Thursday, May 24, 2018

வார ராசிப்பலன் - மே 27 முதல் ஜுன் 2 வரை


வார ராசிப்பலன் - மே 27 முதல் ஜுன் 2 வரை 
வைகாசி 13 முதல் 19 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



புதன்
சூரிய
சுக்கி
               
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது  செவ்

சனி(வ)
 
குரு(வ) சந்தி  


கிரக மாற்றம்
27.05.2018 புதன் ரிஷபம் காலை 08.23 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
துலாம்            26-05-2018 காலை 08.16 மணி முதல் 28-05-2018 மாலை 04.38 மணி வரை.
விருச்சிகம்                28-05-2018 மாலை 04.38 மணி முதல் 31-05-2018 அதிகாலை 03.08 மணி வரை.
தனுசு               31-05-2018 அதிகாலை 03.08 மணி முதல் 02-06-2018 மதியம் 03.35 மணி வரை.
மகரம்              02-06-2018 மதியம் 03.35 மணி முதல் 05-06-2018 அதிகாலை 04.36 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

27.05.2018 வைகாசி 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் ராசியதிபதி செவ்வாய் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் புதன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக செயல்பட்டால் ஏற்படகூடிய சிறுசிறு பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் எற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். கணவன்--- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். தேவையற்ற பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 27, 2.
சந்திராஷ்டமம் -   28-05-2018 மாலை 04.38 மணி முதல் 31-05-2018 அதிகாலை 03.08 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன் 2-ல் சுக்கிரன் 3-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. திருமண சுபகாரியங்கள் கைகூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சனி பகவான் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29, 30.
சந்திராஷ்டமம் -   31-05-2018 அதிகாலை 03.08 மணி முதல் 02-06-2018 மதியம் 03.35 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் ராகு 8-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். அசையும் அசையா சொத்துக்கள் மூலமும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். மாணவர்கள்  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.
சந்திராஷ்டமம் -   02-06-2018 மதியம் 03.35 மணி முதல் 05-06-2018 அதிகாலை 04.36 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனியும் லாப ஸ்தானத்தில் சூரியன், புதனும் சஞ்சரிப்பது சகல விதத்திலும் ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த உயர்வை அடைவார்கள். லட்சுமி தேவி வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 31, 1, 2.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் 10-ல் சூரியன் புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தொழில் ரீதியாக மேன்மை ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். பகைமை பாராட்டியவர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளால் முன்னேற்றம் அடைவார்கள். சிலருக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் தடையின்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும்.  மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 2.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் 9-ல் சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் எல்லாம் விலகி முன்னேற்றத்தை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும், தாராள தன வரவுகளும் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்களை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சுமாராக இருக்கும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகமாக இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது சிறந்தது.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 31, 1.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும் 7-ல் புதன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். குரு வக்ர கதியில் இருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களும் கல்வியில் உயர்வடைவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்றவை உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைவீர்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருக வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 31, 1, 2.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குரு வக்ர கதியில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்குவாதங்கள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். மாணவர்கள் நண்பர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. சனி பகவான் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29, 30.    

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் புதன் 5-ல் சுக்கிரன் 11-ல் சனி சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது சிறந்தது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். சுக்கிரன் 4-ல் இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமும் சாதகமான பலன்களும் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதி இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்களுக்கு உழைப்பிற்கேற்ற உயர்வு கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்தால் நற்பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 31, 1, 2.
சந்திராஷ்டமம் - 26-05-2018 காலை 08.16 மணி முதல் 28-05-2018 மாலை 04.38 மணி வரை.


No comments: