Friday, April 13, 2018

விளம்பி வருட பலன்கள் 2018-2019 துலாம்






விளம்பி வருட பலன்கள் 2018-2019
துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
மகிழ்ச்சியையோ துக்கத்தையோ பெரிதுபடுத்தாமல் அனைத்தையும் சமமாக பாவிக்கும் பண்பு கொண்ட துலா ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியும், ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமுமான சனிபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் தொழிலாளர்களின் ஆதரவும் மென்மேலும் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் பதவி உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும்.
ஆண்டின் தொடக்கத்தில் பொன்னவன் என போற்றக்கூடிய குருபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை, உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டாலும் வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற பல நாள் கனவுகளும் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். சர்ப கிரகமான கேது 4-ஆம் வீட்டிலும், ராகு 10-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், தொழில் ரீதியாக மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் சனியின் சாதகமான சஞ்சாரத்தால் எந்த விதமான பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் ;
உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் மிகவும் சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பாராத வகையில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் நன்மையான பலன்களே கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் உங்களால் சமாளித்து விட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை;
ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சுமாராக இருந்தாலும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் சிறப்பாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர பாக்கியம் அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன்கள் படிப்படியாக குறையும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சிந்தித்து செயல்பட்டால் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதிக்கு மேல் மேன்மையான பலன்களை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல்களில் எந்த பிரச்சினையும் இருக்காது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் பல வகையிலும் லாபங்களை பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமானப் பலன்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்பட முடியும். வேலைபளுவும் குறைவாகவே இருக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவமான பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது புரட்டாசி மாதம் 25-ஆம் தேதிக்கு மேல் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிட்டும்.
பெண்கள்
எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் கைகூடும். நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.
அரசியல்
அரசியல்வாதிகளின் செல்வம், செல்வாக்கு பெயர், புகழ், யாவும் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உடனிருப்பவர்கள் மிகவும் சாதகமாக செயல்படுவார்கள். கட்சியின் வளர்ச்சிக்காக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். எதிர்பார்க்கும் பதவிகளும் தேடி வரும். மறைமுக வருவாய் அதிகரிப்பதால் பொருளாதார நிலை உயரும். 
விவசாயிகள்
பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருப்பதால் சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலைப் பெற்று லாபம் உண்டாகும். பட்டபாட்டிற்கான பலனை தடையின்றி பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். அசையா சொத்து விஷயங்களில் இருந்த தேவையற்ற வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். புதிய நவீன முறைகளை கையாண்டு விளைச்சளை பெருக்கும் ஆற்றல் உண்டாகும்.
கலைஞர்கள்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். வரவேண்டிய பணவரவுகள் சற்று இழுபறி நிலையில் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் மேன்மை ஏற்படும். புதிய கார் பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் யாவும் மறையும்.
மாணவ- மாணவியர்
கல்வி பயிலுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிட்டும். கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றி மேல் வெற்றியினை பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். நல்ல நண்பர்களின் சகவாசத்தால் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். சுற்றுலா தளங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும்.

சித்திரை
ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.  புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.
வைகாசி
ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 7-ல் புதன் சஞ்சரிப்பதும், ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலிருந்த நெருக்கடிகள் குறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும்.  நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். தொழில் வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைவார்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
ஆனி 
இம்மாதம் ராசிக்கு 3-ல் சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன் சஞ்சரிப்பதும் 10-ல் ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் செல்வம், செல்வாக்கு உயரும். தாராள தன வரவுகளால் பொருளாதார மேம்படும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகளையும் வாங்க முடியும். பூர்வீக சொத்துகளாலும் லாபங்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு மணமாகக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபார செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
ஆடி 
முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 10-ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தினை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
ஆவணி
முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 10-ல் புதன் 11-ல் சூரியன், சஞ்சாரம் செய்வதால் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெற கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகி சுபிட்சமான நிலையிருக்கும். 7ம் வீட்டை குரு பார்வை செய்வதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை அடைவார்கள்.  தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
புரட்டாசி 
சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டி வரும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகள் நிலவும் என்றாலும் சனி 3-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த லாபத்தினையும் பெற முடியும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
ஐப்பசி 
தன ஸ்தானமான 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வேலைப் பளு குறையும். சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது.
கார்த்திகை 
ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். 2-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். பிரதோஷகால விரதம் இருப்பது நல்லது.
மார்கழி 
இம்மாதம் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 3-ல் சனி, சூரியன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். தினமும் விநாயகரை வழிபடுவது, துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
தை
ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் கடந்த காலப் பிரச்சினைகள் குறையும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
மாசி 
இம்மாதம் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 5-ல் புதன் சஞ்சரிப்பதால் பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி உயர்வுகளும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக இருக்கும். தேக ஆரோக்கியமும் நல்ல முறையில் இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் கேது 3-ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். முருக வழிபாடு செய்வது நல்லது.
பங்குனி 
இம்மாதம் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, கேது 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். முருக வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்   - 5,6,7,8
நிறம்   - வெள்ளை, பச்சை,
கிழமை - வெள்ளி, புதன்,
திசை   - தென் கிழக்கு,
கல்     - வைரம்
தெய்வம் - லட்சுமி

No comments: