Wednesday, December 13, 2017

2018 புத்தாண்டுப் பலன்கள்- கடகம்




2018 புத்தாண்டுப் பலன்கள்- கடகம்  

புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

ல்ல அறிவாற்றலும் கற்பனை சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2018-ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில், வியாபார ரீதியாக மேன்மை மிகு பலன்கள் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலையும் அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் கௌரவங்களும் தேடி வரும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது, 4-ல் குரு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள், அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். 11.10.2018-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பஞ்சம ஸ்தானமாகிய 5-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால், பொருளாதார ரீதியாக மேன்மை உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் இறுதியில் திருமண சுப காரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லாத் தேவைகளும் நிறைவாகப் பூர்த்தியாகும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் யாவும் வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபத்தைப் பெற முடியும். சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். பிரிந்து சென்ற உறவினர்கள் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். அனைத்து கடன்களும் குறையும்.

உடல் ஆரோக்கியம்

ஜென்ம ராசியில் ராகு 7-ல் கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் படிப்படியான ஆரோக்கிய முன்னேற்றத்தை அடைவீர்கள். இந்த வருடம் முழுவதும் ஆயுள் காரகனான சனி பகவான் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் மனநிலையும், உடல் நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரால் இருந்த பிரச்சினைகள், மருத்துவச் செலவுகள் யாவும் குறைந்து நிம்மதி நிலவும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

சனி 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். எல்லா தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 11.10.2018 முதல் குரு பஞ்சம ஸ்தானமாகிய 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் கூட தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். 

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையக் கூடிய காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. சனி 6-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகளும் ஊதிய உயர்வுகளும் தேடி வரும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் சிறப்பாக அமையும். 

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபத்தை அடைய முடியும். போட்டி, பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் மறைவதால் புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வரும். சொன்ன நேரத்திற்கு ஆர்டர்களையும் சப்ளை செய்வதால் மேலும் மேலும் முன்னேற்றங்களைப் பெற முடியும். புதிய இடங்களில் கிளைகள் நிறுவும் நோக்கங்களும் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப் பெறும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவுகள் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் ஒற்றுமை, பொருளாதார மேன்மை, திருமண சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு போன்றவையும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள் சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகங்களும் உண்டாகும். பணிபுரியக் கூடிய பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் 4-ல் சஞ்சரித்தாலும், சனி சாதகமாக சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும் கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிட்டும். குருப்பெயர்ச்சிக்குப் பின் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். 

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனியே 6-ல் பலமாக சஞ்சரிப்பதால் மக்களின் அமோக ஆதரவும் உங்கள் பக்கமே இருக்கும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றலும் மறைமுக எதிர்ப்புகளை வெல்லும் வலிமையும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். நெல் முதல் தானியங்கள் வரை. காய் முதல் பழ வகைகள் வரை சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையைப் பெற முடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத தன சேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம் ஏற்படும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு இந்த ஆண்டு தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்த கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். உங்களின் திறமைகளுக்கு நல்ல தீனி கிடைப்பதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் இருக்காது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள்.

மாணவ- மாணவியருக்கு

மாணவ- மாணவியர்களின் கல்வித் திறன் மேலோங்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பள்ளி, கல்லூரிகளுக்கும் உங்களால் பெருமை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தேடி வரும். பெரிய மனிதர்களின் ஆதரவும் கிட்டும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் தட்டிச் செல்வீர்கள்.

மாதப் பலன்கள்

ஜனவரி: ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், சனி, 5-ல் புதன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி பொருளாதாரம் மேம்படும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தடைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலிருந்த பிரச்சினைகள் விலகி கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும். செய்யும் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 19-01-2018 மதியம் 02.17 மணி முதல் 22-01-2018 அதிகாலை 12.48 மணி வரை. 

பிப்ரவரி: ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, 7-ல் சுக்கிரன், புதன் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை நல்லபடியாக பெருக்க உதவும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பண வரவுகள் தாராளமாக அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய திருமண சுபகாரியங்களும் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தினமும் விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 15-02-2018 இரவு 08.39 மணி முதல் 18-02-2018 காலை 06.33 மணி வரை.  

மார்ச்: இம்மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பது உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 6-ல் சனியும், 7-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். உற்றார், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைப்பதோடு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 15-03-2018 அதிகாலை 04.13 மணி முதல் 17-03-2018 மதியம் 01.36 மணி வரை.  

ஏப்ரல்: ஜென்ம ராசிக்கு 6-ல் சனி- செவ்வாய், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உங்களின் சிறந்த அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும், அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் : 11-04-2018 மதியம் 12.38 மணி முதல் 13-04-2018 இரவு 10.08 மணி வரை.  

மே: உங்கள் ராசிக்கு மாதக்கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சனி- செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார மேம்பாடுகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 08-05-2018 இரவு 09.01 மணி முதல் 11-05-2018 காலை 07.16 மணி வரை.  

ஜூன்: உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சனி சஞ்சாரம் செய்வதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் நல்ல லாபங்கள் கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 05-06-2018 அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2018 மதியம் 03.48 மணி வரை. 

ஜூலை: ஜென்ம ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதும், 7-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் ஏற்ற இறக்கமான பலன்களையே அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். முடிந்தவரை குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். சிவ வழிபாடு உத்தமம். 

சந்திராஷ்டமம்: 02-07-2018 பகல் 11.10 மணி முதல் 04-07-2018 இரவு 11.00 மணி வரை மற்றும் 29-07-2018 மாலை 05.09 மணி முதல் 01-08-2018 அதிகாலை 05.00 மணி வரை.

ஆகஸ்ட்: ஜென்ம ராசியில் சூரியன், ராகு 7-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது உத்தமம். குடும்பத்தில் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 25-08-2018 இரவு 11.18 மணி முதல் 28-08-2018 காலை 10.45 மணி வரை. 

செப்டம்பர்: ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறும் ஆற்றல் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும், அசையா சொத்துகளும் சேரும். உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கடன்களும் நிவர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-09-2018 காலை 06.15 மணி முதல் 24-09-2018 மாலை 05.21 மணி வரை.   

அக்டோபர்: ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, மாதமுற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும், 11-ஆம் தேதி முதல் குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிட்டும். ராகு- கேதுவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம். 

சந்திராஷ்டமம்: 19-10-2018 மதியம் 02.06 மணி முதல் 22-10-2018 அதிகாலை 01.18 மணி வரை.  

நவம்பர்: உங்கள் ராசிக்கு இம்மாதம் 4-ல் சுக்கிரன், 5-ல் குரு, புதன், 6-ல் சனி சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 15-11-2018 இரவு 10.23 மணி முதல் 18-11-2018 காலை 10.09 மணி வரை.  

டிசம்பர்: இம்மாதம் ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதும் மாதபிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 13-12-2018 காலை 06.17 மணி முதல் 15-12-2018 மாலை 06.45 மணி வரை. 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்     - 1, 2, 3, 9, நிறம்    - வெள்ளை, சிவப்பு, கிழமை- திங்கள், வியாழன்,  கல் - முத்து, திசை- வடகிழக்கு, தெய்வம்- வேங்கடாசலபதி.

No comments: