Wednesday, March 13, 2019

வார ராசிப்பலன் - மார்ச் 17 முதல் 23 வரை


வார ராசிப்பலன் - மார்ச் 17 முதல் 23 வரை 
பங்குனி 3 முதல் 9 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

சூரிய
செவ்

ராகு
புதன்(வ)
திருக்கணித கிரக நிலை

சந்தி
  சுக்கி

சனி கேது
குரு
 


கிரக   மாற்றம்
22--03--2019 கும்பத்தில் சுக்கிரன் அதிகாலை 3.44 மணிக்கு
22--03--2019 ரிஷபத்தில் செவ்வாய் மாலை 3.05 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கடகம்       16-03-2019 இரவு 08.38 மணி முதல் 18-03-2019 இரவு 09.45 மணி வரை.
சிம்மம்      18-03-2019 இரவு 09.45 மணி முதல் 20-03-2019 இரவு 09.36 மணி வரை.
கன்னி      20-03-2019 இரவு 09.36 மணி முதல் 22-03-2019 இரவு 10.02 மணி வரை.
துலாம்      22-03-2019 இரவு 10.02 மணி முதல் 25-03-2019 அதிகாலை 01.08 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
17.03.2019 பங்குனி 03 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

22.03.2019 பங்குனி 08 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியை திதி ஹஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி, கேது 9-ல் இருப்பதால் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது, பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 9-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் ஏற்றமிகுந்த பலன்களை எளிதில் அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் படிப்பார்கள். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  17, 18, 23.   

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் 10-லும், செவ்வாய் 11-லும் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப காரியங்கள் சிறு தடைக்கு பின் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் நிறைவேறும்.  உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். துர்கையம்மன் வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்தால் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  19, 20.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, கேது, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்கு பெயர் புகழ் அனைத்தும் கூடக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். பொன், பொருள், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான பதவி உயர்வுகளையும் அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். துர்கையம்மனை வழிபடுவதும், ஏகாதசி அன்று பெருமாள் வழிபாடு மேற்கொள்வதும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -  17, 18, 21, 22.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் 4-ல் குரு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இ-ருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டி உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தடை தாமதத்திற்குப் பின் கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை குறைத்து கொள்வது நல்லது. சனி மற்றும் சிவ வழிபாட்டை மேற்கொள்வது, பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  19, 20, 23.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்--- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். புத்திரர்களால் மன நிம்மதி குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குரு 3-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானை வழிபடுவது மற்றும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  17, 18, 21, 22.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சனைகள் யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. செவ்வாய் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெற முடியும். முன் கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். வருகின்ற பங்குனி உத்திரம் அன்று முருக கடவுளை வணங்கினால் சகல நன்மைகளும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  17, 18, 19, 20, 23.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகளால் லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மட்டும் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். சனி 2-ல் இருப்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது, குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதன் மூலம் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும் கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  19, 20, 21, 22.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். ஜென்ம ராசியில் சனி, கேது, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படும். பணம் வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். குரு 12-ல் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் கல்வியில் உயர்வடைய முடியும். சிவ வழிபாடு செய்வது பிரதோஷ காலங்களில் நந்தி வழிபாடு மேற்கொள்வதும் மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  21, 22, 23.
சந்திராஷ்டமம் -   16-03-2019 இரவு 08.38 மணி முதல் 18-03-2019 இரவு 09.45 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் நிலையில் சோர்வு, மந்தநிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்று குறையும்.  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி விளையாட்டு துறைகளிலும் உயர்வடைவார்கள். விநாயக பெருமானையும் முருக கடவுளையும் வணங்கி வழிபட்டால் காரிய தடைகள் விலகும்.
வெற்றி தரும் நாட்கள் -  17, 18, 23.
சந்திராஷ்டமம் -   18-03-2019 இரவு 09.45 மணி முதல் 20-03-2019 இரவு 09.36 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை பெறுவீர்கள். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அனைத்தையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று இடையூறுகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாட்டையும் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  17, 18, 19, 20.
சந்திராஷ்டமம் -   20-03-2019 இரவு 09.36 மணி முதல் 22-03-2019 இரவு 10.02 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுத்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் போது கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது, சனிக்கவசங்கள் படிப்பது நன்மையை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -  19, 20, 21, 22.
சந்திராஷ்டமம் - 22-03-2019 இரவு 10.02 மணி முதல் 25-03-2019 அதிகாலை 01.08 மணி வரை.

No comments: