Thursday, April 12, 2018

விளம்பி வருட பலன்கள் 2018-2019 ரிஷபம்


விளம்பி வருட பலன்கள் 2018-2019
ரிஷபம்      கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வமும் சமூக சேவைகளில் நாட்டமும் கொண்ட ரிஷபராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடத்தின் தொடக்கத்தில் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், சனி பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டம சனி நடைபெறுவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள், நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. ராகு பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். அஷ்டம சனி நடைபெற்றாலும் சனிபகவான் உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார்.
                வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகி அனைத்தும் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திர பாக்கியம் உண்டாக கூடிய அமைப்பு கொடுக்கும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளிலும் நல்லதொரு தீர்வு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் மறைந்து சரளமான நிலை ஏற்படும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். ஆண்டின் முற்பாதியில் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் பிற்பாதியில் முன்னேற்றங்களை அடைய முடியும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு ஒரளவுக்கு மேன்மைகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். வாழ்வில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து முன்னேறுவீர்கள்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் ஆண்டின் முற்பாதியில் தேவையற்ற மனக்கவலைகள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக அமைந்து கடன்கள் அனைத்தும் குறையும். புதிய நவீன பொருட் சேர்க்கைகள் அமையும். உற்றார் உறவினர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
காண்ட்ராக்ட் கமிஷன், ஏஜென்ஸி போன்ற துறைகளில் உள்ளவர்கள் ஆண்டின் முற்பாதியில் தேவையற்ற பிரச்சினைகள், பணவரவில் தடைகள் போன்றவற்றை சந்தித்தாலும் புரட்டாசி மாதம் முதல் தாராள தன வரவுகள் அமைவதால் கொடுக்கல்- வாங்கலில் சரள நிலைகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகள் பைசலாகும். கடன்களும் தடையின்றி வசூலாகும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் ஆண்டின் முற்பாதியில் நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் நிலவினாலும் புரட்டாசி மாதம் ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்கு பிறகு நல்ல வளர்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் முற்பாதியில் தடைகள் நிலவினாலும் புரட்டாசி மாதம் முதல் தடைகள் விலகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகளும் பூர்த்தி ஆகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமானப் பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும்.
உத்தியோகம்
ஆண்டின் முற்பாதியில் எதிலும் தடை தாமதங்களையும் வீண் பழிச் சொற்களையும் சந்தித்தாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு அனைத்து பிரச்சினைகளும் பகலவனை கண்ட பனிபோல் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். சிலர் வேண்டிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு அலைச்சல்கள் சற்று அதிகரிக்க கூடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது மிகவும் உத்தமம்.
அரசியல்
இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவதும், மேலிடத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. மக்களின் ஆதரவைப் பெற கொஞ்சம் அதிக முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் உத்தமம். புரட்டாசி மாதம் முதல் உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக அமையும். எதிர்பாராத மாண்புமிகு பதவியும் கிட்டும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராமல் ஏற்படக் கூடிய வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். புரட்டாசி மாதம் முதல் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். உழைப்பிற்கேற்ற அனுகூலமானப் பலன்கள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத பண உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் குறையும்.
கலைஞர்கள்
இந்த ஆண்டின் முற்பாதியில் புதிய வாய்ப்புகளில் தடை, தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கி பத்திரிக்கை மூலம் அவமானங்கள் உண்டாக கூடிய நிலை ஏற்பட்டாலும் புரட்டாசி மாதம் முதல் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். இசை, நடனத் துறைகளில் உள்ளவர்களுக்கும் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று அதிக ஈடுபாடுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். உடன் பழகும் மாணவர்களிடம் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நலத்தில் சோர்வு ஏற்படும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

சித்திரை
ஜென்ம ராசிக்கு 6-ல் குரு, 8-ல் சனி, செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்களால் நிம்மதி குறைவுகள் உண்டாகும் என்பதால் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சில நேரங்களில் போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் எதையும் எளிதில் வென்றுவிட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளுக்குப் பின் சரியாகும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. முருகப் பெருமானை வழிபடவும்.
வைகாசி 
தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று வேகத்தை சற்று குறைக்கவும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளாலும் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நற்பலனை தரும்.
ஆனி
தன ஸ்தானமான 2-ல் புதன், 3-ல் ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை அடைய முடியும். பொருளாதார நிலையிலும் ஏற்ற இறக்கமான நிலை நிலவும் என்றாலும் எதிர் பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
ஆடி
ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு, 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. நினைத்ததை ஒரளவுக்கு நிறைவேற்ற முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் இல்லாமல் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். குடும்பத்தில் ஏற்படக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சற்று மந்தமான  நிலையில் நடைபெற்றாலும் லாபம் கிட்டும். முருகப் பெருமானை வழிபடவும்.
ஆவணி
சுக ஸ்தானமான 4-ல் சூரியன், 6-ல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். தேவையற்ற விரயங்களை எதிர்கொள்வீர்கள். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
புரட்டாசி
பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், 3-ல் ராகு சஞ்சரிப்பது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் காரியங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கணவன்- மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் எதிர்பாராத உதவிகளை பெறுவீர்கள். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை பெற்றுவிட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம். 
ஐப்பசி 
இம்மாதம் 3-ல் ராகு, 6-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்-- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனை பெற முடியும். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பூர்வீக சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மனநிம்மதி உண்டாகும். சனிபகவானை வழிபடுவது நல்லது.
கார்த்திகை 
ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு, புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். 8ல் சனி இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
மார்கழி 
இம்மாதம் 7-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். 8-ல் சூரியன் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது மனநிம்மதியைத் தரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது, பிறர் விஷயங்களில் தலையிடு செய்யாது இருப்பதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது, பிரதோஷகால விரதம் இருப்பது உத்தமம்.
தை
இம்மாதம் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு, சுக்கிரன் 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உங்களது அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். சனிப்பீரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
மாசி
ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு, 10-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறும் ஆற்றல் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் சேரும். உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ராகு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது நல்லது. அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
பங்குனி 
இம்மாதம் 7-ல் குரு, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொ¬கைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்       - 5,6,8,
நிறம்     - வெண்மை, நீலம்
கிழமை - வெள்ளி, சனி
கல்        - வைரம்
திசை  - தென்கிழக்கு
தெய்வம் - விஷ்ணு, லட்சுமி

No comments: