Wednesday, February 14, 2018

வார ராசிப்பலன் பிப்ரவரி 18 முதல் 24 வரை


வார ராசிப்பலன்
பிப்ரவரி  18 முதல் 24 வரை 
மாசி  6 முதல் 12 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

சந்தி



சுக்கி சூரிய புதன்
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது

சனி
  செவ்
குரு
 

கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம்                                18-02-2018 காலை 06.33 மணி முதல் 20-02-2018 மதியம் 02.07 மணி வரை.
மேஷம்           20-02-2018 மதியம் 02.07 மணி முதல் 22-02-2018 இரவு 07.27 மணி வரை.
ரிஷபம்            22-02-2018 இரவு 07.27 மணி முதல் 24-02-2018 இரவு 10.45 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
19.02.2018 மாசி 07 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி கிட்டும். குரு பகவான் 7-ல் பலமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் சிறு தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். முருக வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 21, 22.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ஆம் வீட்டில் சூரியன், புதனுடன் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள நெருக்கடிகள் படிபடியாக குறையும். உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் நடந்து கொண்டால் அவர்கள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில் ஈடுபடாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண் பெறலாம். தட்சிணாமூர்த்தி மற்றும் முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 23, 24.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்திலும் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்பு கரம் நீட்டுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். திருமண சுபமுயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்கி பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21, 22.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராகு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்றாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எந்த சிக்கலையும் எதிர்கொள்ளகூடிய ஆற்றலை பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. துர்கையம்மனை வழிபாடு செய்தால் மேன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23, 24.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் சுபாவம் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 7-லும், 4-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குரு 3-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 23, 24.

சந்திராஷ்டமம் -   18-02-2018 காலை 06.33 மணி முதல் 20-02-2018 மதியம் 02.07 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும் சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 6-ல் சூரியன் சஞ்சரிப்பது வெற்றி மேல் வெற்றி ஏற்படுத்த கூடிய உன்னதமான அமைப்பாகும். குரு பகவான் தன ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.  பிள்ளைகள் வழியிலும் நல்ல செய்திகள் கிடைக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். கடன்கள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஒருசில ஆதாயங்கள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்களால் நல்ல வாய்ப்புள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்தழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சனிக்கிழமை சனிபகவானுக்கு சங்கு மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 18, 19.

சந்திராஷ்டமம் -   20-02-2018 மதியம் 02.07 மணி முதல் 22-02-2018 இரவு 07.27 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க தயங்காத பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் புதன் சேர்க்கைப் பெற்று 5-ல் சஞ்சரிப்பதும் 3-ல் சனி சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களை அடைவீர்கள். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். உடல் நிலையில் இருந்த சிறுசிறு பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயர் அதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21, 22.

சந்திராஷ்டமம் -   22-02-2018 இரவு 07.27 மணி முதல் 24-02-2018 இரவு 10.45 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் கடினமாக உழைத்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு மற்றும் சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23, 24.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், புதன், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். சிறப்பான லாபங்களும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி புது உற்சாகத்துடனும் தெம்புடனும் செயல்பட்டு முன்னேற்றம் அடைவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் சிறப்பான பலன் கிட்டும்.

வெற்றி தரும் நாட்கள் - 23, 24.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகள் கூட சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் வீண் அலைச்சல்கள் டென்ஷன்கள் ஏற்படக்கூடும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் முயற்சி செய்தால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -18, 19.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். செவ்வாய் 10-ல் இருப்பதால் எதிர்பார்த்த வாய்ப்புகள் எளிதில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் படிபடியாக குறையும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு 8-ல் சஞ்சரிப்பதாலும் 12-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சிக்கனமாக நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் சற்று குறைய நேரிடும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். சிவ வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 23, 24.


No comments: