Thursday, March 28, 2019

Today rasi palan - 29.03.2019


Today rasi palan - 29.03.2019
இன்றைய ராசிப்பலன் -  29.03.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
29-03-2019, பங்குனி 15, வெள்ளிக்கிழமை, நவமி திதி இரவு 12.48 வரை பின்பு தேய்பிறை தசமி. பூராடம் நட்சத்திரம் பகல் 12.40 வரை பின்பு உத்திராடம். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 12.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. கரி நாள். சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  

சூரிய

செவ்
ராகு
புதன் சுக்கி
திருக்கணித கிரக நிலை
29.03.2019

 

சனி சந்தி கேது
குரு
 


இன்றைய ராசிப்பலன் -  29.03.2019
மேஷம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை குறைக்க முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
மிதுனம்
இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
துலாம்
இன்று பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்றே கடின உழைப்பு தேவை. பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். புத்திர வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.
தனுசு
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.
மகரம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். எதிலும் உணர்ச்சிவசப் படாமல் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப் பலனை அடையலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.
மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

No comments: