Friday, November 16, 2018

வார ராசிப்பலன் - நவம்பர் 18 முதல் 24 வரை


வார ராசிப்பலன் - நவம்பர் 18 முதல் 24 வரை 
கார்த்திகை 2 முதல் 8 வரை             

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





செவ் சந்தி
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது 

சனி
குரு, சூரிய புதன் (வ)


சுக்கி

கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கும்பம்               15-11-2018 இரவு 10.23 மணி முதல் 18-11-2018 காலை 10.09 மணி வரை.
மீனம்                  18-11-2018 காலை 10.09 மணி முதல் 20-11-2018 மாலை 06.37 மணி வரை.
மேஷம்             20-11-2018 மாலை 06.37 மணி முதல் 22-11-2018 இரவு 11.36 மணி வரை.
ரிஷபம்              22-11-2018 இரவு 11.36 மணி முதல் 25-11-2018 அதிகாலை 02.19 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சூரியன், குரு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத சூழ்நிலை உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை சற்று அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள். சிவ வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        18, 21, 22.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பொருளாதார நிலையும் திருப்திகரமாக இருக்கும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெறும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு, மந்த நிலை தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்ற விட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்து இருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். சனி பகவானுக்குரிய பரிகாரங்கள் செய்வது, சிவ வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        18, 19, 20, 23, 24.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் தனகாரகன் குரு பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைக்கு பின் நற்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாகக்கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தி மற்றும் சனி பகவான் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        18, 19, 20, 21, 22.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி மற்றவர்களால் ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். தாராள பணவரவு உண்டாகி உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் நிலையில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். ஜென்ம ராசியில் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது பயணங்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபகரமான பலன்களை அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்கள் தேவையற்றப் பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        21, 22, 23, 24.
சந்திராஷ்டமம் -         15-11-2018 இரவு 10.23 மணி முதல் 18-11-2018 காலை 10.09 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் சாதகமற்ற பலன்கள் ஏற்படக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவில் இடையூறுகள், நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க தடை போன்றவை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பண வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை நிலவினாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் கவனமுடன் இருப்பது உத்தமம். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        23, 24.
சந்திராஷ்டமம் -         18-11-2018 காலை 10.09 மணி முதல் 20-11-2018 மாலை 06.37 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு தான் கற்று அறிந்து இருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் -        18, 19.
சந்திராஷ்டமம் -         20-11-2018 மாலை 06.37 மணி முதல் 22-11-2018 இரவு 11.36 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடு பட்டாவது காப்பாற்றும் பண்பும் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகளால் உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கடன்கள் சற்றே குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும் உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்க முடியும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        18, 19, 20, 21, 22.
சந்திராஷ்டமம் -         22-11-2018 இரவு 11.36 மணி முதல் 25-11-2018 அதிகாலை 02.19 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
பேச்சில் கடுமை இருந்தாலும்1 அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் குரு, சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது சிறப்பு. கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள், உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். பணவரவுகள் சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். வரும் கார்த்திகை தீபம் அன்று சிவ பெருமானையும், முருக கடவுளையும் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -        21, 22, 23, 24.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சிறு சிறு தடைக்குப் பிறகு ஏற்றங்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் சூரியன், குரு 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனமாக செயல்படுவது உத்தமம். சிவன் மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        18, 23, 24.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 11-ல் குரு, சூரியன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். பொன், பொருள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். செவ்வாய் 2-ல் இருப்பதால் கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உங்கள் மீது இருந்த பழிச்சொல் விலகி நற்பெயர் எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலை பளுவும் குறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்ற முடியும். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        18, 19, 20.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே, பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 10-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.  தாராள தனவரவுகள், குடும்பத்தில் மகிழ்ச்சி பூரிப்பு உண்டாகும். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் சற்றே விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் சாதகமான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். தீபம் அன்று சிவ பெருமானையும் முருகு பெருமானையும் வணங்கி வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        21, 22.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். 5-ல் ராகு, 8-ல் சுக்கிரன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களையும் உற்றார் உறவினர்களையும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். சொந்த தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே விலகி ஓரளவுக்கு லாபம் உண்டாகும். எதிர்பார்க்கும் கடன் உதவிகளும் தடையின்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தமான நிலையே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகமாக இருக்கும் என்றாலும் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து விடுவது உத்தமம். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் மங்களகரமான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 23, 24.



No comments: