Wednesday, November 15, 2017

Vaara rasi palan

வார ராசிப்பலன் நவம்பர் 19  முதல் 25 வரை   2017
கார்த்திகை 3 முதல் 9 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





 
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது

 
சனி 

புதன்
சூரிய
சந்தி
குரு
சுக்கி
  செவ்

கிரக மாற்றம்
24-11-2017 தனுசு புதன் பகல் 01.54 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
விருச்சிகம் - 18-11-2017 மதியம் 12.50 மணி முதல் 20-11-2017 இரவு 12.44 மணி வரை.
தனுசு - 20-11-2017 இரவு 12.44 மணி முதல் 23-11-2017 பகல் 01.41 மணி வரை.
மகரம் - 23-11-2017 பகல் 01.41 மணி முதல் 26-11-2017 அதிகாலை 01.59 வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
23-11-2017 கார்த்திகை 07 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமிதிதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
தைரியமும், அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எந்தவித பிரச்சனைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்களும் தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -    23, 24, 25.

சந்திராஷ்டமம் - 18-11-2017 மதியம் 12.50 மணி முதல் 20-11-2017 இரவு 12.44 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழியாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, ராகு உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள் என்றாலும் 6-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும்தொழில், வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்றே கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். சனி பகவான் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 19, 20.

சந்திராஷ்டமம் - 20-11-2017 இரவு 12.44 மணி முதல் 23-11-2017 பகல் 01.41 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
தன்னுடைய  ரசிக்கும் படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார ரீதியாக மேன்மைகளை உண்டாக்கும் அமைப்பாகும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஓற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமதத்திற்கு பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர், வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி, கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கையம்மன் வழிபாடு செய்வதால் துயரங்கள் விலகும்.

வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21, 22.

சந்திராஷ்டமம் - 23-11-2017 பகல் 01.41 மணி முதல் 26-11-2017 அதிகாலை 01.59 வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும், பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சனி சஞ்சரிப்பது வெற்றி மேல் வெற்றி தரக்கூடிய நல்ல அமைப்பாகும். 4-ல் சுக்கிரன் ஆட்சிப்பெற்று சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். உடல் நிலையில் சற்றே மந்தநிலை உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொன், பொருள் சேரும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். மஹா லட்சுமி வழிபாடு செய்தால் இல்லத்தில் மங்களம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23, 24, 25.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவில் தடை, நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து சிக்கல்களை சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் வந்து விலகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைக்கவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில ஆதாயங்களை அடைய முடியும். அசையும், அசையா சொத்துக்கள் விஷயத்தில் கவனம் தேவை. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லதுமாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை உண்டாக கூடும் என்பதால் விடாமுயற்சியுடன் படிப்பது உத்தமம். சஷ்டி விரதம் மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 23, 24, 25.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பண வரவுகள் தாராளமாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகலாம். உற்றார் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். வியாபார ரீதியான பயணங்களால் வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கூட்டாளிகள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். முருக வழிபாடு செய்தால் வாழ்வில் மேன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 19, 20.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. நிறைய போட்டிகளை சமாளித்தே லாபத்தை பெற வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல் சமாளிக்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மையை கொடுக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும் 3-ல் கேது சஞ்சரிப்பதும் அனுகூலமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். திருமண சுபகாரியங்கள் கை கூட சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தினைப் பெற முடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொண்டால் அனைவரின் ஆதரவுகளையும் பெறுவீர்கள். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 23, 24, 25.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பதை இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறுசிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். தொழிலாளர்களும், கூட்டாளிகளும் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். செவ்வாய் 10-ல் இருப்பதால் சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி வாய்ப்புகள் மற்றும் இடமாற்றமும் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழி சலுகைகள் கிடைக்கும். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்தால் சனியின் பாதிப்புகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக ஏற்றங்களை அடைவீர்கள். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். எதிர்பார்த்த லாபமும் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவார்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பும் அமையும். உடன் பணிபுரிபவர்களாலும் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் அமையும். விநாயகர் வழிபாடு செய்தால் காரிய வெற்றி உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 23, 24, 25.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தனக்கு பிடித்தவர்களிடம் அன்புடன் நெருங்கி பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத பிடிவாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். கடந்த கால கடன்கள் எல்லாம் விலகி சேமிக்கும் அளவிற்கு தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடிய ஆற்றலை பெறுவீர்கள். தொழிலாளர்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு முன்னேற்றத்தை கொடுக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 19,20, 21, 22, 23.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டு பிடித்து பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, ராசிக்கதிபதி குரு 8-லும், செவ்வாய் 7-லும் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வது என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர் நீச்சல் போட வேண்டி வரும். சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரியத் தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்பட வேண்டும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23, 24, 25.

No comments: