Monday, May 14, 2018

Today rasi palan - 15.05.2018


Today rasi palan - 15.05.2018
இன்றைய ராசிப்பலன் -  15.05.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
15-05-2018, வைகாசி 01, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி மாலை 05.18 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பரணி நட்சத்திரம் பகல் 10.56 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. சர்வ அமாவாசை.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.


சந்தி புதன்
சூரிய
சுக்கி
               
திருக்கணித கிரக நிலை
15.05.2018
ராகு
செவ் கேது

சனி (வ)

குரு (வ)      


இன்றைய ராசிப்பலன் -  15.05.2018
மேஷம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று கால தாமதமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி அடைவதற்கான சூழ்நிலை உருவாகும்.
மிதுனம்
இன்று குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை காணப்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். குடும்பத்தில் பெண்களால் வீண் செலவுகள் உண்டாகும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சுமை குறையும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
கன்னி
இன்று உங்களுக்கு மன உளைச்சலும் குழப்பமும் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.29 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை மதியம் வரை தள்ளி வைப்பது உத்தமம்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.29 பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.  வியாபார சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பயணங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியாக சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும்.
தனுசு
இன்று உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மை அடையலாம்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
மீனம்
இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உங்களின் பிரச்சனைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

No comments: