Monday, May 28, 2018

2018 ஜுன் மாத ராசிப்பலன்-


2018 ஜுன் மாத ராசிப்பலன்-

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,




சூரிய
புதன்
சுக்கி
               
திருக்கணித கிரக நிலை

ராகு
செவ் கேது

சனி (வ)

குரு (வ)      


                               
கிரக   மாற்றம்
9-6-2018  - கடகத்தில் சுக்கிரன்
10-6-2018 - மிதுனத்தில் புதன்
15-6-2018 - மிதுனத்தில் சூரியன்
25-6-2018 - கடகத்தில் புதன்
27-6-2018 - செவ்வாய் () ஆரம்பம்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே ராசியதிபதி செவ்வாய் 10-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும் இம்மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் வலமான பலனை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன், பொருள் சேரும். திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன் கைகூடி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். தொழில்- வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். கூட்டாளிகளின் புதிய ஆலோசனைகளாலும் ஒத்துழைப்பாலும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும். உடன் பிறந்தவர்களாலும் அனுகூலம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.

பரிகாரம் - அம்மன் வழிபாடு செய்வதும், வரும் 2-ஆம் தேதி சதுர்த்தியன்று விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபாடு செய்வதும் மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்           --  24-06-2018 இரவு 10.31 மணி முதல் 27-06-2018 காலை 09.31 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். பொன்னவன் எனப் போற்றப்படும் குருபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு அனுகூலமாய் இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்களால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நிதானமாக செயல்படுவதன் மூலம் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்வார்கள்.

பரிகாரம் -பிரதோஷ விரதம் மேற்கொள்வதும், சனிக்கிழமை சனிபகவான் வழிபாடு செய்வதும் சிறப்பு.

சந்திராஷ்டமம்           --  31-05-2018 அதிகாலை 03.08 மணி முதல் 02-06-2018 மதியம் 03.35 மணி வரை மற்றும் 27-06-2018 காலை 09.31 மணி முதல் 29-06-2018 இரவு 10.06 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் ராகு 8-ல் செவ்வாய் கேது சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். உடனிருப்பவர்களால் மனநிம்மதி குறையும். தொழில்- வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளால் போட்டி பொறாமைகள் அதிகரிக்க கூடும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் உங்களது மன தைரியத்தால் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியிலும் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். இம்மாதத்தில் எதையும் சிந்தித்து செயல்படுவதன் மூலமும் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலமும் நற்பலன்களை அடையலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்

பரிகாரம் - பிரதோஷ காலங்களில் நந்தி பகவானை வணங்குவதும், முருக வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.
சந்திராஷ்டமம்           --  02-06-2018 மதியம் 03.35 மணி முதல் 05-06-2018 அதிகாலை 04.36 மணி வரை மற்றும்  29-06-2018 இரவு 10.06 மணி முதல் 02-07-2018 பகல் 11.10 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாத முற்பாதியில் சூரியன், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். திருமண முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில்- வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் லாபகரமான பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த உயர்வை அடைவார்கள்.

பரிகாரம் - செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாடு செய்வதும், சஷ்டி விரதம் மேற்கொள்வதும் வாழ்வில் மேன்மையை உண்டாக்கும்.
சந்திராஷ்டமம்           --  05-06-2018 அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2018 மதியம் 03.48 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் இம்மாதம் 10, 11-ல் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் கேது சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். போட்டிகள் விலகும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும். எடுக்கும் முயற்சியில் வெற்றிகளை அடைவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். பொருளாதாரமும் மேலோங்கி இருக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்ய முடியும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பொன் பொருள் சேரும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான அந்தஸ்துகளையும் பெற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண் பெற்று பெற்றோர்க்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் - ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்           --  07-06-2018 மதியம் 03.48 மணி முதல் 09-06-2018 இரவு 11.15 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 9-ல் புதன் 10-ல் சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆலோசனைகளால் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் -சனிக்கிழமைகளில் சனி பகவான் வழிபாடு செய்வதும், கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வதும் மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம்           -- 09-06-2018 இரவு 11.15 மணி முதல் 12-06-2018 அதிகாலை 02.41 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவை ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. முடிந்து வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. திருமண சம்பந்தமான சுப முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ காரியங்களுக்காகவும், பொதுநலத் திட்டங்களுக்காகவும் சிறுசிறு செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் - செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதும், பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வதும் நற்பலன்களை அளிக்கும்.
சந்திராஷ்டமம்           --  12-06-2018 அதிகாலை 02.41 மணி முதல் 14-06-2018 அதிகாலை 03.26 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பது எல்லா வகையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்களது முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகளில் இருந்த தேக்கங்கள் விலகி தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சியில் அனுகூலப் பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. புத்திரர்கள் வழியாக சுப செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வகையில் லாபம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கான நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடி தருவார்கள்.

பரிகாரம் - சிவ வழிபாடு செய்வதும், நவக்கிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நல்லது.

சந்திராஷ்டமம்           -- 14-06-2018 அதிகாலை 03.26 மணி முதல் 16-06-2018 அதிகாலை 03.23 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். இதுநாள் வரை இருந்த தடங்கல்கள் விலகி சகல விதத்திலும் முன்னேற்றம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். உங்களுக்கு இருந்த வந்த கடன் பிரச்சனைகளும் ஓரளவு குறையும். சேமிப்புகள் பெருகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.  தொழில்- வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளும் விலகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம் - சஷ்டியன்று ஆறுமுக கடவுளுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் எண்ணிய காரியம் நிறைவேறும்.

சந்திராஷ்டமம்           -- 16-06-2018 அதிகாலை 03.23 மணி முதல் 18-06-2018 அதிகாலை 04.21 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5-ல் புதன் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் பல்வேறு வகையில் சாதகமான பலன்களை அடைவீர்கள். இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால்  சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தெய்வீக காரியங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில்- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழிலாளர்களின் ஒத்தழைப்பால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலை மாற்றம் இடமாற்றம் ஏற்படக்கூடும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள்.

பரிகாரம் - துர்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           -- 18-06-2018 அதிகாலை 04.21 மணி முதல் 20-06-2018 காலை 07.38 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்றாலும் 5-ல் சுக்கிரன் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்வீர்கள். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. உடல் நிலையில் சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில்- வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பெரிய முதலீடு கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து சென்றால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கைகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். இருப்பினும் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் - பிரதோஷ காலங்களில் விரதம் மேற்கொண்டு சிவ பெருமானை வழிபாடு செய்தால் வாழ்வில் துயரங்கள் குறையும்.

சந்திராஷ்டமம்           -- 20-06-2018 காலை 07.38 மணி முதல் 22-06-2018 மதியம் 01.44 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதும் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் சிறப்பாக கைகூடும். உற்றார் உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் தடையின்றி நிறைவேறும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம் - வியாழக்கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           -- 22-06-2018 மதியம் 01.44 மணி முதல் 24-06-2018 இரவு 10.31 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

03.06.2018 வைகாசி 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை

04.06.2018 வைகாசி 21 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை

06.06.2018 வைகாசி 23 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை

10.06.2018 வைகாசி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை

25.06.2018 ஆனி 11 ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

No comments: