Thursday, June 28, 2018

வார ராசிப்பலன் - ஜுலை 1 முதல் 7 வரை


வார ராசிப்பலன் - ஜுலை 1 முதல் 7 வரை 
ஆனி 17 முதல் 23 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





சூரிய
               
திருக்கணித கிரக நிலை

ராகு புதன்
சுக்கி  
கேது  சந்தி செவ்(வ)

சனி (வ)
 
குரு (வ)


கிரக மாற்றம்
05-07-2018 சிம்ம சுக்கிரன் அதிகாலை 02.25 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம்              29-06-2018 இரவு 10.06 மணி முதல் 02-07-2018 பகல் 11.10 மணி வரை.
கும்பம்            02-07-2018 பகல் 11.10 மணி முதல் 04-07-2018 இரவு 11.00 மணி வரை.
மீனம்                     04-07-2018 இரவு 11.00 மணி முதல் 07-07-2018 காலை 07.44 மணி வரை.
மேஷம்           07-07-2018 காலை 07.44 மணி முதல் 09-07-2018 மதியம் 12.34 மணி வரை.


இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
01.07.2018 ஆனி 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

02.07.2018 ஆனி 18 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

05.07.2018 ஆனி 21 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பென்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். சொந்தமாக வீடு, வாகனங்கள், நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் அற்புதமான நற்பலன்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். தாராள தன வரவுகளால் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் பொறுப்புடன் செயல்படுவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4, 7.

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
இனிமையான சுபாவம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் ராகு சேர்க்கைப் பெற்று 3-ஆம் வீட்டில் இருப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபுரண அனுகூலங்கள் கிடைக்கும். என்றாலும் நிதானமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் எல்லாம் படிபடியாக குறையும். எதையும் எளிதில் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். 2-ல் சூரியன் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களால் இருந்த பிரச்சனைகள் விலகி -னுகூலப் பலன்கள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபத்தை அடையலாம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி எள் தீபம் ஏற்றி வழிபடுவது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 5, 6.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு, குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை பயன்படுத்தும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை உண்டாகும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7.
சந்திராஷ்டமம் -   29-06-2018 இரவு 10.06 மணி முதல் 02-07-2018 பகல் 11.10 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிமித்தமாக மேற்கொள்ளும் வெளியூர் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் உண்டானாலும் அதற்கேற்ப அனுகூல பலன்களும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும். கடின உழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது சிறந்தது.
வெற்றி தரும் நாட்கள் - 1, 7.
சந்திராஷ்டமம் -   02-07-2018 பகல் 11.10 மணி முதல் 04-07-2018 இரவு 11.00 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும் ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றத்தை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்களும் படிப்படியாக குறையும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் உற்றார் உறவினர்களின் உதவிகளும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் கல்வியில் திறமையுடன் செயல்பட்டு ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4.
சந்திராஷ்டமம் -   04-07-2018 இரவு 11.00 மணி முதல் 07-07-2018 காலை 07.44 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் லாப ஸ்தானமான 11-ல் புதன், சுக்கிரன், ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். வேலை தேடுபவர்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்-. சனி பகவானை வழிபடுவதாலும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதாலும் கஷ்டங்கள் ஓரளவு குறையும்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 5, 6,
சந்திராஷ்டமம் -   07-07-2018 காலை 07.44 மணி முதல் 09-07-2018 மதியம் 12.34 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
உயர்ந்த நிலையை அடைய கூடிய ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ல் புதனுடன் இணைந்து இருப்பது வலமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமையை பாராட்டி புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வந்து நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடையின்றி கிடைக்கும். முருக வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் சஞ்சரிப்பதும் ராசியதிபதி செவ்வாய் வக்ர கதியில் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களது தேவைகள் பூர்த்தியாகும்.  கணவன்- மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு வீண் விரயங்கள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் மேலதிகாரிகளின் ஆதரவை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ மற்றும் சனி பகவான் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 7.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் வாக்குவாதங்கள், குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தேவையில்லாத அலைச்சல் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். கணவன்-- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும். உடன் பிறப்புகளாலும் சில தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். முடிந்த வரை உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புகளால் தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் ஏற்பட்டு லாபம் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் ஓரளவுக்கு ஏற்றமானப் பலன்களை பெற முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் நண்பர்கள் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சனிப்ரீதியாக விநாயகர் வழிபாடு மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் கடந்த கால சோதனைகள் எல்லாம் விலகி வலமான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்று நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை மேலோங்கும். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அம்மன் வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 5, 6.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சுமாராக இருக்கும். 5-ல் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் பல இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் அனுகூலப் பலனை பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாகவே நடைபெறும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கேற்ப அனுகூலப்பலன்கள் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தினமும் விநாயகர் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 7.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரும் அமைப்பாகும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்வதன் மூலம் அனுகூலப் பலன்கள் கிட்டும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற பெரிதும் உதவும். வெளித் தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெற முடியும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் அடைவர். புதிய பொருட் சேர்க்கை அதிகமாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய பெரிய தொகை கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிவ வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 1, 5, 6.

No comments: