Friday, June 22, 2018

வார ராசிப்பலன் - ஜுன் 24 முதல் 30 வரை


வார ராசிப்பலன் - ஜுன் 24 முதல் 30 வரை 
ஆனி 10 முதல் 16 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






சூரிய புதன்
               
திருக்கணித கிரக நிலை
ராகு சுக்கி
கேது  செவ்

சனி (வ)
 
சந்தி குரு(வ)               
 

கிரக மாற்றம்
25-06-2018 கடக புதன் மாலை 06.04 மணிக்கு
27-06-2018 செவ்வாய் வக்ர ஆரம்பம் அதிகாலை 02.36 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
துலாம்                            22-06-2018 மதியம் 01.44 மணி முதல் 24-06-2018 இரவு 10.31 மணி வரை.
விருச்சிகம்                                24-06-2018 இரவு 10.31 மணி முதல் 27-06-2018 காலை 09.31 மணி வரை.
தனுசு                               27-06-2018 காலை 09.31 மணி முதல் 29-06-2018 இரவு 10.06 மணி வரை.
மகரம்                              29-06-2018 இரவு 10.06 மணி முதல் 02-07-2018 பகல் 11.10 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
25.06.2018 ஆனி 11 ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னுடைய கௌரவத்திற்கும், பெயருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புடன் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதும் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றியை தரும். உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பை பெறுவீர்கள். வரும் 25-ஆம் தேதி முதல் புதன் 4-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை பலப்படும். எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் உறவினர்களிடம் நல்லப் பெயரை எடுத்துவிட முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் உண்டாகும். கடன்கள் யாவும் குறையும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். உடல் நிலையில் சிறுசிறுப் பிரச்சினைகளை சந்தித்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஈடுபாடு உண்டாகும். அம்மன் வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது சிறந்தது.
வெற்றி தரும் நாட்கள் - 24, 30.
சந்திராஷ்டமம் -   24-06-2018 இரவு 10.31 மணி முதல் 27-06-2018 காலை 09.31 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாகும் பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உடல் நலத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடையலாம். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு மன அமைதி குறையும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வதும், சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26.
சந்திராஷ்டமம் -   27-06-2018 காலை 09.31 மணி முதல் 29-06-2018 இரவு 10.06 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும் பிறரை எளிதில் நம்பாத குணமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. 2ல் ராகு இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கணவன்- மனைவி கோபத்தைக் குறைத்துக் கொண்டு, விட்டு கொடுத்து சென்றால் தான் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பொருளாதார நிலை ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. கொடுத்த கடன்களை பெறுவதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நிம்மதியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் பெருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது உத்தமம். ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 27, 28, 29.
சந்திராஷ்டமம் -   29-06-2018 இரவு 10.06 மணி முதல் 02-07-2018 பகல் 11.10 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எந்தவொரு செயலிலும் துணிந்த பின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப  நண்டு பிடி போட்டு செய்து  முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன் 6-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக இருப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் 7-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது மூலம் ஒரு சில ஆதாயங்களை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. நம்பியவர்களாலேயே ஏமாறும் சூழ்நிலை உருவாகலாம். உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனை சந்திக்க நேரிடும். திறமைகளுக்கு தகுந்த உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29, 30.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்ததை விட லாபங்கள் சிறப்பாக அமையும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உத்தியோக உயர்வும், தடைப்பட்ட ஊதிய உயர்வும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதாக ஈடுபடுத்த முடியும். மாணவர்கள் மற்ற துறைகளிலும் சிறப்புடன் செயல்படுவார்கள். தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் மேன்மைகள்  உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 30.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 25-ஆம் தேதி முதல் ராசியதிபதி புதன் 11-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத தீடீர் பண வரவுகளால் பொருளாதார நிலை உயர்வடைந்து கடன்களும் குறையும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்.  தொழில் வியாபாரம், செய்பவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் லாபமும் அனுகூலமும் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத வகையில் உயர்வுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் பெற்றோர்கள் பெருமைப்படும் படி நடந்து கொள்வார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதும், எண்ணெய் தானம் செய்வதும் சிறந்தது.
வெற்றி தரும் நாட்கள் - 25, 26.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எல்லா வகையிலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். வரும் 25-ஆம் தேதி முதல் புதன் 10-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். எதிர்பாராத தன வரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தி ஆகும். குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றங்களை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அபிரிமிதமான லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடந்த கால கடன்களும் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். முருக கடவுளையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்குவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 24, 27, 28, 29.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்று இருப்பதால் நீங்கள் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். சூரியன் 8-ல் இருப்பதால் உடல் நிலையில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவினை உண்டாக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப வாழ்வில் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி ஒற்றுமை குறைவதற்கான சூழ்நிலை ஏற்படும். கணவன்- மனைவி வீண் வாக்கு வாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிட்டும். கூட்டுத்தொழில் சுமாரான லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செய்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 30.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் ஒதுங்கி நடந்து கொள்ளும் பண்பு கொண்ட தனுசு ராசி நேயர்களே, நீங்கள் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வீண் பிரச்சனைகள் தோன்றும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்கள் ஓரளவு அனுகூலமாக இருப்பார்கள். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலார்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் வெளி இடங்களில் கவனமாக இருப்பது உத்தமம். சிவ பெருமானை வணங்குவதும், முருக வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 27, 28, 29.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிதானமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். வரும் 25-ஆம் தேதி முதல் புதன் 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களால் அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சாதகப் பலன்களைப் பெறுவீர்கள். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் இருந்த பிரச்சினைகள் விலகி அனுகூலப் பலன் கிடைக்கும். குரு வக்ர கதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வந்தால் கஷ்டங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26, 30.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டு எல்லா இடத்திலும் மதிப்புடன் வாழும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பது தாராள தனவரவை தரும் அமைப்பென்றாலும் 5-ல் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை வரவுக்கு மீறிய செலவுகளை உண்டாக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எந்த வேலையையும் சிரமப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கொடுத்து கடன்களை பெறுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். விநாயகரையும், முருக கடவுளையும் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 27, 28, 29.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலங்களை அடைவீர்கள். வரும் 25-ஆம் தேதி முதல் புதன் 5-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். பணவரவில் இருந்த தேக்கங்கள் விலகி சாதகமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். தடைப்பட்ட திருமண சுபகாரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தி ஆகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும் என்றாலும் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ளலாம். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று முன்னேற்றப் பலன்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வந்தால் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29, 30.
சந்திராஷ்டமம் -   22-06-2018 மதியம் 01.44 மணி முதல் 24-06-2018 இரவு 10.31 மணி வரை.


No comments: