Wednesday, December 26, 2018

புத்தாண்டு பலன் - 2019 கும்பம்


புத்தாண்டு பலன் - 2019 கும்பம் 
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

கும்பம்  அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, எதிலும் ஆலோசித்து செயல்படுபவராகவும், பிறர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் விளங்கும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தன லாபாதிபதியான குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு தொழில் ரீதியாக கடுமையான நெருக்கடியினை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் உங்கள் ராசியாதிபதி சனிபகவான் லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். கூட்டாளிகளால் சில விரயங்கள் உண்டானாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். போட்டிகளால் வர வேண்டிய வாய்ப்புகள் சற்று தாமதப்படும். வரும் 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது 11-ஆம் வீட்டில் சனி சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பது நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத திடீர் தன வரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் சில நேரங்களில் மனஅமைதி குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சிறிது ஆறுதல் தரக்கூடிய சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மற்றவர்களுக்கு பொருளுதவி செய்வது, கொடுக்கல்- வாங்கலில் வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றினை சிறிது காலத்திற்கு தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, உயரதிகாரிகளிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது போன்றவற்றால் பணியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். இந்த வருட இறுதியில் 05.11.2019-ல் குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாவது மிகவும் சிறப்பான அமைப்பாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் நலனில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். ஜல தொடர்பான பாதிப்புகளும் உஷ்ண தொடர்பான பாதிப்புகளும் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த வீண் செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உடல் சோர்வு உண்டாகும் என்றாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும்.
குடும்பம் பொருளாதாரநிலை
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத திடீர் உதவிகள் கிட்டும். புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு அமையும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சமாளிக்க முடியாமல் திண்டாட நேரிடும். எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியிருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். விடுப்பு எடுக்க முடியாதபடி கெடுபிடிகள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். 
தொழில் வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும் போட்டிகளும் அதிகரிக்கும். தொழிலாளர்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். நம்பியவர்கள் மூலம் எதிர்பாராத உதவி கிடைக்கும். பெரிய முதலீடுகளில் ஆரம்பிக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த வங்கி கடன்கள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.
கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறைகளில் சுமாரான லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல்கள் உண்டாகும். நம்பியவர்களே துரோகம் செய்ய கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியாது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும்.
அரசியல்
அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்ள நிறைய பாடுபட வேண்டியிருந்தாலும் மக்களின் ஆதரவு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் காரியங்களை ஒழுங்காக செய்து முடிக்க சற்று தாமதநிலை உண்டாகும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும். இதனால் பொருளாதார நிலையில் சங்கடங்கள் உண்டாகும். மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது நல்லது.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். நெல் முதல் தானியங்கள் வரை. காய் முதல் பழ வகைகள் வரை சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருக்கு ஏற்ற விலையை பெற முடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத தன சேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி சுபிட்சமும் யாவும் சிறப்படையும்.
கலைஞர்கள்
கலைஞர்களுக்கு தொழில் ரீதியாக அதிக போட்டி பொறாமைகள் நிலவினாலும் வரவேண்டிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளியூர், வெளிநாட்டு பயணம் அதிக அலைச்சலையும் விரயத்தையும் ஏற்படுத்தும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் சில தடைகளுக்குப் பின் வந்து சேரும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர கார், பங்களா போன்றவற்றை வாங்க முடியும்.
பெண்கள்
குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணவரவுகளும் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும்.
மாணவ- மாணவியர்
முயன்று படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் நடந்து கொள்வது உத்தமம். உல்லாச பயணங்களால் ஓரளவு மகிழ்ச்சி உண்டாகும்.

ஜனவரி
ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதும், மாதமுற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதில் தடைகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 24-01-2019 இரவு 11.50 மணி முதல் 27-01-2019 அதிகாலை 02.39 மணி வரை.
பிப்ரவரி
இம்மாதம் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதாலும் 5-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் நினைத்த காரியங்களை நிறைவேற்றி விட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப்பலனை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 21-02-2019 காலை 10.23 மணி முதல் 23-02-2019 பகல் 11.27 மணி வரை.
மார்ச்
ராசிக்கு 3-ல் செவ்வாய் 11-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 7-ஆம் தேதி முதல் கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கைகள் அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். குருவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 20-03-2019 இரவு 09.36 மணி முதல் 22-03-2019 இரவு 10.02 மணி வரை.
ஏப்ரல்
இம்மாதம் ராசிக்கு 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 17-04-2019 காலை 07.15 மணி முதல் 19-04-2019 காலை 08.25 மணி வரை.
மே
ராசிக்கு 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்வதாலும் பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமதநிலை உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபமும் எதிர்பார்த்த வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 14-05-2019 பகல் 02.30 மணி முதல் 16-05-2019 மாலை 04.58 மணி வரை.
ஜுன்
இம்மாதம் புதன் 4,5-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும் 11-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதாலும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.
சந்திராஷ்டமம் - 10-06-2019 இரவு 08.00 மணி முதல் 12-06-2019 இரவு 11.20 மணி வரை.
ஜுலை
ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாவதால் சிறிது மருத்துவ செலவு ஏற்படும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 08-07-2019 அதிகாலை 01.45 மணி முதல் 10-07-2019 அதிகாலை 04.45 மணி வரை.
ஆகஸ்ட்
ராசிக்கு 6-ல் செவ்வாய், சூரியன், 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 04-08-2019 காலை 09.30 மணி முதல் 06-08-2019 பகல் 11.00 மணி வரை மற்றும் 31-08-2019 இரவு 07.20 மணி முதல் 02-09-2019 இரவு 07.25 மணி வரை.
செப்டம்பர்
உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 11-ல் சனி, கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். தடைபட்ட திருமண சுபகாரிய முயற்சிகளில் நற்பலன் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 28-09-2019 காலை 06.20 மணி முதல் 30-09-2019 அதிகாலை 05.45 மணி வரை.
அக்டோபர்
ராசிக்கு 9-ல் புதன், 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 25-10-2019 மாலை 04.20 மணி முதல் 27-10-2019 மாலை 04.30 மணி வரை.
நவம்பர்
ஜென்ம ராசிக்கு 11-ல் சனி, கேது, 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 5-ஆம் தேதி முதல் குரு 11-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செய்ய முடியும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும், மகிழ்ச்சியும் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். சிவனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 22-11-2019 அதிகாலை 00.05 மணி முதல் 24-11-2019 அதிகாலை 01.45 மணி வரை.
டிசம்பர்
மாதகோளான சூரியன் 10,11-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் குரு, சனி, கேது சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளில் அனுகூலபலனை அடைய முடியும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். பகைமை பாராட்டியவர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். முருகனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 19-12-2019 அதிகாலை 05.40 மணி முதல் 21-12-2019 காலை 08.25 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,7,8
கிழமை - வெள்ளி, சனி
திசை - மேற்கு
நிறம் - வெள்ளை, நீலம்
கல் - நீலக்கல்,
தெய்வம் - ஐயப்பன்


No comments: