Tuesday, November 14, 2017

Tula Rasi Sani peyarchi 2017 to 2020

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020  துலாம்
சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்


நேர்மையே குறிக்கோளாகக் கொண்டு தன்னம்பிக் கையுடன் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்ட துலாம் ராசி நேயர்களே! ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரித்த சனி வாக்கியப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் கடந்த ஏழரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஏழரைச்சனி முழுமையாக முடிவடைகிறது. உங்கள் ராசியதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் ஜென்ம ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதி என்பதால் மிகச்சிறந்த யோகக்காரகன் ஆவார். இதனால் இதுவரை உங்கள் வாழ்வில் இருந்து வந்த நெருக்கடிகள், பிரச்சினைகள் அனைத்தும் விலகி தொட்டதெல்லாம் பொன்னாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் அனைத்துத் தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். எதிர்பாராத தனவரவுகளும் ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் படிப்படியாக விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்பு பாராட்டுவார்கள். உடல் ஆரோக்கியமும் மேன்மை அடைவதால் மருத்துவச் செலவுகள் குறையும். திருமணவயதை அடைந்தவர்களுக்குத் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறி மனநிறைவை உண்டாக்கும். சிறப்பான குழந்தை பாக்கியமும் அமையும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பொன் பொருள் சேரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்துசேரும். வேலை ஆட்களால் சிறப்பான ஆதாயங்கள் உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். சனி 3-ல் சஞ்சரித்து அற்புதமான பலன்களை அள்ளித்தரும் இக்காலங்களில் குரு பகவானும் 5-10-2018 முதல் 28-10-2019 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். 13-2-2019 முதல் 1-9-2020வரை 3-ஆம் வீட்டில் கேது பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகளும் மறையும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து உங்கள் பலம் கூடும்.

உடல் ஆரோக்கியம்  

  உடல்நிலை மிக அற்புதமாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். மருத்துவச் செலவுகள் மறைந்து புதுப் பொலிவுடன் காட்சியளிப்பீர்கள். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள்விலகி ஒற்றுமை நிலவுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் அளவிற்கு சுறுசுறுப்புடன் திகழ்வீர்கள். 

குடும்பம், பொருளாதார நிலை 

   கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தாராள தனவரவுகளால் எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஆதரவு சிறப்பாக அமையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். சிறப்பான புத்திர பாக்கியத்தை பெறுவீர். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். 

கொடுக்கல்- வாங்கல்

  கமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் போன்றவற்றில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பெரிய தொகையையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதகமாக அமையும். கடன்கள் யாவும் குறையும்.

தொழில், வியாபாரம் 

   தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய பொற் காலமாக அமையும். வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். அரசுவழியில் சாதகமான பலன்கள் கிட்டும். புதிய கூட்டாளிகளும் சேர்ந்து உதவிகரமாக இருப்பார்கள்.

உத்தியோகம் 

  தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப் பெற்று உங்கள் கனவுகள் நனவாகும். உங்கள் திறமைக்குத் தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சிக்கடலில் நீந்துவீர்கள். அதிகாரிகளின் ஆதரவுகளும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளும் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ள உதவும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். செய்யும் பணிக்கேற்றபடி பாராட்டுதல்களும் கிடைக்கும். பெயர், புகழை உயர்த்திக்கொள்ள முடியும்.

பெண்கள்

  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பிரிந்த உறவுகள் ஒன்றுகூடி பூரிப்பு ஏற்படும். தடைப்பட்ட புத்திர பாக்கியத்தை பெற்று மனமகிழ்ச்சியை அடைவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அரசியல் 

  உங்களுக்கு இது பொற்காலம் என்றே சொல்லலாம். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளை சிறப்பாகச் செய்து முடித்து ஏற்றங்களைப் பெறுவீர்கள். மறைமுக வருவாய் பெருகும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பெயர், புகழுக்குப் பஞ்சம் ஏற்படாது. பொருளாதார நிலையும் உயர்வடையும். 

விவசாயிகள்

  பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். உழைப்புக்கேற்ற பலனை தடையின்றிப் பெறமுடியும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். புதிய வழிமுறைகளைக் கையாண்டு நல்ல விளைச்சலைப் பெருக்கமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். அசையும், அசையா சொத்துகளை வாங்குவீர்கள். கடன்கள் யாவும் நிவர்த்தியாகும்.

கலைஞர்கள்

   எதிர்பார்க்கும் கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று கனவுகள் நிறைவேறும். புதியபட வாய்ப்புகள் தேடிவந்து குவியும். பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்.

மாணவ- மாணவியர்

   கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். பல சாதனைகள் செய்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாடு சென்று பயிலும் வாய்ப்பு உண்டாகும். பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளிலும் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை

   சனி பகவான் சர்ப்ப கிரகமான கேதுவின் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும்.  திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உயர்வுகள் உண்டாகும். கடன்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அசையா சொத்து வகையில் அனுகூலங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிட்டும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது வீண் பிரச்சினைகளைக் குறைக்கும். தட்சிணாமுர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை

  சனி 3-ல் வக்ரகதியில் இருப்பதால் நற்பலன்கள் ஏற்படுவதில் தடைகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு போன்றவை ஏற்படும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டியிருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் பெரிய முதலீடுகள் ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொண்டே லாபத்தினைப் பெற முடியும். பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்படமுடியும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளிலும் தாமதம் உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை

   சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் குருவின் வீடான 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான அனுகூலப்பலனை அடைவீர்கள். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கடன்கள் குறையும். 5-10-2018 முதல், குரு ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று அதன்மூலம் பொருளாதார உயர் வினையும் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். 4-ல் ராகு சஞ்சரிப்பதால் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை

  சனி பகவான் ராசியதிபதி சுக்கிரனின் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பது, 2-ல் குரு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் திருப்தியளிக்கும். உடல்நிலை சிறப்பாக அமையும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் லாபம் அடைவீர்கள். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்யும் காரியங்களில் சிறப்பாக லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளையும், இடமாற்றங்களைப் பெறுவார்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சேமிப்பு பெருகும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை

   சனி 3-ல் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குடும்ப ஒற்றுமை குறைய வாய்ப்பு இருப்பதால் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுபக் காரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். 3-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குருவும் வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. புத்திரவழியில் மனசஞ்சலங்கள் ஏற்படும். அசையா சொத்துகளால் வீண்செலவுகள் உண்டாகும். உத்தியோஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் திருப்திகரமான சூழ்நிலைகளே நிலவும். பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதைத் தவிர்த்து உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.  தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது அலைச்சலைக் குறைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தைப் பெற்றுவிடுவீர்கள். இக்காலங்களில் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை

  சனி பகவான் சர்ப்ப கிரகமான கேது சேர்க்கை பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். கடன்கள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். பொன், பொருள் சேரும். எல்லாவகையிலும் மேன்மையானப் பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் குதூகலமும் இருக்கும். குரு ஜென்ம ராசிக்கு 2-ல் இருப்பதால் திருமண சுப காரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். உற்றார், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். அசையும், அசையா சொத்துகளை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நினைவாகும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை

  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேதுவின் சேர்க்கை பெற்று 3-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். மணமாகாதவர் களுக்கு சிறப்பான வரன் தேடிவரும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். 2-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் 29-10-2019 முதல் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை

  சனி பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதும், கேது 3-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன்-மனைவி இடை யே ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் மனநிறைவுடன் செயல்படமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எதிர் பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும். குரு 3-ல் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். குருவுக்குப் பரிகாரம் செய்வது சிறப்பு.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை

  சனி பகவான் 3-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெறமுடியும். குருவும் 3-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக் கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்-மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத் தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை

  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகள் தோன்றி மறையும். புத்திரவழியில் மனசஞ்சலங்கள் உண்டாகும். உடல் ஆரோக் கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய் பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலி லும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் பார்த்த உயர்வுகளை அடையமுடியும். மாணவர்களுக்கு நல்ல மதிப் பெண்கள் கிடைக்கப்பெறும். சர்ப்ப சாந்தி செய்வது நிம்மதியைத் தரும்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை

  சனி பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு உயரும். தாராள தனவரவுகளைக் கொடுக்கும். குடும்பத்தில் சிறப்பான ஒற்றுமை உண்டாகும். அசையும், அசையா சொத்துகளையும் வாங்க முடியும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்ச லங்கள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துகளாலும் வீண்பிரச்சினை களைச் சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு மணமாக சற்று தாமதமாகும். பொன், பொருள் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்படமுடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குருவுக்குப் பரிகாரம் செய்வது தடைகளைக் குறைக்கும்.

 அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 4, 5, 6, 7, 8, நிறம் : வெள்ளை, பச்சை, கிழமை : வெள்ளி, புதன், கல் : வைரம், திசை : தென் கிழக்கு      தெய்வம் : லக்ஷ்மி.

No comments: