Thursday, December 14, 2017

2018 புத்தாண்டுப் பலன்கள் துலாம்




2018 புத்தாண்டுப் பலன்கள் துலாம் 

சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்

மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ வெளிக்காட்டாமல் வாழும் ஆற்றலும், தன்னுடைய சொந்த கருத்துகளைக் கூட சிந்தித்து வெளிப்படுத்தும் தன்மையும் கொண்ட துலா ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் ஜென்ம ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோககாரகனான சனிபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் இந்தாண்டு முழுவதும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் சற்றே விலகுவதால் தடைப்பட்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கை, கால் வலி, சோர்வு போன்றவை உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். 11.10.2018 முதல் குருபகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் இறுதியில் சாதகமான பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். 

உடல் ஆரோக்கியம்

உடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்படக்கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக அமைவார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். சனி பகவான் 3-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் உங்களின் தேக ஆரோக்கியத்தில் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாகச் சரியாகும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் வல்லமையும் இருக்கும். 

குடும்பம், பொருளாதார நிலை

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த வகையிலும் பணநெருக்கடியோ, உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடோ ஏற்படாது. தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். திருமண சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள் 11-10-2018 முதல் குரு 2-ல் சஞ்சரிப்பதால் நிறைவேறிவிடும். விரோதிகளும் நட்புக்கரம் நீட்டுவார்கள். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் யாவும் சேரும். குடும்ப ஒற்றுமையும் சிறப்பாகவே இருக்கும்.

உத்தியோகம்

சனி பகவான் முயற்சிஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உத்தியோக நிலையில் உயர்வான பலன்களை அடைவீர்கள். இருக்கும் இடத்தில் ராஜமரியாதை கிடைக்கும். உங்களின் நிர்வாகத்திறனும், செயலாக்கமும் அனைவரையும் வியப்படையச் செய்யும், உயர்பதவிகள் தேடி வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப எதிர்பார்க்கும் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது. நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் பெருகும். கூட்டாளிகள் மிகவும் நட்புடன் செயல்பட்டு ஆதரவாக இருப்பார்கள். தொழிலாளர்களின் உதவிகள் மேலும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் உதவிகள் கிட்டும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல மேன்மைகள் அமையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன், பொருள், சேரும். புத்திரர்களால் மகிழ்ச்சி நிலவும். ஆன்மிக தெய்வீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு பூமி, மனை, வண்டி, வாகன வாங்கும் யோகம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சாதகமான பலனை அடைவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். இந்த ஆண்டு முற்பாதியில் குரு பகவான் ஜென்ம ராசியில் சாதகமின்றி சஞ்சரித்தாலும் ஆண்டு முழுவதும் சனி சாதகமாக சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் லாபங்களைப் பெற முடியும்.

அரசியல்வாதிகளுக்கு

இந்த வருடம் மக்கள் செல்வாக்கிற்கு காரகனாகிய சனி 3-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். எதிர்பாராத மாண்புமிகு பதவிகள் தேடி வரும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலனை அளிக்கக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். மகசூல் பெருகும். விளைபொருளுக்கேற்ற விலையினை சந்தையில் பெறுவீர்கள். கால்நடைகளாலும் லாபம் அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். அசையாச் சொத்து வகையிலிருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் விலகும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கேற்ற கதாபாத்திரங்கள் அமைவதால் உங்கள் திறமைகள் அனைத்தும் வெளிப்படும். அரசு வழியில் கௌரவிக்கப்படுவீர்கள். பணம் வரவுகளும் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். ஆடம்பர பங்களாக்களும், கார் வசதிகளும் உண்டாகும். வெளிநாடுகளுக்கும் படப் பிடிப்பிற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். நல்ல முயற்சியுடன் பாடுபட்டால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் நட்பும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஈடுபட்டு பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள்.

மாதப் பலன்கள்

ஜனவரி: ஜென்ம ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் ஏற்படும் என்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம்: 26-01-208 மதியம் 01.15 மணி முதல் 28-01-2018 மதியம் 02.58 மணி வரை. 

பிப்ரவரி: ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் 3-ல் சனி சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 22-02-2018 இரவு 07.27 மணி முதல் 24-02-2018 இரவு 10.45 மணி வரை.  

மார்ச்: இம்மாதம் 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக அமைவார்கள். குரு பகவானுக்குப் பரிகாரம் செய்வது நல்லது.    

சந்திராஷ்டமம்: 22-03-2018 அதிகாலை 12.52 மணி முதல் 24-03-2018 அதிகாலை 04.21 மணி வரை.

ஏப்ரல்: ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 18-04-2018 காலை 07.39 மணி முதல் 20-04-2018 காலை 10.04 மணி வரை.  

மே: ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவ டையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை உண்டாகும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 15-05-2018 மதியம் 04.32 மணி முதல் 17-05-2018 மாலை 05.42 மணி வரை.  

ஜூன்: ஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பண விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்து நல்லது. அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-06-2018 அதிகாலை 02.41 மணி முதல் 14-06-2018 அதிகாலை 03.26 மணி வரை.

ஜூலை: இம்மாதம் 3-ல் சனி, 10-ல் புதன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனைத் தரும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 09-07-2018 மதியம் 12.34 மணி முதல் 11-07-2018 மதியம் 02.03 மணி வரை.  

ஆகஸ்ட்: உங்கள் ராசிக்கு மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 3-ல் சனி சஞ்சாரம் செய்வதால் உடல் நிலை ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது. 

சந்திராஷ்டமம்: 05-08-2018 இரவு 08.47 மணி முதல் 07-08-2018 இரவு 11.50 மணி வரை. 

செப்டம்பர்: ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, மாத முற்பாதியில் 11-ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளும் சாதகமாக இருப்பார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 02-09-2018 அதிகாலை 03.03 மணி முதல் 04-09-2018 காலை 07.32 மணி வரை மற்றும் 29-09-2018 காலை 08.28 மணி முதல் 01-10-2018 மதியம் 01.18 மணி வரை.

அக்டோபர்: உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் சனி சஞ்சரிப்பதும், 11-ஆம் தேதி முதல் குரு தன ஸ்தானமான 2-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. 

No comments: