Wednesday, October 17, 2018

Today rasi palan - 18.10.2018


Today rasi palan - 18.10.2018
இன்றைய ராசிப்பலன் -  18.10.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
18-10-2018, ஐப்பசி 01, வியாழக்கிழமை, நவமி திதி பகல் 03.29 வரை பின்பு வளர்பிறை தசமி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 12.33 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சரஸ்வதிபூஜை. ஆயுத பூஜை.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.






திருக்கணித கிரக நிலை
18.10.2018
ராகு
கேது  செவ் சந்தி

சனி
குரு
புதன் சூரிய
சுக்கி(வ)


இன்றைய ராசிப்பலன் -  18.10.2018
மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் நல்ல லாபம் கிட்டும்.
ரிஷபம்
இன்று உற்றார் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை வராத பழைய கடன்கள் இன்று வசூலாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.
கடகம்
இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிட்டும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனஅமைதி இருக்கும்.
கன்னி
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.
துலாம்
இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படும். லாபம் கூடும்.
தனுசு
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல்நிலை சீராகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் பிரச்சனைகள் குறையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பணப்பிரச்சனை நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்
இன்று தொழிலில் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
மீனம்
இன்று நீங்கள் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும்.

No comments: