Wednesday, October 31, 2018

2018--நவம்பர் மாத ராசிப்பலன்


2018--நவம்பர் மாத ராசிப்பலன்
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,







திருக்கணித கிரக நிலை

ராகு
கேது  செவ்

சனி
குரு
புதன்
சூரிய
சுக்கி(வ)


கிரக   மாற்றம்
6-11-2018 - கும்பத்தில் செவ்வாய்
16-11-2018 - விருச்சிகத்தில் சூரியன்
17-11-2018 - புதன் வக்கிர ஆரம்பம்
17-11-2018 - சுக்கிரன் வக்கிர நிவர்த்தி

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு இம்மாதம் 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். வர வேண்டிய பணவரவுகளில் தடை தாமதங்கள் உண்டாகும். புத்திர வழியில் சிறு மனசஞ்சலம் ஏற்படலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் வரும் 6-ஆம் தேதி முதல் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆன்மீக, தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளமாக நடைபெறும். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பது, ஜாமின் கையெழுத்து போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சிவ வழிபாடு செய்வதும், பிரதோஷ காலங்களில் நந்தி வழிபாடு செய்வதும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
சந்திராஷ்டமம்        -- 08-11-2018 மதியம் 01.39 மணி முதல் 10-11-2018 இரவு 09.56 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு 7-ல் குரு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உற்றார், உறவினர்களும் அனுகூலமாக இருப்பார்கள். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இதுவரை இருந்த பிரச்சினைகள் யாவும் குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பயணங்களாலும் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம் சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், சனிக் கவசங்கள் படிப்பதாலும் பாதிப்புகள் குறையும்.
சந்திராஷ்டமம்        -- 10-11-2018 இரவு 09.56 மணி முதல் 13-11-2018 காலை 09.22 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கூட சற்று சிரமபட வேண்டியிருக்கும். 2-ல் ராகு, 7-ல் சனி இருப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம் துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதும், சர்ப கிரக வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம்        -- 13-11-2018 காலை 09.22 மணி முதல் 15-11-2018 இரவு 10.23 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் 5-ல் குரு 6-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய உன்னதமான மாதமாக இம்மாதம் இருக்கும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இருந்த தடைகள் விலகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தியும் லாபம் காண முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் சாதகப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். வெளி தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள்.

பரிகாரம் செவ்வாய்கிழமை விரதமிருந்து ஆறுமுக பெருமானை வணங்குவதாலும், அங்காரகனாகிய செவ்வாயை வணங்குவதாலும் உண்டாகும் துயரங்கள் குறையும்.
சந்திராஷ்டமம்        -- 15-11-2018 இரவு 10.23 மணி முதல் 18-11-2018 காலை 10.09 மணி வரை.


சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் ராசியதிபதி சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் வலமான பலனை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள், நெருங்கியவர்களின் உதவியால் ஏற்றங்களை அடையக்கூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வு, மந்த நிலை விலகி முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த ஒற்றுமை குறைவுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்களும் சற்று குறைந்த மனநிம்மதி ஏற்படும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு அமையும். வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம் ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவதாலும் நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வதாலும் நன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்        -- 18-11-2018 காலை 10.09 மணி முதல் 20-11-2018 மாலை 06.37 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும் என்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். பணவரவில் இடையூறுகள், குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும் என்றாலும் 11-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் அனுகூலங்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்பதால் மாத தொடக்கத்தில் இருக்ககூடிய பிரச்சினைகள் மாத பிற்பாதியில் விலகி முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான ஏற்றங்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் ஓரளவு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சற்று குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் சற்று குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார், உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது நல்லது.

பரிகாரம் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலையை  அணிவித்து, நெய் தீபமேற்றி, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
சந்திராஷ்டமம்        -- 20-11-2018 மாலை 06.37 மணி முதல் 22-11-2018 இரவு 11.36 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் பொருளாதார நிலை மேன்மையடையவதுடன் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். நல்ல வரன்கள் வீடு தேடி வரும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து மனநிம்மதி ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். மேலதிகாரிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் கருணை வடிவான கந்தனை வணங்குவதாலும் சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் வாழ்வில் நற்பலன்களை பெறலாம்.
சந்திராஷ்டமம்        -- 22-11-2018 இரவு 11.36 மணி முதல் 25-11-2018 அதிகாலை 02.19 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் குரு, 12-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதிலும் இழுபறி நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும்.

பரிகாரம் சனிபகவானை வழிபடுவதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம்        -- 25-11-2018 அதிகாலை 02.19 மணி முதல் 27-11-2018 அதிகாலை 04.17 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரைச் சனி நடந்தாலும் மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதும் வரும் 6-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நற்பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது.
பரிகாரம் செவ்வாய் கிழமைகளில் முருக வழிபாடு அம்மன் வழிபாடு மேற்கொள்வதும், சஷ்டி விரதம் கடைப்பிடிப்பதும் மேன்மையான பலனை அளிக்கும்.
சந்திராஷ்டமம்        -- 30-10-2018 இரவு 10.11 மணி முதல் 02-11-2018 அதிகாலை 01.18 மணி வரை மற்றும் 27-11-2018 அதிகாலை 04.17 மணி முதல் 29-11-2018 காலை 06.40 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு, புதன் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதன் மூலம் எதிர்பாராத தனசேர்க்கைகள் கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடந்த கால கடன் பிரச்சினைகள் குறைந்து சேமிக்க முடியும். புதிய வீடு, மனை வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவதன் மூலம் மருத்துவ செலவுகளை குறைக்கலாம். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலையும் மேன்மையடையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில், வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சாதகமான பலன்களே கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பரிகாரம் அல்லல் போக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவதாலும், ஹனுமன் துதிகளை சொல்வதாலும் தொல்லைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்        -- 02-11-2018 அதிகாலை 01.18 மணி முதல் 04-11-2018 அதிகாலை 04.27 மணி வரை மற்றும் 29-11-2018 காலை 06.40 மணி முதல் 01-12-2018 காலை 10.06 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 11-ல் சனி சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்கள் பலம் அதிகரித்து எதிரிகளின் பலம் குறையும் காலமாகும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது மூலம் அன்றாட பணிகளில் தெம்புடன் செயலாற்றுவீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள்.

பரிகாரம் முழு முதற் கடவுள் விநாயகரை வழிபடுவதாலும் சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பதாலும் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகும்.
சந்திராஷ்டமம்        -- 04-11-2018 அதிகாலை 04.27 மணி முதல் 06-11-2018 காலை 08.12 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே ராசியதிபதி குரு புதன் சேர்க்கைப் பெற்று 9-ல் இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிறப்பான பணவரவு உண்டாகி உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அசதி மந்த நிலை உண்டாகி அன்றாட பணிகளை செய்வதில் சிரமங்கள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்விக்காக சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

பரிகாரம் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபடுவதாலும், பிரதோஷ விரதம் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்        -- 06-11-2018 காலை 08.12 மணி முதல் 08-11-2018 மதியம் 01.39 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்
04.11.2018 ஐப்பசி 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

09.11.2018 ஐப்பசி 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியை திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

11.11.2018 ஐப்பசி 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.30 மணி முதல் 08.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

14.11.2018 ஐப்பசி 28 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

19.11.2018 கார்த்திகை 03 ஆம் தேதி திங்கட்கிழமை ஏகாதசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

25.11.2018 கார்த்திகை 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

28.11.2018 கார்த்திகை 12 ஆம் தேதி புதன்கிழமை சஷ்டி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை