Wednesday, December 26, 2018

2019 - ஜனவரி மாத ராசிப்பலன்


2019 - ஜனவரி மாத ராசிப்பலன்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


செவ்




திருக்கணித கிரக நிலை

ராகு
கேது 

சனி சூரிய
குரு புதன்
  சுக்கி


கிரக   மாற்றம்
01-1-2019 தனுசில் புதன் காலை 09.50 மணிக்கு
01-1-2019 விருச்சிகத்தில் சுக்கிரன் இரவு 08.43 மணிக்கு
14-1-2019 மகரத்தில் சூரியன் இரவு 07.51 மணிக்கு
20-1-2019 மகரத்தில் புதன் இரவு 09.06 மணிக்கு
29-1-2019 தனுசில் சுக்கிரன் இரவு 11.28 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதாலும் தனகாரகன் குரு 8-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் முயற்சிகள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். மாத கோளான சூரியன் இம்மாதம் வரும் 14-ஆம் தேதி முதல் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை, நெருக்கடிகள் எல்லாம் குறைந்த மாத பிற்பாதியில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் வீண் செலவுகளை குறைப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அசையும், அசையா சொத்துகளால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம் - துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.
சந்திராஷ்டமம்  -  02-01-2019 அதிகாலை 03.23 மணி முதல் 04-01-2019 பகல் 12.54 மணி வரை மற்றும் 29-01-2019 காலை 08.59 மணி முதல் 31-01-2019 மாலை 06.40 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், குரு சேர்க்கைப் பெற்ற சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளியூர், வெளிநாட்டிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். சிறப்பான பணவரவால் பொருளாதார நிலை மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். மாத கோளான சூரியன் உங்கள் ராசிக்கு இம்மாதம் வரும் 14-ஆம் தேதி வரை 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.
பரிகாரம் -  சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
சந்திராஷ்டமம்  - 04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை மற்றும் 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதாலும் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்துடன் ஈடுபட்டு ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். உங்கள் ராசிக்கு குரு 6-ல் சஞ்சரிப்பதாலும், மாத கோளான சூரியன் வரும் 14-ஆம் தேதி முதல் 8-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எடுத்த வேலையை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள்.
பரிகாரம் - பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டமம்  - 07-01-2019 அதிகாலை 00.25 மணி முதல் 09-01-2019 பகல் 01.14 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே தனக்காரகன் எனப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவிற்கு பஞ்சமில்லாமல் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் சுப காரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள் உண்டாகும். போட்டிகள் பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் அனுகூலமாக செயல்படுவதால் நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்ப்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.
பரிகாரம் -  சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருந்து மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்தால் மன சங்கடங்கள் குறையும்.
சந்திராஷ்டமம்  - 09-01-2019 பகல் 01.14 மணி முதல் 12-01-2019 அதிகாலை 02.03 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 14-ஆம் தேதி முதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் உங்களுக்கு எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைத்து ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலன் கிடைக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் படிப்படியாக குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 4-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடனிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.
பரிகாரம் -  வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால் குருவின் அருள் பார்வை கிட்டும்.
சந்திராஷ்டமம்  - 12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் 4-ல் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு இம்மாதத்தில் கிடைக்கும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். குரு 3-லும், 7-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுப காரியங்கள் கைகூடும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன், பொருள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். எதிர்பார்த்த லாபங்களும் உண்டாகும். வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.
பரிகாரம் -  செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்  - 14-01-2019 பகல் 12.53 மணி முதல் 16-01-2019 இரவு 08.09 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், சனி, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தாராள தனவரவு உண்டாகும். தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேற கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன்கள் சற்றே குறையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மேலதிகாரிகளிடம் பேசும் போது மட்டும் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம் -  தினமும் விநாயகரை வழிபாடு செய்வதாலும், சதுர்த்தி விரதங்கள் இருப்பதாலும் காரிய சித்தி உண்டாகும்.
சந்திராஷ்டமம்  - 16-01-2019 இரவு 08.09 மணி முதல் 18-01-2019 இரவு 11.33 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவும் என்றாலும் மாத கோளான சூரியன் இம்மாதம் 14-ஆம் தேதி முதல் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மாத பிற்பாதியில் எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைத்து உங்களது நெருக்கடிகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமாக இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்ஷன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எந்தவொரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் நற்பலன்களை அடைய முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறுவார்கள்.
பரிகாரம் - வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வதாலும், குரு யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்  - 18-01-2019 இரவு 11.33 மணி முதல் 21-01-2019 அதிகாலை 00.05 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, சூரியன், 4-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாகவும் கவனத்துடனும் இருக்க வேண்டிய மாதமாகும். முடிந்த வரை முன்கோபத்தை குறைத்துக் கொள்வதும், உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்வதில் மந்தநிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் தாமத நிலை ஏற்படலாம். பொருளாதாரநிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகளும் பூர்த்தியாகும். குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் தெரிந்தவர்கள் கூட ஏமாற்றும் சூழ்நிலை உண்டாகலாம். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிட்டும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.
சந்திராஷ்டமம்  - 21-01-2019 அதிகாலை 00.05 மணி முதல் 22-01-2019 இரவு 11.32 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவால் உங்களது தேவைகள் பூர்த்தியாகும் அமைப்பு இம்மாதத்தில் உண்டு. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் போன்றவற்றை வாங்க முடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். உங்கள் ராசிக்கு சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒருவரையொருவர் அனுசரித்து சென்றால் ஒற்றுமை குறையாது. பெரியவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது மட்டும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்துடன் சேரும் அமைப்பு உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.
பரிகாரம் - சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்  -  22-01-2019 இரவு 11.32 மணி முதல் 24-01-2019 இரவு 11.50 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சூரியன், சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள். பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். செவ்வாய் 2-ல் இருப்பதால் முன்கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைகேற்படி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ளலாம். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி அடைவார்கள்.
பரிகாரம் -  முருக வழிபாடு செய்வதாலும், சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் அனைத்து துயரங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டமம்  - 24-01-2019 இரவு 11.50 மணி முதல் 27-01-2019 அதிகாலை 02.39 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உங்கள் ராசிக்கு 11-ல் இம்மாதம் மாத கோளான சூரியன் 14-ஆம் தேதி முதல் சஞ்சரிக்க இருப்பதாலும் ஏற்றமான பலன்களை அடைவீர்கள். மாத பிற்பாதியில் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப் பெற்று இதுவரை இருந்த பிரச்சினைகள் நெருக்கடிகள் யாவும் படிப்படியாக குறையும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். தொழில் விருத்திக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். ஒரு சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிட்டும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பரிகாரம் -  ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்  - 30-12-2018 இரவு 08.19 மணி முதல் 02-01-2019 அதிகாலை 03.23 மணி வரை மற்றும் 27-01-2019 அதிகாலை 02.39 மணி முதல் 29-01-2019 காலை 08.59 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

02.01.2019 மார்கழி 18 ஆம் தேதி புதன்கிழமை துவாதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை திருக்கணிதம்

03.01.2019 மார்கழி 19 ஆம் தேதி வியாழக்கிழமை திரியோதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

13.01.2019 மார்கழி 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.15 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

23.01.2019 தை 09 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை

27.01.2019 தை 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

30.01.2019 தை 16 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

No comments: