Thursday, March 7, 2019

வார ராசிப்பலன் - மார்ச் 10 முதல் 16 வரை


வார ராசிப்பலன் - மார்ச் 10 முதல் 16 வரை 
மாசி 26 முதல் பங்குனி 2 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

புதன்(வ)
சந்தி செவ்

ராகு
சூரிய
திருக்கணித கிரக நிலை
10.03.2019

  சுக்கி

சனி கேது
குரு
 


கிரக   மாற்றம்
15--03--2019 மீனத்தில் சூரியன் அதிகாலை 5.40 மணிக்கு
15--03--2019 கும்பத்தில் புதன் காலை 5.59 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம்             10-03-2019 அதிகாலை 01.19 மணி முதல் 12-03-2019 காலை 10.24 மணி வரை.
ரிஷபம்              12-03-2019 காலை 10.24 மணி முதல் 14-03-2019 மாலை 04.58 மணி வரை.
மிதுனம்            14-03-2019 மாலை 04.58 மணி முதல் 16-03-2019 இரவு 08.38 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
10.03.2019 மாசி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்தசி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

13.03.2019 மாசி 29 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு 8-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை, கை கால் அசதி, சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். பயணங்களால் தேவையற்ற அலைசல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்           10, 11, 12, 15, 16.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-லும் சூரியன் 10-லும் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் உண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். சனிப்ரீதியாக விநாயகர் வழிபாடும் ஆஞ்சநேயர் வழிபாடும் செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்           12, 13, 14.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றாலும், சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து முன்னேற்றங்களை அடைவீர்கள் என்றாலும் ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். பண வரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில இடையூறுகள் ஏற்படும் என்பதால் சற்று கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்ற பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். லட்சுமி வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள்           10, 11, 12, 15, 16.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். கடந்த கால பிரச்சினைகள் ஓரளவு குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். செவ்வாய் 10-ல் இருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டு. நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். பொன் பொருள் சேரும். கடன்கள் சற்று குறையும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்           10, 11, 12, 13, 14.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் கிடைத்து உங்களது சங்கடங்கள் மறையும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளித்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன்கோபத்தைக் குறைப்பது, மற்றவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். சிவ மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்           13, 14, 15, 16.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்           14, 15, 16.
சந்திராஷ்டமம் -         10-03-2019 அதிகாலை 01.19 மணி முதல் 12-03-2019 காலை 10.24 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதும் 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நல்ல பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம். முருக வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்           10, 11.
சந்திராஷ்டமம் -         12-03-2019 காலை 10.24 மணி முதல் 14-03-2019 மாலை 04.58 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய தாமதநிலை ஏற்படும். பண வரவுகள் தேவைகேற்ப அமைந்து குடும்ப தேவைகள் நிறைவேறும். செவ்வாய் 6-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எந்தவித நெருக்கடியும் சமாளிக்கும் பலம் உண்டாகும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்களுக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். சிவ வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்           10, 11, 12, 13.
சந்திராஷ்டமம் -         14-03-2019 மாலை 04.58 மணி முதல் 16-03-2019 இரவு 08.38 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, கேது, 12-ல் குரு சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். மாத கோளான சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் நல்லது நடக்கும். வீண் செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை குறையாது. முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிக்க முடியும். வேலைபளு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். முருக வழிபாட்டையும் விநாயகர் வழிபாட்டையும் மேற்கொண்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்           13, 14, 15, 16.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவிற்கு பஞ்சம் இருக்காது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள்           15, 16.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் வெற்றிகளை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த சிறுசிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான உறவு உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடும் விஷ்ணு வழிபாடும் செய்து வந்தால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்           10, 11, 12.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு 9-லும், சுக்கிரன் 11-லும் சஞ்சரிப்பதால் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். தாராள தனவரவுகளால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமாக செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14.


No comments: