Saturday, January 26, 2019

வார ராசிப்பலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை


வார ராசிப்பலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை 
தை 6 முதல் 12 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


செவ்




திருக்கணித கிரக நிலை

ராகு
சூரிய புதன் கேது 

சனி
குரு  சுக்கி
சந்தி

கிரக மாற்றம்
29--01-2019 தனுசு சுக்கிரன் இரவு 11.28 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
துலாம்            27-01-2019 அதிகாலை 02.39 மணி முதல் 29-01-2019 காலை 08.59 மணி வரை.
விருச்சிகம்                29-01-2019 காலை 08.59 மணி முதல் 31-01-2019 மாலை 06.40 மணி வரை.
தனுசு               31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
27.01.2019 தை 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

30.01.2019 தை 16 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

01.02.2019 தை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதி பலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் ஒன்று சேரும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலை இருந்தாலும் அன்றாட பணிகளை செய்ய முடியும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28.
சந்திராஷ்டமம் -   29-01-2019 காலை 08.59 மணி முதல் 31-01-2019 மாலை 06.40 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்பு தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக நற்பலன்களை தரும் அமைப்பாகும். தொழில், வியாபார ரீதியாக மேன்மை, புதிய வாய்ப்புகளை அடையும் யோகம் உண்டாகும். இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான உறவு உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள். சனி பகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29, 30, 31.
சந்திராஷ்டமம் -   31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சூரியன், கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த விஷயத்திலும் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செவ்வாய் 10-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மன அமைதி குறையலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1, 2.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதாலும் தற்போது உள்ள சின்ன சின்ன பிரச்சினைகள் கூட குறைந்து சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள், உடன் பிறந்தவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். தாராள தனவரவால் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பூமி மனை வாங்கும் எண்ணங்களும் நிறைவேறும். மாணவர்கள் முயன்று படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், கேது சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை எளிதில் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் இருக்கும் தடைகள் விலகி ஏற்றங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும், பொழுது போக்குகளையும் தவிர்த்தால் படிப்பில் முன்னேற்ற அடையலாம். துர்கையம்மன் வழிபாடு மேற்கொண்டால் துயரங்கள் விலகும்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு தான் கற்றறிந்து இருந்தாலும் எந்தவித அகம் பாவமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். குரு 3-ல் சஞ்சரிப்பதால் முடிந்தவரை வீண் செலவுகளை தவிர்ப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலன் கிட்டும். அசையும் அசையா சொத்துக்களால் லாபம் உண்டாகும். கடன்கள் குறையும். எடுக்கும் காரியங்களில் சிறிய தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் எதிர்பார்க்கும் லாபங்களை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகத்தில் சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் பண்பு கொண்டவராகவும் விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சகல விதத்திலும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்தால் நற்பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 1, 2.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற வழியில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகச் சிறப்பு. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதும், கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவதும் நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு கூடினாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டால் செல்வ நிலை உயரும்.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனி நடப்பதாலும் 2-ல் சூரியன் 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவு தேவைகேற்றபடி இருந்தாலும் குரு 12-ல் இருப்பதால் பணவிஷயத்தில் நிதானமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் லாபம் குறையாது. கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் சற்று தாமதமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிமித்தமாக சிறு சிறு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படலாம். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 1, 2.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதும் 3-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் சுபிட்சமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்ழ்டழழழ். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். புத்திரர்கள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணங்களால் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போட்டிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். சிவ வழிபாடு மேன்மையை உண்டாக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29, 30, 31.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் 2-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது உழைப்பிற்கான பலனை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெற சற்றே எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் நிலவினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை அடைவதில் சிறு தடை தாமதங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு செய்வது சிறந்தது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1, 2.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தாராள தனவரவு, தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகள் நண்பர்களாக மாறுவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். அம்மன் வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2.
சந்திராஷ்டமம் -   27-01-2019 அதிகாலை 02.39 மணி முதல் 29-01-2019 காலை 08.59 மணி வரை.



No comments: