Thursday, January 18, 2018

வார ராசிப்பலன்- -ஜனவரி 21 முதல் 27 வரை

வார ராசிப்பலன்- -ஜனவரி 21 முதல்  27 வரை 
தை 8 முதல் 14 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






சந்தி
திருக்கணித கிரக நிலை

ராகு
சூரிய கேது  சுக்கி

புதன் சனி
செவ்
குரு
 
                                                               
கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கும்பம்               19-01-2018 மதியம் 02.17 மணி முதல் 22-01-2018 அதிகாலை 12.48 மணி வரை.
மீனம்                  22-01-2018 அதிகாலை 12.48 மணி முதல் 24-01-2018 காலை 08.39 மணி வரை.
மேஷம்             24-01-2018 காலை 08.39 மணி முதல் 26-01-2018 மதியம் 01.15 மணி வரை.
ரிஷபம்              26-01-208 மதியம் 01.15 மணி முதல் 28-01-2018 மதியம் 02.58 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
22.01.2018 தை 09 ஆம் தேதி திங்கட்கிழமை பஞ்சமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 09.45 மணிக்குள் கும்பம் இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் புதன், 10-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களும் படிப்பில் முழு ஈடுபாடு செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 21, 24, 25, 26.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தைரியத்துடன் செயல்பட்டு எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. 6-ல் குரு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவில் இடையூறு, உடனிருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம் என்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. முடிந்தவரை உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. சனி பகவான் வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -- 21, 22, 23, 26, 27.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக அமைந்து உங்களது பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும். மேலும் 6-ல் செவ்வாய் இருப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எதிரிகள் கூட உங்களுக்கு நண்பர்களாக மாறுவார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சிறப்பான லாபம் கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் சூரியன் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23, 24, 25, 26.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும், ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலவும் நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்து லாபகரமான பலன்கள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு குரு பகவான் சாதகமற்று இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களை செய்யாமல் இருப்பதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். குடும்பத்தில் கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கப்பெறும். மாணவர்களின் படிப்பில் இருந்த மந்தநிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் --       24, 25, 26, 27.

சந்திராஷ்டமம் -         19-01-2018 மதியம் 02.17 மணி முதல் 22-01-2018 அதிகாலை 12.48 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் புதன், 6-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் இருக்ககூடிய பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த தடைகள் யாவும் விலகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சற்று கடின முயற்சி மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -- 21, 26, 27.

சந்திராஷ்டமம் -         22-01-2018 அதிகாலை 12.48 மணி முதல் 24-01-2018 காலை 08.39 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் கேந்திர ஸ்தானமான 4-லும், 5-ல் சுக்கிரன், 11-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். மேலும் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -21, 22, 23.

சந்திராஷ்டமம் - 24-01-2018 காலை 08.39 மணி முதல் 26-01-2018 மதியம் 01.15 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்களுக்கு இவ்வாரம் ஜென்ம ராசியில் குரு, 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், இருப்பதை அனுபவிக்க தடை உண்டாகும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும் உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டானாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவினாலும் 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் தக்க சமயத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே திறம்பட செயல்பட முடியும். முருக வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 26, 27.

சந்திராஷ்டமம் -         26-01-208 மதியம் 01.15 மணி முதல் 28-01-2018 மதியம் 02.58 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். எனினும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எந்த விஷயத்திலும் நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்ணைப் பெற முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 26, 27.

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது, முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைக்கலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களில் சற்று தாமதநிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் அவர்கள் மூலம் வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளை தவிர்ப்பது சிறப்பு. சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        21, 26, 27.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது. உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, புதன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் வலுவாக இருப்பதும் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் இந்த வாரத்தில் நடக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கூட எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறலாம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். சிவ வழிபாடு நல்லது.

வெற்றி தரும் நாட்கள் --       21, 24, 25, 26.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் புதன், லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுக்கு பஞ்சமில்லாமல் உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பொன், பொருள் சேரும். கணவன்--- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபார ரீதியாகவும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடந்த கால தேக்கங்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப்பெறும். உடன் பணிபுரிபவர்களாலும் அனுகூலப்பலன் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். வியாழக்கிழமை குருபகவான் வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23, 26, 27.



No comments: