வார ராசிப்பலன் -- மே 6 முதல் 12 வரை
சித்திரை 23 முதல் 29 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com,
B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33
வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
புதன்
|
சூரிய
|
சுக்கி
|
|
|
திருக்கணித கிரக நிலை
|
ராகு
|
|
செவ் கேது
|
|
||
சந்தி சனி (வ)
|
|
குரு (வ)
|
|
கிரக மாற்றம்
09.05.2018
மேஷ புதன் மாலை 05.31 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம் 06-05-2018 காலை 08.17 மணி முதல் 08-05-2018 இரவு 09.01 மணி வரை.
கும்பம் 08-05-2018 இரவு 09.01 மணி முதல் 11-05-2018 காலை 07.16 மணி வரை.
மீனம் 11-05-2018 காலை 07.16 மணி முதல் 13-05-2018 மதியம் 01.36 மணி வரை
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
06.05.2018
சித்திரை 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் மேஷம் இலக்கினம். தேய்பிறை
07.05.2018
சித்திரை 24 ஆம் தேதி திங்கட்கிழமை சப்தமி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும் 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறுவதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். ஜென்ம ராசியில் சூரியன் இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். துர்கையம்மனை வழிபடுவது, தட்சிணாமூர்த்தி வழிபடுவது நன்மையை தரும்.
வெற்றி
தரும்
நாட்கள் - 6, 7, 8, 9, 10.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்குவதில் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக போட்டிகள் இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் சாதகமான பலனை அடைய முடியும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி
தரும்
நாட்கள் - 9, 10, 11, 12.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். விநாயகர் மற்றும் முருக வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி
தரும்
நாட்கள் - 11, 12.
சந்திராஷ்டமம்
- 06-05-2018 காலை 08.17 மணி முதல் 08-05-2018 இரவு 09.01 மணி வரை.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீடு வாகனங்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். 7-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமாக சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு சாதகப்பலன் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். அம்மன் வழிபாடு, முருக வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி
தரும்
நாட்கள் - 6, 7, 8.
சந்திராஷ்டமம்
- 08-05-2018 இரவு 09.01 மணி முதல் 11-05-2018 காலை 07.16 மணி வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே. உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றி விட முடியும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அம்மன் வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது சிறந்தது.
வெற்றி
தரும்
நாட்கள் - 6, 7, 8, 9, 10.
சந்திராஷ்டமம்
- 11-05-2018 காலை 07.16 மணி முதல் 13-05-2018 மதியம் 01.36 மணி வரை
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் சஞ்சரிப்பதும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. 9-ல் சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக் கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். சனிக்கிழமை சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
வெற்றி
தரும்
நாட்கள் - 9, 10, 11, 12.
துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சனைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன் கோபத்தை குறைப்பது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிறுசிறு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும்.
வெற்றி
தரும்
நாட்கள் -- 11, 12.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிட்டும்.
பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் வழிபாடு செய்தால் பிரச்சினைகள் குறையும்.
வெற்றி
தரும்
நாட்கள் - 6, 7, 8.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எல்லோருக்குமே
மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன் 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். 2-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக அனுகூலங்களை அடைய முடியும். கணவன்- மனைவி பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தாராள தனவரவால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்களும் கிட்டும். செவ்வாய் கிழமை அம்மன் மற்றும் முருக வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி
தரும்
நாட்கள் - 9, 10.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். ª-ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உற்றார் உறவினர்களும் சிறுசிறு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். வீடு மனை வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி
தரும்
நாட்கள் - 6, 7, 8, 11, 12.
கும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சோர்வு மந்த நிலை விலகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பார்வதி தேவியையும் முருக கடவுளையும் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி
தரும்
நாட்கள் - 9, 10.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமும் நிறைவேறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். சூரியன் 2-ல் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் என்றாலும் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.
வெற்றி
தரும்
நாட்கள் - 6, 7, 8, 11, 12.
No comments:
Post a Comment