Tuesday, December 25, 2018

புத்தாண்டு பலன் - 2019 மிதுனம்


புத்தாண்டு பலன் - 2019 மிதுனம்
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

மிதுனம்   மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள்,  திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
 அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, சிறப்பான அறிவு ஆற்றலால் பலரை வழி நடத்தும் திறமை கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமாக 6-ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதும், 7-ஆம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். 2, 8-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது வரும் 07.03.2019 முதல் 1, 7-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. புத்திர வழியில் மன சஞ்சலங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூட இடையூறுகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. அசையா சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டி பொறாமைகளும் உண்டாவதால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தொழிலாளர்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடித்தால் நல்ல பெயரை எடுக்க முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. 05.11.2019-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குருபகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆண்டின் இறுதியில் உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மனைவி வழியில் உடல் நிலை பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் கவனமாக நடந்து கொள்வதே நல்லது. தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதன் மூலம் உடல்நிலையும், மனநிலையும் சிறப்பாக அமையும்.
குடும்பம் பொருளாதாரநிலை
பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும், குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் வீண் விரயங்களும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ராகு கேது சாதகமற்று சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும், குடும்பத்தில் வீண் பிரச்சினைகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் சிறு தடைக்கு பின் சாதகப்பலன்கள் உண்டாகும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். வேலைபளு அதிகரித்தாலும் சிரமம் பாராது எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பதவி உயர்வுகளால் பொறுப்புகள் அதிகரிக்கும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு தாமதப்படும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். அந்நிய நாட்டு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபத்தை அடைய முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதமாக அமையும். பெரிய தொகைகள் கொண்டு செய்யும் முயற்சிகளில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். மறைமுக எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும்.
கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சற்று தடைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருந்தாலும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாவதில் தடைகள் ஏற்படும்.
அரசியல் 
உங்கள் பதவிகளுக்கு சிறுசிறு பிரச்சனைகள் தோன்றும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும், தலைவர்களின் ஆதரவுகளும் சிறப்பாக இருக்கும். மக்கள் மத்தியில் நல்லதொரு செல்வாக்கினைப் பெறுகின்ற நிலை உண்டாகும். 
விவசாயிகள்
பயிர் விளைச்சல்களில் நிறைய இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் சிறுசிறு சங்கடங்கள், வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும், உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். காய், கனி, பூ வகைகளாலும் கால் நடைகளாலும் ஓரளவுக்கு லாபம் அமையும்,
கலைஞர்கள்
புதிய வாய்பபுகள் உங்களை தேடி வந்து பூரிப்படைய செய்யும். எதிர்பாராத பண வரவுகளால் பொருளாதார நிலை உயரும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பாக இருக்கும். இசை துறையில் உள்ளவர்களுக்கும் முன்னேற்றமான பலன்களே உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும்.
பெண்கள்
பெண்களுக்கு உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றால் மருத்துவ செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் தருவதை தவிர்க்கவும். பொருளாதார நிலையில் சில சங்கடங்கள் இருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். புத்திர பாக்கியம் சற்று தாமதப்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நல்லது நடக்கும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். படித்த பாடங்களை மனதில் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்கள் சகவாசத்தையும் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் குறையும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற முடியும்.

ஜனவரி
உங்கள் ராசியாதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்றாலும் குரு 6-ல் இருப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 07-01-2019 அதிகாலை 00.25 மணி முதல் 09-01-2019 பகல் 01.14 மணி வரை.
பிப்ரவரி
லாப ஸ்தானத்தில் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். 7-ல் சனி சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, சோர்வு, கை, கால் வலி போன்ற பாதிப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்கள் உண்டாகும். கொடுத்த பணத்தை திரும்ப வெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 03-02-2019 காலை 06.39 மணி முதல் 05-02-2019 இரவு 07.35 மணி வரை.
மார்ச்
செவ்வாய் 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு லாபங்களை பெற முடியும் என்றாலும் 6-ல் குரு, 7-ல் சனி சஞ்சரிப்பதும், 2, 8-ல் சஞ்சரிக்கும் ராகு கேது வரும் 7-ஆம் தேதி முதல் மாறுதலாகி ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேதுவாக சஞ்சரிக்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய தாமதநிலை ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம் - 02-03-2019 பகல் 12.40 மணி முதல் 05-03-2019 அதிகாலை 01.45 மணி வரை மற்றும் 29-03-2019 இரவு 07.23 மணி முதல் 01-04-2019 காலை 08.22 மணி வரை.
ஏப்ரல்
இம்மாதம் அதிசாரமாக குரு 7-ல் சஞ்சாரம் செய்வதும், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாதகோளான சூரியன் 10, 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 29-03-2019 இரவு 07.23 மணி முதல் 01-04-2019 காலை 08.22 மணி வரை மற்றும் 26-04-2019 அதிகாலை 03.14 மணி முதல் 28-04-2019 மாலை 03.45 மணி வரை.
மே
மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசிக்கு 10, 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 23-05-2019 பகல் 11.45 மணி முதல் 25-05-2019 இரவு 11.44 மணி வரை.
ஜுன்
ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமதநிலை ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஏற்பட கூடிய வாக்கு வாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற சற்று தாமத நிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.
சந்திராஷ்டமம் - 19-06-2019 இரவு 08.00 மணி முதல் 22-06-2019 காலை 07.40 மணி வரை.
ஜுலை
ஜென்ம ராசியில் ராகு, சூரியன், சுக்கிரன், 2-ல் செவ்வாய், 7-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது சிறப்பு. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 17-07-2019 அதிகாலை 03.15 மணி முதல் 19-07-2019 பகல் 02.55 மணி வரை.
ஆகஸ்ட் 
இம்மாதம் 9-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 13-08-2019 காலை 09.25 மணி முதல் 15-08-2019 இரவு 09.27 மணி வரை.
செப்டம்பர் 
ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது உத்தமம். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 09-09-2019 மாலை 03.10 மணி முதல் 12-09-2019 அதிகாலை 03.28 மணி வரை.
அக்டோபர்
ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மேலதிகாரிகளிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. விநாயகர் வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம் - 06-10-2019 இரவு 09.35 மணி முதல் 09-10-2019 காலை 09.40 மணி வரை.
நவம்பர் 
இம்மாதம் 5-ஆம் தேதி முதல் 7-ல் குரு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 03-11-2019 அதிகாலை 05.25 மணி முதல் 05-11-2019 மாலை 04.45 மணி வரை மற்றும் 30-11-2019 பகல் 02.30 மணி முதல் 03-12-2019 அதிகாலை 00.55 மணி வரை.
டிசம்பர் 
ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். முருக வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம் - 27-12-2019 இரவு 11.45 மணி முதல் 30-12-2019 காலை 09.35 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8,
நிறம் - பச்சை, வெள்ளை
கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம்
திசை - வடக்கு
தெய்வம் -விஷ்ணு

No comments: