Friday, April 13, 2018

விளம்பி வருட பலன்கள் 2018-2019 மீனம்











விளம்பி வருட பலன்கள் 2018-2019
மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
கம்பீரமான தோற்றமும், பிறரை வசீகரிக்க கூடிய அழகான உடல் அமைப்பும் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் முழுவதும் சனிபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், உங்கள் ராசியாதிபதி குருபகவான் ஆண்டின் முற்பாதியில் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் கேது பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பண வரவுகள் சுமாராகத்தான் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் உண்டாக கூடிய தேவையற்ற வாக்கு வாதங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு வேலைபளு அதிகரிப்பதோடு தேவையற்ற பிரச்சினைகளையும் சந்திக்க கூடிய நிலை ஏற்படும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனுகூலமற்ற பலன்களை சந்திக்க நேரிடும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேற கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை, பொருளாதார ரீதியாக உயர்வுகள், கடன்கள் படிப்படியாக குறைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பொன் பொருள் சேரும். வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய அமைப்பு உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். உத்தியோக ரீதியாக எதிர்பாராத உயர்வுகளை அடைவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்.
உடல் ஆரோக்கியத்தில் ஒரளவுக்கு சிறப்பான நிலை இருக்கும் என்றாலும் அடிக்கடி ஏதாவது சிறு சிறு பாதிப்பு உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் ஏற்பட்டு சேமிப்புக் குறையும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது மூலம் மன நிம்மதி உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை;
பணவரவுகள் திருப்தியளிப்பதாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் புரட்டாசி மாதத்திற்கு பிறகு கைகூடும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குழந்தை பாக்கியமும் உண்டாகும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். முடிந்த வரை உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்த்த லாபத்தை பெறுவதில் இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு சரளமான நிலை உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போதும், பண விஷயத்தில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுக்கும் போதும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எந்தவொரு புதிய முயற்சிகளிலும் வீண் இழப்புகளை சந்திக்க நேரிடும். ஆண்டின் முற்பாதியில் நெருக்கடி நிலையை சந்தித்தாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு படிப்படியான முன்னேற்றத்தை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிட்டும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் முற்பாதியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் நிம்மதி குறைவு ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பே கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.
பெண்கள்
குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். புத்திர வழியில் சிறுசிறு மனச் சஞ்சலங்கள் தோன்றி மறையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் நல்ல வரன்கள் தேடி வரும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது.
அரசியல்
எடுக்கும் எந்தவொரு பணியையும் சிறப்பாகச் செய்து முடிக்க முடியாமல் மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். பத்திரிகைகளால் உங்களுக்கு அவப்பெயர்கள் உண்டாகும். வரும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு  பொருளாதார நிலை மேம்படும். செல்வாக்கு உயரும். எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கும். மேடை பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது, உடனிப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமையும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று இருந்தாலும் எதையும் சமாளிப்பீர்கள். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சியை தரும். எல்லா வகையிலும் லாபங்களையும் முன்னேற்றங்களையும் பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
கலைஞர்கள்
ஆண்டின் தொடக்கத்தில் மற்றக் கலைஞர்களுடன் ஏற்படும் போட்டிகளால் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு உங்களுக்கு அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கும். வரவேண்டிய பணத்தொகைகள் சில தடைகளுக்குப் பின் வந்து சேரும். படபிடிப்புகளுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். கார், பங்களா போன்றவற்றை வாங்க முடியும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் அதிக ஈடுபாடு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஒரளவுக்கு முன்னேற்றப் பலனை அடைய முடியும். சிலருக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புக்கள் ஏற்பட்டு பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நல்ல நண்பர்களாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. வியை£ட்டு போட்டிகளில் பரிசுகளை தட்டி செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிட்டும்.

சித்திரை
தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது பிரச்சினைகளை குறைக்கும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும். துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
வைகாசி 
முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பெற சற்றே தாமத நிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
ஆனி 
ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் இடமாற்றங்களும், உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். குருபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
ஆடி 
இம்மாதம் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், 11-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு அனுகூலங்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடிகள் நிலவினாலும் மந்தநிலை ஏற்படாது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.
ஆவணி
இம்மாதம் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் சூரியன், 11-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். நவீன பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குருபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
புரட்டாசி 
இம்மாதம் ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் குரு, சுக்கிரன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் உங்கள் ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு 9-ல் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
ஐப்பசி 
ஜென்ம ராசிக்கு 9-ல் குரு, 11-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
கார்த்திகை 
ராசிக்கு 9-ல் குரு, புதன் 11-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும். உற்றார், உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். எதிர்பாராத தனவரவுகளால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மார்கழி 
ராசிக்கு 9-ல் குரு, புதன் 10-ல் சூரியன், 11-ல் கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
தை 
இம்மாதம் உங்கள் ராசிக்கு 9-ல் குரு, சுக்கிரன், 11-ல் சூரியன், கேது சஞ்சாரம் செய்வதால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துகள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் சிறப்பான லாபம் அமையும். கடன்கள் யாவும் குறையும். உடல் நிலையில் சற்றே கவனம் செலுத்தவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
மாசி
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 10-சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். 2-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியும் பெருகும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 10-கேது சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்று கூற முடியாது. முருக வழிபாடு செய்வது நல்லது.
பங்குனி 
ராசிக்கு 9-ல் ராசியாதிபதி குரு, 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பு என்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும் பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நற்பலனை உண்டாக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்    - 1,2,3,9,
கிழமை  - வியாழன், ஞாயிறு
திசை   - வடகிழக்கு
நிறம்    - மஞ்சள், சிவப்பு
கல்     - புஷ்ப ராகம்
தெய்வம் - தட்சிணாமூர்த்தி


No comments: