வார ராசிப்பலன் - மே 20 முதல் 26 வரை
வைகாசி 6 முதல் 12 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர்
முருகு
பால
முருகன்
Dip in astro, B.Com,
B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.
வடபழனி,
சென்னை - 600
026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
புதன்
|
சூரிய
|
சுக்கி
|
|
திருக்கணித
கிரக நிலை
|
சந்தி ராகு
|
|
கேது செவ்
|
|
||
சனி(வ)
|
|
குரு(வ)
|
|
கிரக மாற்றம் இல்லை
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கடகம் 19-05-2018
மாலை 06.54 மணி முதல் 21-05-2018 இரவு 09.26 மணி வரை.
சிம்மம் 21-05-2018
இரவு 09.26 மணி முதல் 24-05-2018 அதிகாலை 01.52 மணி வரை.
கன்னி 24-05-2018
அதிகாலை
01.52 மணி முதல் 26-05-2018 காலை 08.16 மணி வரை.
துலாம் 26-05-2018
காலை 08.16 மணி முதல் 28-05-2018 மாலை 04.38 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
20.05.2018
வைகாசி 06 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை
25.05.2018
வைகாசி 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி ஹஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சூரியன் 2-ல் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். போட்டிகளை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்றவை உண்டாகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி
தரும்
நாட்கள்
- 24, 25, 26.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் தடையின்றி கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். சனிக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
வெற்றி
தரும்
நாட்கள்
- 20, 21, 26.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் சிக்கனமாக செயல்பட்டால் கடன்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளி வட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல் படுவார்கள். விநாயகர் மற்றும் முருக வழிபாடு செய்வது சிறப்பு.
வெற்றி
தரும்
நாட்கள்
- 22, 23.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் புதன் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். கடன்களும் படிப்படியாகக் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். 7-ல் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் ஓரளவு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைபளு குறையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி
தரும்
நாட்கள்
- 20, 21, 24, 25.
சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும் 10-ல் சூரியன் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க கூடிய யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில தாமதப் பலன் உண்டாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிரமம் இருக்காது. தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலரால் அர்ச்சனை செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்-.
வெற்றி
தரும்
நாட்கள்
- 22, 23, 26.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சிரமமின்றி முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ராசிக்கு குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைளுக்கு மற்றவர்களை நம்பி கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பம் அமையும். முருக வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி
தரும்
நாட்கள்
- 20, 21, 24, 25.
துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், கேது அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல் தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது மூலம் அவர்களால் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என்றாலும் முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிவ மற்றும் முருக வழிபாடு செய்வது சிறந்தது.
வெற்றி
தரும்
நாட்கள்
- 20, 21, 22, 23, 26.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் 3-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சூரியன் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கடன்கள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் ஓரளவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றுவார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் பல இருந்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெற அவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமை கேற்ப வேலை வாய்ப்பு அமையும். அம்மன் வழிபாடு செய்வதும், சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் சிறந்தது.
வெற்றி
தரும்
நாட்கள்
- 24, 25, 26.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் மட்டும் சற்று நிதானமாக இருந்தால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். முருக கடவுளையும் அம்மனையும் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி
தரும்
நாட்கள்
- 24, 25, 26.
சந்திராஷ்டமம் - 19-05-2018
மாலை 06.54 மணி முதல் 21-05-2018 இரவு 09.26 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 7-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மேலும் இந்த வாரத்தில் தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 4-ல் புதன் சஞ்சரிப்பதாலும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபமும் கிட்டும். கடன் பிரச்சனைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி
தரும்
நாட்கள்
- 20, 21, 26.
சந்திராஷ்டமம் - 21-05-2018
இரவு 09.26 மணி முதல் 24-05-2018 அதிகாலை 01.52 மணி வரை.
கும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். சூரியன் 4-ல் இருப்பதால் இருப்பதை அனுபவிப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவினைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியிலும் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷன்கள் குறையும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி
தரும்
நாட்கள்
- 20, 21, 22, 23.
சந்திராஷ்டமம் - 24-05-2018
அதிகாலை
01.52 மணி முதல் 26-05-2018 காலை 08.16 மணி வரை.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பல்வேறு வகையில் முன்னேற்றம், தொழில் வியாபாரத்தில் லாபங்களை அடையும் அமைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வேலைபளுவும் சற்று குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் வேலை வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். விஷ்ணு பகவான் வழிபாடு செய்வது சிறந்தது.
வெற்றி
தரும்
நாட்கள்
- 22, 23, 24, 25.
சந்திராஷ்டமம் - 26-05-2018
காலை 08.16 மணி முதல் 28-05-2018 மாலை 04.38 மணி வரை.
No comments:
Post a Comment