Thursday, April 26, 2018

வார ராசிப்பலன் - ஏப்ரல் 29 முதல் மே 5 வரை


வார ராசிப்பலன் - ஏப்ரல்  29 முதல் மே 5 வரை 
சித்திரை 16 முதல் 22 வரை


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


புதன்
சூரிய
சுக்கி

               
திருக்கணித கிரக நிலை


ராகு
கேது

செவ் சனி(வ)
 

குரு(வ) சந்தி  

               

கிரக மாற்றம்
02.05.2018 மகர செவ்வாய் மாலை 04.15 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
துலாம்               29-04-2018 அதிகாலை 01.58 மணி முதல் 01-05-2018 காலை 09.35 மணி வரை.
விருச்சிகம்     01-05-2018 காலை 09.35 மணி முதல் 03-05-2018 இரவு 07.48 மணி வரை.
தனுசு                  03-05-2018 இரவு 07.48 மணி முதல் 06-05-2018 காலை 08.17 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
02.05.2018 சித்திரை 19 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

04.05.2018 சித்திரை 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் சுக்கிரன் பலமாக சஞ்சரிப்பதும் வரும் 2-ஆம் தேதி முதல் உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் உச்சம் பெற்று சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம். அம்மன் வழிபாடு விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        29, 30.

சந்திராஷ்டமம் -         01-05-2018 காலை 09.35 மணி முதல் 03-05-2018 இரவு 07.48 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் ஏற்படும். வரும் 2-ஆம் தேதி முதல் இதுநாள் வரை 8-ல் சஞ்சரித்த செவ்வாய் 9-ல் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். முருக வழிபாடு மற்றும் சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் --       29, 30, 1, 2, 3.

சந்திராஷ்டமம் -         03-05-2018 இரவு 07.48 மணி முதல் 06-05-2018 காலை 08.17 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றாலும், சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 10-ல் புதன் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை, கை கால் அசதி, சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைசல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -        1, 2, 3, 4, 5.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சனி 10-ல் சூரியன் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடிக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். செவ்வாய்க்கிழமை முருக வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் --       4, 5.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் இருக்கும் பிரச்சினைகள் ஓரளவு குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். வரும் 2-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் உச்சம் பெற்று சஞ்சரிக்க உள்ளதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டு. கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்று குறையும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். விஷ்ணு பகவானையும் லட்சுமி தேவியையும் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -        29, 30.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் மாத கோளான சூரியன் சஞ்சரிப்பதும் சுக ஸ்தானமான 4-ல் சனி சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமதநிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் சற்று கவனத்துடன் பழகுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு குறையும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடு செய்வதும், சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        29, 30.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்டு  தன்னம்மிக்கையுடன் செயல்படும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடையும் யோகம் உண்டு. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. சூரியன் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில இடையூறுகள் ஏற்படும் என்பதால் சற்று கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள் என்றாலும் மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்ற பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடு செய்வதும், விநாயகர் வழிபாடு செய்வதும் மேன்மைகளை உண்டாக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -        29, 30, 4, 5.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதும் வரும் 2-ஆம் தேதி முதல் ராசியதிபதி செவ்வாய் 3-ல் உச்சம் பெற்று சஞ்சரிக்க உள்ளது மூலம் உங்கள் பலமும் வலிமையும் கூடக்கூடிய காலமாகும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் உண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். சனி வழிபாடும் சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடும் செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -        1, 2, 3.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, ராசியதிபதி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் செவ்வாய், சனி ஜென்ம ராசியில் இருப்பதாலும் எதிலும் நிதானமாக இருப்பது, கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.  பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் வீண் செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிக்க முடியும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முருக கடவுளையும், துர்கையம்மனையும் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் -        29, 30, 4, 5.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ள கூடிய தைரியம் கிட்டும். 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற அலைச்சல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, மற்றவர்களிடம் வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபமுயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். சிவ வழிபாடும், முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        29, 30, 1, 2, 3.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களுடன் இருந்த சிறுசிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான உறவு உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். தொடர்ந்து விநாயகர் வழிபாடு செய்து வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        1, 2, 3, 4, 5.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம்.  திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய தாமதநிலை ஏற்படும். வரும் 2-ஆம் தேதி முதல் செவ்வாய் 11-ல் உச்சம் பெற்று சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.  பண வரவுகள் தேவைகேற்ப அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் நிறைவேறும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்த நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது பேச்சில் நிதானமாக கடைபிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்களுக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -        4, 5.

சந்திராஷ்டமம் -         29-04-2018 அதிகாலை 01.58 மணி முதல் 01-05-2018 காலை 09.35 மணி வரை.


No comments: