Thursday, December 14, 2017

2018 புத்தாண்டுப் பலன்கள் தனுசு




2018 புத்தாண்டுப் பலன்கள்  தனுசு  

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் 

ந்த காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றிகள் பல பெறக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2018-ஆம் ஆண்டில் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச்சனி தொடருகிறது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால்  நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உத்தமம். இந்த ஆண்டில் ராசியாதிபதியும் தன காரகனுமான குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகளை அடைவார்கள். பொன், பொருள் சேர்க்கைகளும் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலன் கிடைக்கும். வரும் 11.10.2018-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது மிகவும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு குரு மாற்றத்திற்குப் பிறகு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறு. உடல் சோர்வு, மந்தமான நிலை உண்டாகும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும் இந்த வருட குரு 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றலும் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது, நெருங்கியவர்களின் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது போன்றவை உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது. தேவையற்ற பயணகளைத் தவிர்ப்பது வீண் அலைச்சலைக் குறைக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த ஆண்டு குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, சுபிட்சம், பொருளாதார மேன்மை, திருமண சுப காரியங்கள் கைகூடக் கூடிய யோகம், புத்திர வழியில் பூரிப்பு போன்றவை ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதால் கடன்களும் குறையும். உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நற்பலனைத் தரும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றாலும் குரு 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகளும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் உண்டாகும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து அனைவரையும் அனுசரித்து நடப்பது, மற்றவர்களுக்கும் பணி நிமித்தமாக உதவிகளைச் செய்வது போன்றவை நற்பலனைத் தரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் போட்டி, பொறாமைகளால் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாமல் சமாளித்து விடமுடியும். குரு 11-ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலமான பலன்கள் அமையும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வங்கிக் கடன்களும் தீரும். 

பெண்களுக்கு

இந்த வருடம் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவை உண்டாகக் கூடும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்ற உதவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டு தன காரகன் குரு பகவான் 11-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவை சிறப்படையும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும் என்றாலும் ஏழரைச்சனி நடப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படக் கூடும் என்பதால் பெரிய தொகைகளைத் தவிர்த்து விடவும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகும் என்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளிலும் தடையும் தாமதமும் உணடாகும். கட்சிப் பணிக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். தேவையற்றப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் உடல் நிலை சோர்வடையும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். காய்கனி, பூ வகைகள் மூலம் ஓரளவுக்கு லாபங்களைப் பெற முடியும். கால்நடைகளாலும் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றாலும் லாபம் கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு

ஏழரைச் சனி நடைபெறுவதால் தொழிலில் முன்னேற்றத் தடைகள் ஏற்படும் என்றாலும் குரு பலமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான வாழ்க்கையும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவதும், உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். தேவையற்ற பயணங்களையும் தவிர்த்து விடவும்.

மாணவ- மாணவியர்களுக்கு

மாணவர்களின் கல்வியில் சற்று மந்தமானநிலை எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட முடியாத அளவிற்கு படிப்பில் கவனக் குறைவு போன்றவை இருந்தாலும் கிடைக்க வேண்டிய மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவுகள் மன நிறைவைத் தரும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்க்கவும்.

மாதப் பலன்கள்

ஜனவரி: ஜென்ம ராசியில் சூரியன், சனி, 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், வீண் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றாலும் லாப ஸ்தானமான 11-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவு மிகச் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு உயர்வுகளைத் தடையின்றி பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் : 03-01-2018 அதிகாலை 03.33 மணி முதல் 05-01-2018 அதிகாலை 03.55 மணி வரை மற்றும் 30-01-2018 மதியம் 03.00 மணி முதல் 01-02-2018 மதியம் 03.07 மணி வரை.

பிப்ரவரி: உங்கள் ராசியாதிபதி குரு 11-ல் சஞ்சரிப்பதும் மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களைத் தடையின்றிப் பெற முடியும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினைப் பெற முடியும். சனிக்குரிய பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 27-02-2018 அதிகாலை 12.32 மணி முதல் 01-03-2018 அதிகாலை 01.45 மணி வரை. 

மார்ச்: ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, மாதமுற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 26-03-2018 காலை 07.17 மணி முதல் 28-03-2018 காலை 10.02 மணி வரை. 

ஏப்ரல்: ஜென்ம ராசியில் சனி- செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குரு 11-ல் இருப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது மூலம் அனுகூலங்கள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும்.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்றுக் கூடுதலாக இருக்கும்.  முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 22-04-2018 மதியம் 12.39 மணி முதல் 24-04-2018 மாலை 04.00 மணி வரை. 

மே: ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, மாதபிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது, வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் நற்பலனைத் தரும். எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும்.  பூர்வீக சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால்  தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 19-05-2018 மாலை 06.54 மணி முதல் 21-05-2018 இரவு 09.26 மணி வரை. 

ஜூன்: மாதமுற்பாதியில் 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். குடும்பத்திலுள்ளவர்களால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை சந்தித்தாலும் பெரிய கெடுதியில்லை. பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று குறைவாகவே இருக்கும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம்: 16-06-2018 அதிகாலை 03.23 மணி முதல் 18-06-2018 அதிகாலை 04.21 மணி.

ஜூலை: மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சாரம் செய்வதும், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். குரு 11-ல் இருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தக்க சமயத்தில் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைப்பளு குறைவாகவே இருக்கும். சிவ பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 13-07-2018 மதியம் 01.43 மணி முதல் 15-07-2018 மதியம் 01.30 மணி வரை.  

ஆகஸ்ட்: இம்மாதம் 2-ல் செவ்வாய்- கேது, 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி  கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடையவார்கள். சிலருக்கு சொந்த வீடு, மனை வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்திலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 10-08-2018 அதிகாலை 12.26 மணி முதல் 12-08-2018 அதிகாலை 12.07 மணி.  

செப்டம்பர்: மாதககோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் லாப ஸ்தானமான 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். ராகு- கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 06-09-2018 காலை 09.46 மணி முதல் 08-09-2018 காலை 10.31 மணி வரை.   

அக்டோபர்: மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும் என்றாலும் 11-ஆம் தேதி முதல் குரு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது சிறப்பு. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 03-10-2018 மாலை 04.46 மணி முதல் 05-10-2018 இரவு 07.04 மணி வரை மற்றும் 30-10-2018 இரவு 10.11 மணி முதல் 02-11-2018 அதிகாலை 01.18 மணி வரை. 

நவம்பர்: ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளித்துவிட முடியும்.  கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக் கூடிய சூழ்நிலைகள், வீண்வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ள அனை வரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்குப்பின் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்துப் பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. சனிபகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 27-11-2018 அதிகாலை 04.17 மணி முதல் 29-11-2018 காலை 06.40 மணி வரை.

டிசம்பர்: இம்மாதம் 3-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்துகள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். ஜென்ம ராசியில் சனி, 2, 8-ல் கேது- ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமாக செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 24-12-2018 மதியம் 01.01 மணி முதல் 26-12-2018 மதியம் 01.41 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1, 2, 3, 9, கிழமை - வியாழன், திங்கள், திசை  -  வடகிழக்கு, நிறம்  - மஞ்சள், சிகப்பு, கல்   - புஷ்ப ராகம், தெய்வம் - தட்சிணா மூர்த்தி

No comments: