Friday, April 13, 2018

விளம்பி வருட பலன்கள் 2018-2019 கும்பம்



விளம்பி வருட பலன்கள் 2018-2019
கும்பம்  அவிட்டம் 3,4-ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் முழுவதும் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதுமட்டுமின்றி ராகு பகவான் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் முற்பாதியில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நற்பலன்களை அள்ளி தரும் காலமாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறி மட்டில்லா மகிழ்ச்சியினை அடைவீர்கள்.
பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சுபகாரியங்களும் கைகூடக்கூடிய வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். உற்றார், உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கிருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி உங்கள் பலமும் வலிமையும் கூடும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் மேற்கொள்ளும் பயணங்களால் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு நல்ல பெயரை எடுப்பார்கள். எதிர்பார்க்கும் உயர் பதவிகளும், ஊதிய உயர்வுகளும், இட மாற்றங்களும் கிடைக்கப் பெறும். வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு சிறுசிறு போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஆண்டின் பிற்பாதியில் சற்று கவனமுடன் செல்படுவது நல்லது.

உடல் ஆரோக்கியம்;
உடல் ஆரோக்கியத்தில் இருந்த கடந்த கால பாதிப்புகள் விலகி சிறப்பான ஆரோக்கியத்தை பெறுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியினை அடைவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் நோயின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
குடும்பம் பொருளாதார நிலை;
திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்த உறவினர்கள் தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கடன்கள் யாவும் குறையும். பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத மகிழ்ச்சி தரும் சுபசெய்திகள் வந்து சேரும்.
கொடுக்கல்- வாங்கல்
காண்டிராக்ட் கமிஷன் ஏஜென்சி போன்ற துறைகளில் சிறப்பான லாபம் கிடைக்கும். போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருப்பதால் பண புழக்கம் சிறப்பாக இருக்கும். கொடுத்த பணத்தை தடையின்றி வசூலிக்க முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பும் நட்பும் நற்பலனை உண்டாக்கும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளை பெற முடியும்.  தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் மேலும் முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு வழியில் கடனுதவி கிடைக்கும்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் வேலைபளு குறைவதால் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் அபிமானியாக மாறுவீர்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலன்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.
பெண்கள்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். மணவயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் பூரிப்பினை பெறுவீர்கள். பணவரவுகள் சரளமாக இருப்பதால் சேமிக்க முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலம் உண்டாகும். உற்றறர் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள்.
அரசியல்
எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகளை பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பாராத கௌரவ பதவிகள் தேடி வரும். கட்சி பணிகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதோடு அவர்களின் ஆதரவைப் தொடர்ந்து பெறுவதற்காக புதுபுது முயற்சிகளை கையாள்வீர்கள். பணவரவுகளும் தாராளமாக இருக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருப்பதால் சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலை கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகளும் கிடைக்கும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வேலையாட்களின் உதவி கிடைக்கும். பொருளதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
கலைஞர்கள்
எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் புதிய வாய்ப்புகள் மூலம் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்து சேரும். சொகுசு கார், பங்களா போன்றவற்றை வாங்க முடியும். நடிப்பு துறையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இசை, நடனம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பினை பெறுவீர்கள். உடன் பயிலும் மாணவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். விளையாட்டு போட்டிகளிலும் வெற்றிகளை தட்டி செல்ல முடியும். அரசு வழியில் எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கும். நினைத்த கல்வியினை தேர்ந்தெடுத்து படிக்க முடியும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும்.

சித்திரை
முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் ராகு, 9-ல் குரு 11-ல் செவ்வாய், சனி சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகம் அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். அரசு வழியில் அனுகூலங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர்களுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
வைகாசி 
பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு, 9-ல் குரு, 11-ல் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
ஆனி 
ராசிக்கு 5-ல் புதன் 6-ல் சுக்கிரன், ராகு, 9-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உடல் நிலை சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பயணங்களால் புதிய அனுபவங்கள் கிட்டும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ஆடி 
ராசிக்கு 6-ல் ராகு, சூரியன், 9-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளும் சாதகமாக இருப்பார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
ஆவணி 
இம்மாதம் ராசிக்கு 6-ல் ராகு, புதன், 9-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
புரட்டாசி 
ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்றாலும் 8-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையே பெற முடியும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.
ஐப்பசி 
ராசிக்கு 9-ல் சுக்கிரன், புதன், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமத நிலை நிலவும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் லாபங்களை பெற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
கார்த்திகை 
இம்மாதம் ராசிக்கு 10-ல் சூரியன், புதன் 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பெருகும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்து நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்யவும்.
மார்கழி
ஜென்ம ராசிக்கு 9-ல் சுக்கிரன், 11-ல் சனி, சூரியன் சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் உண்டாகி புதிய வாய்ப்புகள் கிட்டும். உடல் நிலை ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
தை 
ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சனி, புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளும் சாதகமாக இருப்பார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
மாசி
முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் 11-ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன்பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ஜென்ம ராசிக்கு 11-ல் கேது சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
பங்குனி
தன ஸ்தானமான 2-ல் புதன், 3-ல் செவ்வாய் 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். நவீன பொருட் சேர்க்கைகள் அமையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலித்து விட முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்  - 5,6,7,8,
கிழமை - வெள்ளி, சனி
திசை  - மேற்கு
நிறம்  - வெள்ளை, நீலம்
கல்   - நீலக்கல்
தெய்வம் - ஐயப்பன்

No comments: