்பணி புரிவர்களின் ஆதரவு கிட்டும். குரு பகவானுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை

  சனி பகவான் மூல நட்சத்திரத்தில் 5-ல் சஞ்சரிப்பதாலும், ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலன் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்குத் திருப்தியளிக்கும். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையுடன் அமையும். அன்றாடப் பணியில் சில இடையூறுகளை சந்தித்தாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலும் உண்டாகும். குரு பகவானுக்குப் பரிகாரம் செய்யவும்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை

   சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் 5-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை திருப்தியளிக்கும். 29-10-2019 முதல் குரு 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். உற்றார், உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். நீண்டநாள் கனவுகளும் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். புதிய தொழில் தொடங்க ஏதுவான காலமாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்குப் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பதவி உயர்வுகளும் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளாலும் நற்பலன்கள் உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை

  சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 5-ல் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும், 5-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஏஜென்ஸி கமிஷன், கான்ட்ரக்ட் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிட்டும். வெளிநாடு தொடர்புடையவற்றால் ஏற்றம் தரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். சுபகாரியங்கள் கைகூடும். பணவரவு சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெறுவர். எதிர்பாராத பயணங்களால் அனுகூலமான பலனைப் பெறமுடியும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கேதுவுக்குப் பரிகாரம் செய்து உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை

 ஜென்ம ராசிக்கு 5-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பது சாதக மற்ற அமைப்பு என்றாலும், 5-ல் குரு சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ஓரளவுக்கு ஏற்றத்தைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் சிறப்படையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் இடமாற்றங் களையும் பெறமுடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சில் சற்று நிதானத் தைக் கடைப்பிடித்து உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல அனுகூலங்களைப் பெறமுடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை

   சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் 5-ல் சஞ்சரிப்பதாலும், குரு 5-ல் சஞ்சாரம் செய்வதாலும் கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல்நிலையும் சுறுசுறுப்புடன் அமையும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்து சேர்க்கைகளும், பொன், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் அமையும். சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார்-உறவினர்கள் சாதகமாகக் செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பல பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். ராகு-கேதுவுக்கு சர்ப்பசாந்தி செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை

  சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் 5-ல் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெறமுடியும். ராகுவும் 11-ல் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். குரு 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சுமாராகவே இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் அதன்மூலம் அனுகூலமும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். வீண் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9, நிறம் : வெள்ளை, சிவப்பு, கிழமை : ஞாயிறு, திங்கள், கல் :  மாணிக்கம், திசை : கிழக்கு, தெய்வம் : சிவன்.

No comments: