Thursday, April 5, 2018

வார ராசிப்பலன்- - ஏப்ரல் 8 முதல் 14 வரை



வார ராசிப்பலன்- - ஏப்ரல்  8 முதல் 14 வரை 
பங்குனி 25 முதல் சித்திரை 1 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


சூரிய
புதன்(வ)
சுக்கி


               
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது 

செவ் சனி
சந்தி
 

குரு(வ)               
 


கிரக மாற்றம்
14-04- 2018 மேஷ சூரியன் காலை 08.13 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
தனுசு                  06-04-2018 பகல் 11.38 மணி முதல் 09-04-2018 அதிகாலை 12.19 மணி வரை.
மகரம்                09-04-2018 அதிகாலை 12.19 மணி முதல் 11-04-2018 மதியம் 12.38 மணி வரை.
கும்பம்               11-04-2018 மதியம் 12.38 மணி முதல் 13-04-2018 இரவு 10.08 மணி வரை.
மீனம்                  13-04-2018 இரவு 10.08 மணி முதல் 16-04-2018 அதிகாலை 04.10 மணி வரை.

இந்த வாரத்தில் சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக நற்பலனை தரக்கூடிய அமைப்பாகும். 4-ல் ராகு 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களையும், ஆடம்பரச் செலவுகளையும் குறைத்துக் கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும். துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபடுவதும், சிவ வழிபாடு செய்வதும் சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -        9, 10, 11, 12, 13.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட  ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் மாத கோளான சூரியன், புதனுடன் இணைந்திருப்பது சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.  தொழில், வியாபாரம், செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. மேலும் அஷ்டம ஸ்தானமான 8-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் செல்கின்ற போது கவனமாக இருப்பது உத்தமம். குரு வக்ர கதியில் இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல் படமுடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். தூர பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சலை குறைக்கலாம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு செய்வதும், சனீஸ்வரர்க்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நற்பலன்களை கொடுக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -        11, 12, 13, 14.

சந்திராஷ்டமம் -         06-04-2018 பகல் 11.38 மணி முதல் 09-04-2018 அதிகாலை 12.19 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.  தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகி முன்னேற்றங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் முடிந்த வரை கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகயை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். ராகு காலங்களில் அம்மன் வழிபாடு செய்வதும் முருக வழிபாடு செய்வதும் நன்மையை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -        8, 14.

சந்திராஷ்டமம் -         09-04-2018 அதிகாலை 12.19 மணி முதல் 11-04-2018 மதியம் 12.38 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு உபஜெய ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய் சாதமாக சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்ககூடிய அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நன்மையை செய்வார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வதால் மகிழ்ச்சி, நிம்மதி ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது, பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். அம்மன் வழிபாடு செய்வதும் விஷ்ணு வழிபாடு செய்வதும் சிறப்பான பலன்களை தரும்.

வெற்றி தரும் நாட்கள் -        8, 9, 10.

சந்திராஷ்டமம் -         11-04-2018 மதியம் 12.38 மணி முதல் 13-04-2018 இரவு 10.08 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கினாலும் 6-ல் கேது சஞ்சரிப்பதாலும் குரு வக்ர கதியில சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளகூடிய பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையே காணப்படும் என்றாலும் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு தேவையற்ற பொழது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.  தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -        9, 10, 11, 12, 13.

சந்திராஷ்டமம் -         13-04-2018 இரவு 10.08 மணி முதல் 16-04-2018 அதிகாலை 04.10 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சனி, செவ்வாய் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் அவசர படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் இருந்தால் தான் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை திரும்ப கேட்பதால் சில வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. முருக கடவுளுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் -        11, 12, 13, 14.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்-- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியிலும் ஆதாயங்கள் கிட்டும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும், படிக்கும் மாணவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        8, 14.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
முன்கோபம் உடையவராகவும், எளிதில்  உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகளும், உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகளும் உண்டாகும் என்றாலும் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் 3-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ள முடியும். குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே வெற்றியினைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சனிப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் முருக வழிபாடு செய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        9, 10, 11.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன் 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். செவ்வாய், சனி ஜென்ம ராசியில் இருப்பதால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். முருக மற்றும் சிவ வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -        8, 11, 12, 13.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் பலமாக சஞ்சரிப்பதும் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பென்பதால் உங்களது முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுதால் மகிழ்ச்சி நிலவும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வைகளாலும் லாபம் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் சில உதவிகள் தடையின்றி கிட்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவுகள்  மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        9, 10, 11, 14.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் புதன், லாப ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண, சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தொடர்ந்து விநாயகர் வழிபாடும் சிவ வழிபாடும் செய்து வந்தால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -        8, 11, 12, 13.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன  ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 10-ல் செவ்வாய், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவி  இடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். தூர பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வதும் நந்தி வழிபாடு செய்வதும் சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -        8, 9, 10, 11, 14.


No comments: