Thursday, January 10, 2019

வார ராசிப்பலன் -- ஜனவரி 13 முதல் 19 வரை


வார ராசிப்பலன் -- ஜனவரி 13 முதல் 19 வரை 
மார்கழி 29 முதல் தை 5 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

சந்தி செவ்




திருக்கணித கிரக நிலை
13.01.201
ராகு
கேது 

சூரிய சனி புதன்
குரு  சுக்கி



கிரக மாற்றம்
14--01-2019 மகர சூரியன் இரவு 07.51 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம்                  12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.
மேஷம்             14-01-2019 பகல் 12.53 மணி முதல் 16-01-2019 இரவு 08.09 மணி வரை.
ரிஷபம்              16-01-2019 இரவு 08.09 மணி முதல் 18-01-2019 இரவு 11.33 மணி வரை.
மிதுனம்            18-01-2019 இரவு 11.33 மணி முதல் 21-01-2019 அதிகாலை 00.05 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
13.01.2019 மார்கழி 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.15 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு புதன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் வரும் 14-ஆம் தேதி முதல் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு ஆரோக்கிய குறைவுகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்- மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உங்கள் ராசியதிபதி செவ்வாய் 12-ல் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது. திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். தொழில் வியாபார ரீதியாக உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தாமதமாக கிடைக்கும் என்றாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது நல்லது. அம்மன் வழிபாடு உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        14, 15, 16, 19.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், குரு சேர்க்கைப் பெற்று 7-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். வரும் 14-ஆம் தேதி முதல் 8-ல் சஞ்சரித்த சூரியன் 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று சாதகமான பலனை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் சற்று குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        13, 14, 17, 18.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7-ல் சனி சஞ்சரிப்பதும் வரும் 14-ஆம் தேதி முதல் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படக்கூடும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும்.  ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. சிவ வழிபாடு உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        13, 14, 15, 16, 19.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். பணம் பல வழிகளில் தேடி வரும். ஆடம்பர தேவைகள் கூட பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உங்கள் ராசிக்கு சூரியன், கேது 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். புத்திர வழியில் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        14, 15, 16, 17, 18.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் வரும் 14-ஆம் தேதி முதல் 6-ல் சஞ்சரிப்பதாலும் சுக்கிரன் 4-ல் புதன் 5-ல் சஞ்சரிப்பதாலும் தொழில் ரீதியாக பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தாராள தனவரவு உண்டாகி பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வீடு மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். செவ்வாய் 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மன அமைதியை அளிப்பதாக அமையும். கொடுக்கல்--- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        17, 18, 19.
சந்திராஷ்டமம் -         12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் 4-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலப் பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் உங்கள் ராசிக்கு குரு சாதகமற்று இருப்பதால் அகல கால் வைக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது. செய்யும் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். உடனிருப்பவர்களையும், உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. மாணவர்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் --       13, 19.
சந்திராஷ்டமம் -         14-01-2019 பகல் 12.53 மணி முதல் 16-01-2019 இரவு 08.09 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களது செயல்களால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லது பல நடக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறப்புக்கள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளாலும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பாலும் அபிவிருத்தி பெருகி முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். துர்கையம்மன் வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        13, 14, 15, 16.
சந்திராஷ்டமம் --        16-01-2019 இரவு 08.09 மணி முதல் 18-01-2019 இரவு 11.33 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், வரும் 14-ஆம் தேதி முதல் 3-ல் சூரியன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது, கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        15, 16, 17, 18.
சந்திராஷ்டமம் -         18-01-2019 இரவு 11.33 மணி முதல் 21-01-2019 அதிகாலை 00.05 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் 8-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வீண் விரயங்கள் உண்டாககூடும். வரும் 14-ஆம் தேதி முதல் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்ககூடும் என்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களையும், உற்றார், உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்றாலும் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையிடாமல் தம் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        17, 18, 19.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சுக்கிரன், குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பண வரவானது சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக சிந்தித்துச் செயல்பட்டால் தான் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். குடும்பத்தினரையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        13, 14, 19.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, லாப ஸ்தானத்தில் சனி, புதன் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகளும் விலகும். மாணவர்களிடமும் இருந்த மந்த நிலை நீங்கி படிப்பில் சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் ஈடுபட்டு நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். அம்மன் வழிபாடு நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        14, 15, 16.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பகவான் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதும் 14-ஆம் தேதி முதல் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் சிறப்பான பணவரவு, எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள், பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். அசையும் அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சனி பகவான் வழிபாடும், சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் --       13, 14, 17, 18.

No comments: