Saturday, March 2, 2019

வார ராசிப்பலன் - மார்ச் 3 முதல் 9 வரை



வார ராசிப்பலன் - மார்ச் 3 முதல் 9 வரை 
மாசி 19 முதல் 25 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


புதன்
செவ்


சூரிய
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது  சந்தி  சுக்கி

சனி
குரு



கிரக மாற்றம்
05---03--2019 புதன் வக்ர ஆரம்பம் இரவு 11.48 மணிக்கு
07--03--2019 மிதுனத்தில் ராகு, தனுசில் கேது அதிகாலை 5.27 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம்     02-03-2019 பகல் 12.40 மணி முதல் 05-03-2019 அதிகாலை 01.45 மணி வரை.
கும்பம்    05-03-2019 அதிகாலை 01.45 மணி முதல் 07-03-2019 பகல் 02.15 மணி வரை.
மீனம்           07-03-2019 பகல் 02.15 மணி முதல் 10-03-2019 அதிகாலை 01.19 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
03.03.2019 மாசி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

04.03.2019 மாசி 20 ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். இதுவரை இருந்த பிரச்சினைகள் எல்லாம் குறைந்து அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5, 6, 7.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 10-ல் சூரியன், 11-ல் புதன் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும்.  திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கணவன்-- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெறுவார்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். சனி பகவான் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7, 8, 9.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், 10-ல் புதன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.  சொந்த தொழில் செய்பவர்கள் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபத்தை அடைவார்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுப காரியங்கள் சிறு தடை தாமதத்திற்கு பின் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியில் ஆதாயங்கள் கிட்டும். மகாலட்சுமி வழிபாடு செய்து வந்தால் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9.
சந்திராஷ்டமம் - 02-03-2019 பகல் 12.40 மணி முதல் 05-03-2019 அதிகாலை 01.45 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 6-ல் சனி, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். சிவ வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 3, 4.
சந்திராஷ்டமம் - 05-03-2019 அதிகாலை 01.45 மணி முதல் 07-03-2019 பகல் 02.15 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். உங்கள் ராசிக்கு 4-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சற்று இறக்கமாகவே இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது, பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிவ மற்றும் விநாயகர் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5, 6,
சந்திராஷ்டமம் - 07-03-2019 பகல் 02.15 மணி முதல் 10-03-2019 அதிகாலை 01.19 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரம் செய்வர்கள் மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி போன்ற யாவும் சிறப்பாக அமையும். சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். செவ்வாய் 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7, 8, 9.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சுபிட்சத்தை தரும் அமைப்பாகும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடையும் யோகம் உண்டு. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டிகள் விலகி சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பும் அமையும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக அமைவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் திரும்ப கிடைக்கும். அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். முருக வழிபாடு, விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -    7, 8, 9.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் குரு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பது நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். குடும்பத்தில் சிறு சிறு நிம்மதி குறைவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடனிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -3, 4.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் 4-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குரு 12-ல் இருப்பதால் பணவிஷயத்தில் மட்டும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையே காணப்படும் என்றாலும் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு தேவையற்ற பொழுது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -    5, 6, 7.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வீண் வாக்குவாதங்கள் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி எதையும் எதிர்கொள்ளகூடிய பலம் உண்டாகும். குடும்பத்தினரிடமும், உற்றார் உறவினர்களிமும் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும். பிரதோஷ தினத்தில் சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் -3, 4, 7, 8, 9.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப் பலனை பெறுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சிவ பெருமானையும் சனி பகவானையும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை உங்களுக்கு தரும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் கொண்டால் அவர்கள் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -     3, 4, 7, 8, 9.

No comments: